search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்குப்போட்டு தற்கொலை
    X

    தூக்குப்போட்டு தற்கொலை

    • ஈரோடு அருகே வாங்கி கடனை செலுத்தமுடியாததால் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய சேமூர், ராம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (37). இவரது மனைவி கனகசுந்தரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சரவணன் தனிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சரவணனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு குடல் இறக்கம் ஏற்பட்டு மருத்துவச் செலவுக்காக கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் சரவணனுக்கு சரிவர வேலை இல்லாததால் கடனை செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    மேலும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று மனைவியிடம் கூறி வந்துள்ளார். சரவணை அவரது மனைவியை சமாதானப்படுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்த சரவணன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு கொண்டார். அப்போது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவரது மகள் வீட்டிற்கு வந்த போது தந்தை தூக்கு போட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே இது குறித்து அக்கம்பக்கத்தில் தகவல் தெரிவித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×