search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பூர் அருகே மகனுக்கு  பெண்   கிடைக்காததால் தாய்  தற்கொலை
    X

    வேப்பூர் அருகே மகனுக்கு பெண் கிடைக்காததால் தாய் தற்கொலை

    • வேப்பூர் அருகே மகனுக்கு பெண் கிடைக்காததால் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த சில ஆண்டுகளாக தனது மகனின் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். மகனுக்கு 30 வயதாகியும் திருமணத்திற்கு இதுவரை பெண் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே செல்லியம்பாளையம் கிராமம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வள்ளியப்பன். இவரது மனைவி நாச்சியம்மை,( வயது52). இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மகனின் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். மகனுக்கு 30 வயதாகியும் திருமணத்திற்கு இதுவரை பெண் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த நாச்சியம்மை வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டின் முதல் தளத்தின் மேற்கூரையில் தனது புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கணவர் வள்ளியப்பன் வேப்பூர் பஸ் நிலையம் அருகேயுள்ள தனது மெடிக்கலில் இருந்தவர் தனது மனைவிக்கு பலமுறை போன் செய்தும் அவர் போன் எடுக்காததால், வீட்டிற்கு வந்த வள்ளியப்பன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    Next Story
    ×