search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியுடன் தகராறு வடமாநில தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை
    X

    மனைவியுடன் தகராறு வடமாநில தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை

    • பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பட்டியில் வடமாநில தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சில்பி தேவி என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மகேஷ். இவரது கோழிப்பண்ணையில் பீகார் மாநிலம் செரியானா தாலுகாவைச் சேர்ந்த டுன்டுன்குமார் (வயது 20) என்பவர் கூலி வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும், சில்பி தேவி என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சில்பிதேவியை ஊரிலேயே விட்டு விட்டு டுன்டுன்குமார் மட்டும் தனியாக வேலைபார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று கோழிப்பண்ணை அருகே உள்ள வேப்பமரத்தில் டுன்டுன்குமார் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக அப்பகுதியில் மாடு மேய்க்க வந்தவர்கள் பரமத்தி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இறந்த டுன்டுன்குமார், கடந்த 27-ம் தேதி இரவு தனது மனைவியுடன் செல்போனில் பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×