search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளூர் ரெயில் நிலையம்"

    • 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் முக்கிய ரெயில் நிலையமாக உள்ளது.

    சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணிக்கு செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் காட்பாடி, திருப்பதி, மும்பை, பெங்களூர் விரைவு ரெயில்கள் என தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரெயில்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய நகரமாக உள்ள திருவள்ளூரில் சிறப்பு பெற்ற வீரராகவப் பெருமாள் கோவில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து அதிநவீன ரெயில் நிலையங்களாக மாற்ற தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

    இதில்முதல் கட்டமாக 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னை சென்ட்ரல்–அரக்கோணம் கோட்டத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையம் ரூ.28.82 கோடியில் மறு சீரமைப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இதில் புதிய ரெயில் நிலையக் கட்டிடம், நடை மேடைகளின் தரை மற்றும் கூரை சீரமைப்பு, ரெயில் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் சீரமைக்கப்படும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் அனைத்தையும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் லிப்ட் வசதி, 12 மீட்டர் அகலம்கொண்ட பயணிகள் நடைமேம்பாலம் வருகிறது. மேலும் நடைமேடைகளிலும் பயணிகள் நடமாடும் இடங்களிலும் பயனுள்ள தகவல் அளிக்க திரைகள், கண்காணிப்பு கேமரா அமைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

    இதற்கிடையே சீரமைப்பு பணிகாரணமாக ரெயில் நிலைய முகப்பு வழியாக பயணிகளை அனுமதிக்க வில்லை. சுரங்கப்பாதை வழியாக சென்று வருகிறார்கள். மேலும் பயணச் சீட்டு வழங்கும் இடம் நடை மேடை 1-ல் உள்ளது. அங்கும் பணிகள் நடை பெற்று வருவதால் பயண சீட்டை வாங்க பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ரெயில்நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ரெயில் நிலையத்தில் ரூ.28.82 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
    • நடைமேடை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன.

    திருவள்ளூர்:

    சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை அம்ரித் திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இதில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரூ.28.82 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. நடைமேடை கூரைகளை மேம்படுத்துதல், கூடுதலாக நடைமேடை அமைத்தல், வாகனங்கள் நிறுத்தும் இடம், ரூ.10.13 கோடியில் 3 லிப்ட் மற்றும் நகரும்படிக்கட்டுகளுடன் கூடிய புதிய 12 மீட்டர் நீளம் கொண்ட நடைமேம்பாலம், மேம்படுத்தப்பட்ட தகவல் தரும் திரை, புதிய சி.சி.டி. கேமராக்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் பாதைகளை சீரமைக்க தோண்டப்பட்டது.

    இதனால் நடைமேடை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. பணிகளை விரைந்து முடிக்காததால் முதலாவது நடைமேடையில் வந்து நிற்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் சென்று ஏறவும், இறங்கவும மற்றும் நடந்து செல்லவும் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். சென்னை-திருப்பதி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து நிற்கும்போது பயணிகள் பெட்டிகளுடன் ஏறி, இறங்க கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மேலும் டிக்கெட் கவுண்டர் இடம் முதல் நடைமேடையில் உள்ளதால் கற்குவியலுக்கு நடுவே பயணிகள் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நடைமேடை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கழுத்து அறுக்கப்பட்டதில் அமுதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • ரகளையில் ஈடுபட்டு அமுதாவின் கழுத்தை அறுத்து தப்பிய வாலிபர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை சேர்ந்தவர் அமுதா(43). பூவியாபாரி. இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், பொம்மை நாயக்கன்பாளையம் ஆகும். இவர் திருவள்ளூர் ரெயில் நிலையம் மற்றும் ரெயிலில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அமுதா பூ வியாபாரம் முடித்து வீட்டு திரும்பினார். அப்போது திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உறவுக்காரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் நடைமேடை 4-ல் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென அமுதாவிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை அமுதா கண்டித்து தன்னிடம் பூ அறுக்க வைத்திருந்த கத்தியை காட்டி எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் திடீரென அந்த கத்தியை பறித்து அமுதாவின் கழுத்தை அறுத்தார். மேலும் அவரது கை, மற்றும் இடுப்பில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கழுத்து அறுக்கப்பட்டதில் அமுதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ரகளையில் ஈடுபட்டு அமுதாவின் கழுத்தை அறுத்து தப்பிய வாலிபர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவரை பிடிக்க போலுசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் நிலையத்தில் பெண்பூவியாபாரியின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    • பஸ் வழித்தடத்தை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கும், திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு தினமும் 180 உள்ளூர் மின்சார ரெயில்கள், 22 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து செல்கின்றன. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் வேலைகள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்ல ரெயில்களையே நம்பி உள்ளனர்.

    தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு செல்ல ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களையே பயன்படுத்த வேண்டி உள்ளது. திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கும், திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் ஆட்டோக்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    ரெயில் நிலையத்துக்கு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு செய்ய 2 பஸ்களில் பயணம் செல்ல வேண்டி உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கும், பின்னர் அங்கிருந்து பஸ் நிலையத்துக்கும் தனித்தனி பஸ்களில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

    மேலும் செங்குன்றம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து டவுன் பஸ்களும் திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கே செல்கின்றன. இதனால் அங்கிருந்து ரெயில் நிலையம் செல்ல மேலும் 2 பஸ்களுக்கு மாற வேண்டி உள்ளது. எனவே இந்த அனைத்து டவுன் பஸ்களையும் திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு நேரடியாக இயக்கினால் பயணிகள் சந்திக்கும் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    மேலும் ரெயில் நிலையத்தின் அருகே உள்ள பஸ் நிலையத்தையும் சிறப்பாக பயன்படுத்த முடியும். திருத்தணி, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரியில் இருந்து வரும் புறநகர் பஸ்களை கூட திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு பதிலாக திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு இ யக்கலாம் என்று பயணிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

    எனவே திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்குவார்களா என்று பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    இதற்கிடையே இந்த பஸ் வழித்தடத்தை மாற்றுவதற்கான சாத்தியக்கூ றுகளை ஆராய்வதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் ரெயில் நிலையம் டவுன் பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்களை திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு இயக்கும் பட்சத்தில் அங்கு போக்குவரத்து நெரிசல் மோசமடையும் என்றும் அதிகாரிகள் மற்றொருபுறம் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    ×