search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் நிலைய நடைமேடையில் பெயர்ந்து கிடக்கும் கற்களால் பயணிகள் அவதி
    X

    ரெயில் நிலைய நடைமேடையில் பெயர்ந்து கிடக்கும் கற்களால் பயணிகள் அவதி

    • ரெயில் நிலையத்தில் ரூ.28.82 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
    • நடைமேடை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன.

    திருவள்ளூர்:

    சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை அம்ரித் திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இதில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரூ.28.82 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. நடைமேடை கூரைகளை மேம்படுத்துதல், கூடுதலாக நடைமேடை அமைத்தல், வாகனங்கள் நிறுத்தும் இடம், ரூ.10.13 கோடியில் 3 லிப்ட் மற்றும் நகரும்படிக்கட்டுகளுடன் கூடிய புதிய 12 மீட்டர் நீளம் கொண்ட நடைமேம்பாலம், மேம்படுத்தப்பட்ட தகவல் தரும் திரை, புதிய சி.சி.டி. கேமராக்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் பாதைகளை சீரமைக்க தோண்டப்பட்டது.

    இதனால் நடைமேடை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. பணிகளை விரைந்து முடிக்காததால் முதலாவது நடைமேடையில் வந்து நிற்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் சென்று ஏறவும், இறங்கவும மற்றும் நடந்து செல்லவும் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். சென்னை-திருப்பதி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து நிற்கும்போது பயணிகள் பெட்டிகளுடன் ஏறி, இறங்க கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மேலும் டிக்கெட் கவுண்டர் இடம் முதல் நடைமேடையில் உள்ளதால் கற்குவியலுக்கு நடுவே பயணிகள் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நடைமேடை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×