search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்குவார்களா?- பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்பு
    X

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்குவார்களா?- பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்பு

    • பஸ் வழித்தடத்தை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கும், திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு தினமும் 180 உள்ளூர் மின்சார ரெயில்கள், 22 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து செல்கின்றன. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் வேலைகள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்ல ரெயில்களையே நம்பி உள்ளனர்.

    தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு செல்ல ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களையே பயன்படுத்த வேண்டி உள்ளது. திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கும், திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் ஆட்டோக்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    ரெயில் நிலையத்துக்கு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு செய்ய 2 பஸ்களில் பயணம் செல்ல வேண்டி உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கும், பின்னர் அங்கிருந்து பஸ் நிலையத்துக்கும் தனித்தனி பஸ்களில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

    மேலும் செங்குன்றம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து டவுன் பஸ்களும் திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கே செல்கின்றன. இதனால் அங்கிருந்து ரெயில் நிலையம் செல்ல மேலும் 2 பஸ்களுக்கு மாற வேண்டி உள்ளது. எனவே இந்த அனைத்து டவுன் பஸ்களையும் திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு நேரடியாக இயக்கினால் பயணிகள் சந்திக்கும் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    மேலும் ரெயில் நிலையத்தின் அருகே உள்ள பஸ் நிலையத்தையும் சிறப்பாக பயன்படுத்த முடியும். திருத்தணி, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரியில் இருந்து வரும் புறநகர் பஸ்களை கூட திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு பதிலாக திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு இ யக்கலாம் என்று பயணிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

    எனவே திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்குவார்களா என்று பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    இதற்கிடையே இந்த பஸ் வழித்தடத்தை மாற்றுவதற்கான சாத்தியக்கூ றுகளை ஆராய்வதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் ரெயில் நிலையம் டவுன் பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்களை திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு இயக்கும் பட்சத்தில் அங்கு போக்குவரத்து நெரிசல் மோசமடையும் என்றும் அதிகாரிகள் மற்றொருபுறம் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    Next Story
    ×