search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண பத்திரிகை"

    • தெலுங்கானா சங்கரெட்டியை சேர்ந்த ஒருவர் அவரது மகன் திருமணத்திற்கு பத்திரிகை அடித்துள்ளார்.
    • நரேந்திர மோடி ஜிக்கு வாக்களித்தால் அதுவே இந்த திருமணத்திற்கான பரிசு என்று எழுதப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு பா.ஜ.க. 17 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. மேலும் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என கூறி திருமண பத்திரிகை வினியோகம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    தெலுங்கானா சங்கரெட்டியை சேர்ந்த ஒருவர் அவரது மகன் திருமணத்திற்கு பத்திரிகை அடித்துள்ளார்.

    அந்த அழைப்புதழில் புதுமண தம்பதிகளுக்கு பரிசு பொருட்கள் எடுத்து வர வேண்டாம். மொய் எழுத வேண்டாம். அதற்கு பதிலாக தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள். நீங்கள் நரேந்திர மோடி ஜிக்கு வாக்களித்தால் அதுவே இந்த திருமணத்திற்கான பரிசு என்று எழுதப்பட்டுள்ளது. பத்திரிகையின் அட்டைப் பகுதியில் மணமகன் மணமகள் பெயருக்கு கீழ் பிரதமர் மோடி படத்துடன் இந்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • குருவித்துறையில் திருமண பத்திரிகை வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
    • இதில் ஆர். பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    சோழவந்தான்

    எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா பிறந்தநாள், அ.தி.மு.க. 51-வதுஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, அம்மா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 ஜோடிகளுக்கு திருமணம் வருகிற பிப்ரவரி 23-ந் தேதியன்று டி.குன்னத்தூரில் நடை பெறுகிறது.

    இதனை முன்னாள் முதல்-அமைச்சர், எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார். இதற்கான திருமண அழைப்பிதழை மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், ஜெனகை நாராயண பெருமாள் கோவில், குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு, திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் சட்ட மன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், பாலகிருஷ்ணன், பேரூர் கவுன்சிலர்கள், நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×