என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பரிசு, மொய் கொண்டு வராதீர்கள்- மோடிக்கு ஓட்டு போடுங்கள் என திருமண பத்திரிகை
- தெலுங்கானா சங்கரெட்டியை சேர்ந்த ஒருவர் அவரது மகன் திருமணத்திற்கு பத்திரிகை அடித்துள்ளார்.
- நரேந்திர மோடி ஜிக்கு வாக்களித்தால் அதுவே இந்த திருமணத்திற்கான பரிசு என்று எழுதப்பட்டுள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு பா.ஜ.க. 17 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. மேலும் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என கூறி திருமண பத்திரிகை வினியோகம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா சங்கரெட்டியை சேர்ந்த ஒருவர் அவரது மகன் திருமணத்திற்கு பத்திரிகை அடித்துள்ளார்.
அந்த அழைப்புதழில் புதுமண தம்பதிகளுக்கு பரிசு பொருட்கள் எடுத்து வர வேண்டாம். மொய் எழுத வேண்டாம். அதற்கு பதிலாக தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள். நீங்கள் நரேந்திர மோடி ஜிக்கு வாக்களித்தால் அதுவே இந்த திருமணத்திற்கான பரிசு என்று எழுதப்பட்டுள்ளது. பத்திரிகையின் அட்டைப் பகுதியில் மணமகன் மணமகள் பெயருக்கு கீழ் பிரதமர் மோடி படத்துடன் இந்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்