search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி ஏழுமலையான் கோவில்"

    • 3 நாள் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.
    • உற்சவர்கள் புறப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்கு திரும்பினர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வசந்தோற்சவம் நடந்து வந்தது. முதல் நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலில் இருந்து திருச்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு சென்று வசந்தோற்சவம் கண்டனர்.

    2-வது நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு சென்று வசந்தோற்சவம் கண்டனர்.

    கடைசி நாளான நேற்று முன்தினம் உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி, மலையப்பசாமி மற்றும் சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ருக்மணி, சத்தியபாமா ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் இருந்து புறப்பட்டு தனித்தனி திருச்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்தை அடைந்தனர்.

    அங்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான சாமிகள், தாயார்களை ஒரே மேடையில் வைத்து மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமண திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    வசந்தோற்சவம் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் புறப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்கு திரும்பினர். இதோடு 3 நாள் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரி கவுதமி, தலைமை செய்தி மற்றும் மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி டி.ரவி, கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அலுவலர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ரத சப்தமி பிரமோற்சவ விழா நாளை நடைபெறுகிறது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி எனும் மினி பிரமோற்சவ விழா நாளை நடைபெறுகிறது.

    ரதசப்தமி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம், 4 மாட வீதிகள் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    நாளை காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில், 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    அதன்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடைபெறுகிறது.

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்சம் வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலையான் வீதி உலா வருகிறார். 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரப வாகனத்தில் உலா வருகிறார்.

    ரதசப்தமி விழாவை காண இன்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர்.

    • மார்கழி மாதத்தில் 21 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடக்கும்.
    • இந்த ஆண்டும் ஆத்யாயன உற்சவம் நடந்து வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலகோற்சவம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உற்சவத்தை கண்டுகளித்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் 21 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடக்கும். அதன்படி இந்த ஆண்டும் ஆத்யாயன உற்சவம் நடந்து வருகிறது. அதன் 17-வது நாளிலும் மற்றும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து 6-வது நாளிலும் பிரணய கலகோற்சவம் (ஊடல் உற்சவம்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரணய கலகோற்சவம் நேற்று நடந்தது. அதற்காக நேற்று மாலை உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தனித் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளினார்.

    அதேபோல் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றொரு தனித் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளினர். சாமியும், தாயார்களும் எதிர் எதிர் திசைகளில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து ஸ்ரீவாரி புஷ்கரணியை அடுத்த வராகசாமி கோவில் அருகில் வந்து எதிர் எதிரே நின்றனர்.

     பக்தர்களின் குறைகள், கோரிக்கைகள், நோய்களை போக்குவதில் முன்நிற்கும் ஏழுமலையான், தனது துணைவியார்களான ஸ்ரீதேவி, பூதேவியர்களை கண்டு கொள்வதில்லை, எனக் குற்றம் சாட்டி அவர்கள் சார்பாக அர்ச்சகர் ஒருவர் மலையப்பசாமி மீது முதலில் 3 முறை பூப்பந்துகளை எறிந்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.

    அப்போது நம்மாழ்வார் அருளிய பாசுரங்களை வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் 'கேலி' செய்யும் விதத்தில் பாராயணம் செய்ய, உற்சவர் மலையப்பசாமி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மிரட்டும் தோரணையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை, என்று கூறி பயப்படுவதுபோல் நடித்து மன்னிப்பு கேட்டார்.

    அதன்பிறகு கோபம் தணிந்து அமைதியாகி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் இருவரும் மலையப்பசாமியின் இருபுறமும் சேர்ந்தனர்.

    இந்த நிகழ்ச்சியை அடுத்து அவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து ஆஸ்தானம் நடத்தினர். பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த உற்சவத்தில் திருமலை ஜீயர்சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள், வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் சுற்றி நின்றவாறு உற்சவத்தை கண்டு களித்தனர்.

    ×