search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதியில் நாளை ரத சப்தமி விழா
    X

    திருப்பதியில் நாளை ரத சப்தமி விழா

    • ரத சப்தமி பிரமோற்சவ விழா நாளை நடைபெறுகிறது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி எனும் மினி பிரமோற்சவ விழா நாளை நடைபெறுகிறது.

    ரதசப்தமி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம், 4 மாட வீதிகள் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    நாளை காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில், 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    அதன்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடைபெறுகிறது.

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்சம் வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலையான் வீதி உலா வருகிறார். 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரப வாகனத்தில் உலா வருகிறார்.

    ரதசப்தமி விழாவை காண இன்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர்.

    Next Story
    ×