search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டக்குழு"

    • நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் இணைந்து மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 9 நபர்களும் நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் 3 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், எம்.பி.,க்கள் செல்வராஜ், ராமலிங்கம் , தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் , தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    திட்டக்குழு அமைப்பு ஊரக வளர்ச்சித் துறையின் படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் இணைந்து மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்ட குழுவிற்கு நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 9 நபர்களும் நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் 3 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் துணை விதிகள் பிரிவு 241 படி மாவட்ட திட்ட குழுவிற்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் குழுவின் நிரந்தர சிறப்பு அழைப்பாளராக இருப்பார்கள்.

    மாவட்ட திட்டக் குழுவின் பணியானது, மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்காக மாவட்டத்தின் இயற்கை வளம் மற்றும் மனித வளம் சம்பந்தமான அனைத்து விவரங்களைச் சேகரித்து தொகுத்து தகவல் தளம் அமைத்தல், வரைபடம் ஒன்றை தயாரித்து மாவட்டத்தின் வள ஆதார வாய்ப்புகளை மதிப்பிடுதல், ஊரக மற்றும் நகர்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சார்புத் துறைகள் தயாரித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொகுத்தல், மாநில அரசு வழங்கிய வழிகாட்டி நெறிமுறைகளை கருத்தில் கொண்டு மாவட்ட திட்டக்குழு விவாதித்த மாவட்ட முழுமைக்குமான வரைவு வளர்ச்சி திட்டம் ஒன்றை தயாரித்தல் மற்றும் ஊரக மற்றும் நகர் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையில் பணிகள் மேற்கொள்ளப்படும் இடம் சார்ந்த திட்டமிடுதல் நீர் மற்றும் ஏனைய இயற்கை வளங்களை பகிர்ந்து கொள்ளுதல் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உட்பட பொதுவான நலன் பற்றி விவாதித்து ஒருங்கிணைத்து அடிப்படை வசதி, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை பேணிபாதுகாக்க உதவுதல், மாவட்டத்தின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும் கூறுகளை கண்டறிதல் மற்றும் மாவட்டத்திற்கான குறிப்பிட்ட வளர்ச்சி உத்திகள், திட்டங்கள், செயல் திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்குதல், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகளை செயலாக்கத்தை கண்காணித்து ஆய்வு செய்தல் ஆகும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் (ஊரகப்பகுதி, நகர்பகுதி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் செயல்பட்டார்.
    • ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியாக வாக்களிக்க இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஊரகப் பகுதியில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 7 உறுப்பினர்களும், நகர் பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து மொத்தம் 5 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் செயல்பட்டார். மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோர் தேர்தலில் வாக்களித்தனர். ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியாக வாக்களிக்க இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 7 பேருக்கு 10 பேர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதயகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர், தி.மு.க.வை சேர்ந்த சி.சுதா, பி.சுதா, தேவி, பூங்கொடி, மாரிமுத்து, மைதீன்பீவி ஆகியோர் தலா 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். நகர்ப்புற பகுதியில் இருந்து 5 உறுப்பினர் பதவிக்கு 14 பேர் போட்டியிட்டனர்.

    அதில் சுரண்டையை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் 257 வாக்குகளும், சங்கரன்கோவில் கவுசல்யா 214 தி.மு.க. வாக்குகளும், சிவகிரி சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் உலகேஸ்வரி 212 வாக்குகளும், கடையநல்லூர் முருகன் 211 (தி.மு.க.), வாசுதேவநல்லூர் சரவணன் 211 (தி.மு.க.) ஆகியோர் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கி னார்.

    வாக்குப்பதிவுகள் நடைபெறும் பொழுது பிற தனியார் வாகனங்கள் உள்ளே சில அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் 3 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றது.
    • நகர் மன்ற தலைவருமான மாரியப்பன் கென்னடி, தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட திட்டக்குழு 12 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 9 பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் 3 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. தி.மு.க. சார்பில் 3 வேட்பாளர்களும், ஒரு அ.ம.மு.க. வேட்பாளரும் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராமநாதன், பாலமுருகன், சித்ரா தேவி ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர். இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் ஒட்டுமொத்த 12 உறுப்பினர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

    இந்த திட்டக்குழு உறுப்பினர்களுக்கு தலைவராக மாவட்ட சேர்மனும், துனை தலைவராக கலெக்டரும் தொடர்வார்கள். தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், நகர் மன்ற தலைவர் துரைஆனந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நகர் மன்ற தலைவருமான மாரியப்பன் கென்னடி, தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட திட்டக்குழுவுக்கு ஊரக உள்ளாட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், நகர உள்ளாட்சி சார்பில் 7 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.

    ஊரக உள்ளாட்சி பதவிக்கு 5 உறுப்பினர்களை 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், நகர்ப்புற உள்ளாட்சி பதவிக்கு 7 உறுப்பினர்களை குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டு உறுப்பினர்கள், 4 நகராட்சி யில் உள்ள 98 வார்டு உறுப்பினர்கள், 51 பேரூராட்சியில் உள்ள 826 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்வார்கள். இதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங் கத்திலும், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலக கட்டிட முதல் மாடியில் அமைந்து உள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்திலும் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி யது.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவல கத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் 51 பேரூராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களும் வாக்குகளை பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் 3 பேர் வாக்களிக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருந்தது.

    வாக்களிக்க வந்த கவுன்சிலர்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதுபோல் நாகர்கோவில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், குளச்சல், பத்ம நாபபுரம், கொல்லங்கோடு, குழித்துறை நகராட்சி மற்றும் 11 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும் நாஞ்சில் கூட்டரங்கத்தில் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்களிக்க வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களுக்கான அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்தனர்.

    வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்கள் 5 வாக்குகளும், மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 7 வாக்குகளையும் செலுத்தினார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடக்கிறது.வாக்கு பதிவு மையத்திற்குள் கவுன்சிலர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    வாக்கு பதிவு முடிந்ததும் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்தின் முதல் மாடியில் அமைந் துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் வாக்குகள் எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு வெற்றி பெற்றவர்கள் விபரம் தெரியவரும். திட்டக்குழு தேர்தல் நடைபெற்றதை யடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×