திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் 3 இடங்களிலும் தி.மு.க. வெற்றி

திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் 3 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றது. நகர் மன்ற தலைவருமான மாரியப்பன் கென்னடி, தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் 3 இடங்களிலும் தி.மு.க. வெற்றி
Published on

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட திட்டக்குழு 12 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 9 பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் 3 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. தி.மு.க. சார்பில் 3 வேட்பாளர்களும், ஒரு அ.ம.மு.க. வேட்பாளரும் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராமநாதன், பாலமுருகன், சித்ரா தேவி ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர். இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் ஒட்டுமொத்த 12 உறுப்பினர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

இந்த திட்டக்குழு உறுப்பினர்களுக்கு தலைவராக மாவட்ட சேர்மனும், துனை தலைவராக கலெக்டரும் தொடர்வார்கள். தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், நகர் மன்ற தலைவர் துரைஆனந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நகர் மன்ற தலைவருமான மாரியப்பன் கென்னடி, தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com