search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலகத்தில்"

    • நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயிற்சியினை பயிற்றுனர்கள் டைமன் அருள் மற்றும் ஜான்சிராணி பயிற்சி அளித்தனர்.

    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டியில் உள்ள தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் வார்டு உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. ஆர்.ஜி.எஸ்.ஏ.திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட 16 ஊராட்சிகளில் உள்ள பெண் வார்டு உறுப்பினர்களுக்கு தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்த பயிற்சியில் பெண்கள் பங்கேற்பு சுயசார்பு தன்மை, பணியில் சந்திக்கும் சவால்கள், பாலின சமத்துவம் மற்றும் பாலினசரி நிகர் வரவு செலவு திட்டம், அரசியல் அமைப்பு சமத்துவம், பெண்களுகளுக்கான உரிமைகள், சட்டங்கள், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் ஆளுமை திறமையை வளர்த்தல், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியினை பயிற்றுனர்கள் டைமன் அருள் மற்றும் ஜான்சிராணி பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் செய்யப்பட்டது.

    • சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த 25 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் சமுதாயக்கூடம் மற்றும் மயானம் கேட்டு இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த 25 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் சமுதாயக்கூடம் மற்றும் மயானம் கேட்டு இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    அரசு நிலம்

    சேலம் அயோத்தியா பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனுர் பகுதியில் சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த பகுதி மக்களுக்கு சமுதாய கூடமும், மயானமும் அமைத்து தர பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம்.

    எனவே எங்களது நீண்ட நாள் கோரிக்கையான மயானமும், சமுதாய கூடமும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    அரசு பள்ளிக்கு

    கூடுதல் வகுப்பறை

    சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-கொண்டப்ப நாயக்கன்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் 730 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் போதிய கட்டிட வசதி, கழிவறை வசதி இல்லை. நூலகம், ஆய்வகம், கணினி அறைகளை வகுப்பறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் வரண்டாவில் அமர்ந்து கற்கும் நிலையும் உள்ளது. உடற்கல்வி ஆசிரியரும் இல்லை. இதனால் மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இது சம்பந்தமாக பல மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வகுப்பறைக்கு போதுமான கட்டிடம் கட்டுவதுடன் கழிவறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

    மேலும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    • குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • நாகர்கோவில் மாநகரப்பகுதியில் ரோடுகளில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றுகிறார்கள்.

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்சிலதா, என்ஜினீயர் பால சுப்பிரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சி லர்கள் நவீன் குமார், ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், அய்யப்பன், டி.ஆர்.செல்வம், அனிலா சுகுமாரன், ரோசிட்டா, வளர்மதி, ரமேஷ், வீரசூரபெருமாள், மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் முன்னாள் நகராட்சி தலைவர் ஜெமீலா ஜேம்ஸ் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப்பகுதியில் ரோடுகளில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றுகிறார்கள். மணல்களை அகற்றவில்லை. பெயர் மாற்றம், வரிவிதிப்பு தொடர்பாக மனுக்கள் அளித்து ஏராளமான புகார் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. வருவாய்துறை பிரிவில் பல்வேறு ஊழியர்கள் பணிக்கு வராத நிலை உள்ளது. இதனால் ஊழியர்களின் மேஜைகளில் கோப்புகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநக ராட்சியில் உள்ள மண்டல அலுவலகத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 17 மாதம் ஆகியும் மண்டல அலுவலகம் திறக்கப்படாததால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் உள்ள கழிவறைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. குடும்பத்தோடு சென்றால் மூக்கை பிடித்து விட்டு கழிவறைக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே அதை சரி செய்ய வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல சூரங்குடி பகுதியில் பாசன கால்வாயில் வீட்டு கழிவுகள் விடப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முக்கடல்அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்திராயன் 3 வெற்றி பெற்றதற்கு மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும் என்று கூறி பல மாதங்கள் ஆகியும் ரவுண்டானா அமைக்கப்பட வில்லை. ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் பேசியதாவது:- சாலையில் உள்ள குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்களும். தனியார் மூலம் நியமிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களும் அகற்றி வருகிறார்கள். ஆனால் மணல்களை. மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து மட்டுமே அகற்ற முடியும். இதுதொடர்பாக தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.

    நாய் தொல்லையை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருத்தடைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கருத்தடை செய்யப்பட்ட நாய்களை ஒரே இடத்தில் வைப்பதற்கு போதுமான இட வசதி தற்பொழுது இல்லை. எனவே ஒரே இடத்தில் 100 முதல் 200 நாட்களை நாய்களை கட்டி வைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    தேங்கி கிடக்கும் கோப்பு களை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவல கங்களையும் சீரமைக்க தலா ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 மண்டல அலுவலகத்திற்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .

    முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த 2 மாதங்களாக மைனஸ் அடியில் இருந்து வருகிறது. அந்த அணையை தூர் வாரும் காலம் முடிந்து விட்டது. இனி வரும் காலங்களில் அது பற்றி ஆலோசிக்கப்படும்.

    புத்தன் அணையில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை பொது மக்களுக்கு தற்பொழுது சப்ளை செய்து வருகிறோம். ஏற்கனவே சோதனை ஒட்டம் செய்தபோது ஒரு சில இடங்களில் நீர்க்கசிவு இருந்தது. அதை சரி செய்து தற்போது புத்தன் அணை தண்ணீரை பொது மக்களுக்கு வழங்கி வரு கிறோம்.

    மழை கை கொடுத்தால் மட்டுமே, குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அனைத்து வீடுகளிலும் உறிஞ்சி குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுடன் கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும். நாகர்கோவில் செட்டி குளம் பகுதியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெடுஞ்சாலை துறை அனுமதி கிடைத்தவுடன் செட்டி குளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும். செட்டிகுளத்தில் இருந்து சவேரியார்கோவில் செல்லும் சாலையை, இருவழி பாதையாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து கவுன்சிலர் உதயகுமார் கூறும் போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலை, என்.எஸ்.கே. சிலையை வைக்க வேண்டும் என்றார். இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர் சேகர், த.மா.கா கவுன்சிலர் டி. ஆர். செல்வம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் காமராஜர், எம்.ஜி.ஆர் சிலைகளை வைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • 25-ந்தேதி நடக்கிறது.
    • விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் கலெக்டரால் நேரில் பெறப்படும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை திருச்சியில் நடைபெறும் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியில் விவசாயிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    அதனால் 27-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றம் செய்யப்பட்டு 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறும். இந்த கூட்டத்தில் கடந்த ஜூன் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் கலெக்டரால் நேரில் பெறப்படும்.

    கோரிக்கை மனுக்கள் பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். கலெக்டரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட திட்டக்குழுவுக்கு ஊரக உள்ளாட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், நகர உள்ளாட்சி சார்பில் 7 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.

    ஊரக உள்ளாட்சி பதவிக்கு 5 உறுப்பினர்களை 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், நகர்ப்புற உள்ளாட்சி பதவிக்கு 7 உறுப்பினர்களை குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டு உறுப்பினர்கள், 4 நகராட்சி யில் உள்ள 98 வார்டு உறுப்பினர்கள், 51 பேரூராட்சியில் உள்ள 826 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்வார்கள். இதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங் கத்திலும், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலக கட்டிட முதல் மாடியில் அமைந்து உள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்திலும் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி யது.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவல கத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் 51 பேரூராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களும் வாக்குகளை பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் 3 பேர் வாக்களிக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருந்தது.

    வாக்களிக்க வந்த கவுன்சிலர்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதுபோல் நாகர்கோவில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், குளச்சல், பத்ம நாபபுரம், கொல்லங்கோடு, குழித்துறை நகராட்சி மற்றும் 11 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும் நாஞ்சில் கூட்டரங்கத்தில் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்களிக்க வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களுக்கான அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்தனர்.

    வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்கள் 5 வாக்குகளும், மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 7 வாக்குகளையும் செலுத்தினார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடக்கிறது.வாக்கு பதிவு மையத்திற்குள் கவுன்சிலர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    வாக்கு பதிவு முடிந்ததும் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்தின் முதல் மாடியில் அமைந் துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் வாக்குகள் எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு வெற்றி பெற்றவர்கள் விபரம் தெரியவரும். திட்டக்குழு தேர்தல் நடைபெற்றதை யடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆழ்துளை கிணறுகளை பராமரித்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட 15 கிராம ஊராட்சி களில் செயல்படு த்தப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டம், 15-வது நிதிக்குழு மான்ய திட்டம்,

    சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும்

    பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளி ட்ட திட்டங்களின் கோப்பு கள் மற்றும் அலுவலக நடைமுறை மற்றும் பகிர்மானம் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அலுவலக பதிவறை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவைக் கோப்புகளை உடனடியாக முடித்திடவும் மற்றும் தற்போது கோடை காலம் தொடங்கி யுள்ளதால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்தி டும் வகையில் ஆழ்துளை கிணறுகளை முழுமையாக பராமரித்திடு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை சுற்றியுள்ள சுற்றுப்புற ங்களை தூய்மை யாக வைத்திருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெருமாள், சுபா, உட்படதுறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்த னர்.

    • இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசிய, தி.மு.க.வைச் சோ்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது நட வடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • சில மாதங்களுக்கு முன் நாமக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து குழப்பம் விளைவித்தாா்.

    நாமக்கல்:

    இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசிய, தி.மு.க.வைச் சோ்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது நட வடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பா.ஜ.க .மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி மனு அளித்தாா். பின்னர் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

    சென்னை, பெரியாா் திடலில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்மாதிரியுமான ஆ.ராசா, இந்துக்களை தீண்டத்தகாதவா்கள் என்பதுபோல் மனம் புண்படும் வகையில் தேவையற்ற வாா்த்தைகளை உபயோகித்து பேசினாா். சில மாதங்களுக்கு முன் நாமக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து குழப்பம் விளைவித்தாா்.

    ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் இந்துக்களின் மனதைப் புண்படுத்திய ஆ.ராசா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை தலைவா் அலுவலகத்தில் பா.ஜ.க நிா்வாகிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆ.ராசாவின் மக்களவை உறுப்பினா் பதவியை பறிக்கும் வகை யிலான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் மனு அளிப்பதற்கான பணிகளை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை செய்து வருகிறாா்.

    தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ.க. நிா்வாகிகள், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவல கத்தில் ஆ, ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுக்களை அளித்து வருகின்றனா். இது தொடா்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து அவா் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போராடுவோம்*.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் வடிவேல், கல்வியாளா் ஆா். பிரணவ்குமாா் மற்றும் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    • ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 3,552 இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கான விண்ணப்பங்களை தகுதியுள்ள தேர்வர்கள் இணையதளம் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப உதவிடும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர்.
    • குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி நிலவரப்படி காலி யாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

    இதற்காக அனைத்து மாவட்டத்திலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-20, ஆங்கிலம்-1, கணிதம்-4, அறிவியல்-14, சமூக அறிவியல்-8 என 47 காலி பணியிடங்களும், முதுகலை ஆசிரியர் தமிழ்-12, ஆங்கிலம்-7, கணிதம்-10, வேதியியல்-11, வணிகவியல்-18, பொருளாதாரம்-25, வரலாறு-7, கணினி அறிவியல்-2 என 92 காலி பணியிடங்கள் உள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர். அவர்கள் அவர்களது விண்ணப்ப த்தினை கைப்பட எழுதி, ஈரோடு கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்தனர்.

    இதேபோல் பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய கல்வி மாவட்ட அலுவலகத்திலும் விண்ணப்பிக்க அதிகளவிலான பட்டதாரிகள் குவிந்தனர். சிலர் மின்னஞ்சல் வாயிலாகவும் கல்வி மாவட்ட அலுவலருக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பலாம் என்றும், குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உடலில் மண்எண்ணை ஊற்றியவரை போலீசார் தடுத்தனர்
    • அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தீர்ப்பு கூட்டம் இன்று வழக்கம்போல நடைபெற்றது. அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மாற்றுதிறனாளி முகமது சாதிக் பாஷா என்பவர் வந்தார்.

    அப்போது அவர் திடீெரன தன் மீது மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து முகமது சாதிக் பாஷா கூறியதாவது:-

    நான் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக அலுவலகம் அமைத்து வீட்டு மனைகளை விற்று வருகிேறன். இந்நிலையில் டாஸ்மாக் பார் அமைப்பதற்காக எனது அலுவலகத்தை காலி செய்யக்கோரி சில நபர்கள் கட்டாயபடுத்தி வந்தனர்.

    இதனால் நான் சற்று கால அவகாசம் கேட்டேன், ஆனால் கடந்த ஏப்ரல் 10-ந் தேதி எனது அலுவலகத்தில் புகுந்த மர்மநபர்கள் எனது அலுவலகத்தை அடித்து உடைத்து அங்கிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றனர்.இது இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் புகார் அளித்தேன்.

    அங்கேயும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றேன். இவ்வாறு அவர் கூறினார்.மண்எண்ணை யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×