search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்"

    • 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றது.
    • இதனையடுத்து பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளி உலக அளவில் புகழ்பெற்றனர்.

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தாயை பிரிந்து வந்த ரகு, பொம்மி ஆகிய 2 குட்டி யானைகளை பாகன் தம்பதிகளான பொம்மன்-பெள்ளி ஆகியோர் பராமரித்து வளர்த்து வந்தனர்.

    இதையறிந்த கார்த்தகி கொன்சால்வேஸ் என்ற பெண் இயக்குனர் 2 குட்டி யானைகளை வளர்த்த விதம் உள்ளிட்ட அனைத்தையும் 2 ஆண்டுகளாக வனப்பகுதியில் தங்கி 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற பெயரில் ஆவணபடமாக எடுத்தார். இந்த படத்தின் காட்சிகள் சிறப்பாக இருந்ததன் காரணமாக படக்குழுவினர் இதனை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பினர். அங்கு இந்த ஆவணப்படம் எல்லோராலும் பாராட்டப்பட்டு சிறந்த ஆவணப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதினை பெற்றது.

    இதனையடுத்து பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளி உலக அளவில் புகழ்பெற்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோர் முதுமலைக்கு வந்து, பாகன் தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சென்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாகன் தம்பதியை சென்னைக்கு அழைத்து ரூ.1 லட்சம் பணம் கொடுத்து பாராட்டினார்.

    இந்த நிலையில் ஆவணப்படம் எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் படம் முடிந்ததும், தங்களுக்கு வீடு, நிலம், பணம் தருவதாக கூறி ஏமாற்றியதாக பாகன் தம்பதி புகார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பாகன் தம்பதியினர் கூறியதாவது:-

    இரவு, பகல் பாராமல் வனப்பகுதிக்குள் சென்று அவர்கள் கூறியபடி நாங்கள் நடித்து கொடுத்தோம். வயதான காலத்தில் எங்களுக்கு நடக்க கூட முடியாத நிலையிலும் கஷ்டத்தை பொறுத்து கொண்டு, காடு, மேடு என அலைந்து அவர்கள் கூறியபடி அனைத்தையும் செய்தோம்.

    ஆவணப்படம் முடிந்ததும் எங்களுக்கு வீடு, பணம், நிலம், பேரக் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் எதுவுமே கடைசிவரை தரவில்லை. இயக்குனரை தொடர்பு கொண்டு கேட்டால் நான் கொஞ்சம் பிசியாக இருக்கிறேன். உங்கள் வங்கி கணக்கில் பணம் போட்டு விட்டேன் என்கிறார். அதனை நம்பி நாங்களும் எங்களது வங்கி கணக்கில் சென்று பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை. பணம் போட்டுவிட்டதாக கூறி ஏமாற்றுகிறார்கள். எல்லாத்தையும் கடவுள் பார்த்து கொள்வார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரவீன்ராஜ் என்பவர் பொம்மன்-பெள்ளி தம்பதியை அழைத்து சென்று, அவர்களின் பிரச்சினை குறித்து முகமது மன்சூர் என்ற வக்கீலிடம் பேசினார். இதனை தொடர்ந்து 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருக்கு வக்கீல் முகமது மன்சூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் பிரவீன்ராஜ் கூறியதாவது:-

    இந்த ஆவணப்படம் எடுக்க பொம்மன்-பெள்ளி தம்பதி பல்வேறு கஷ்டங்களை சந்தித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவில் வீடு, பணம், பேரன்களுக்கு படிப்பு கொடுப்பதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆஸ்கர் விருது என்பது அதில் நடித்த யானை, பூனை என எல்லோருக்கும் சொந்தமானது தான். அந்த ஆஸ்கர் விருதை 2 நாட்கள் பொம்மன் வீட்டில் வைத்திருக்கலாமே.

    அப்படி என்ன தீண்டத்தகாதவர்களா அவர்கள். ஆஸ்கர் விருது கிடைத்ததன் மூலமாக தயாரிப்பாளர், இயக்குனருக்கு ரூ.7 கோடி வரை பணம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆவணப்படத்தின் மூலமாக கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை பொம்மன்-பெள்ளிக்கு கொடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் அதனை செய்யவில்லை. வீடு கட்டி தருவதாகவும் கூறியுள்ளனர். இப்போது தொடர்பு கொண்டால் அவர்கள் போனை எடுப்பதில்லை.

    இதையடுத்து தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரின் முகவரிக்கும், மெயிலுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இதேபோல் ஆஸ்கர் விருது குழுவுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 95-வது ஆஸ்காரில் சிறந்த ஆவணக் குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் விருது வென்றது.
    • சில தினங்களுக்கு முன்பு இந்த ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றனர்.

     

    ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு

    ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு


    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.


    ஆஸ்கர் வென்ற இயக்குனரை கௌரவித்த முதலமைச்சர்
    ஆஸ்கர் வென்ற இயக்குனரை கௌரவித்த முதலமைச்சர்


    மேலும் ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.


    ஆஸ்கர் விருதுடன் பொம்மன் - பெள்ளி
    ஆஸ்கர் விருதுடன் பொம்மன் - பெள்ளி


    இந்நிலையில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனர் ஆஸ்கர் விருதை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • 95-வது ஆஸ்காரில் சிறந்த ஆவணக் குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் விருது வென்றது.
    • இந்த ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றனர்.


    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்


    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

     

    ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு

    ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு

    இந்நிலையில் ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது ஆஸ்கர் விருதை முதலமைச்சரிடம் காண்பித்து அவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் கௌரவித்தார்.

    • 95-வது ஆஸ்கர் விருதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணக் குறும்படமாக தேர்வானது.
    • இந்த படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை பெற்றது. தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையே இந்த தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம். இந்த படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்துள்ளது.

    • 95-வது ஆஸ்கர் விருதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணக் குறும்படமாக தேர்வானது.
    • சமூக வலைத்தளத்தில் எழுந்த குற்றச்சாட்டுக்கு இயக்குனர் மனம் திறந்துள்ளார்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்திய சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றது. இந்த படக்குழுவுக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.


    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையே இந்த தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம். ஆஸ்கர் விருது வென்ற இந்த ஆவணப்படத்தை பொம்மன், பெள்ளி தம்பதிக்கு திரையிட்டு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை நிருபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் முன்வைத்திருந்தார்.


    ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு

    ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு

    இந்நிலையில் இது தொடர்பாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் சமூக வலைத்தளத்தில் மனம் திறந்து பதிவிட்டுள்ளார். அதில், இது சம்மந்தமாக நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியே இந்த ஆவணப்படத்தை என்னால் திரையிடப்பட்டு காட்டப்பட்ட முதல் நபர். அவர்கள் வசிக்கும் காட்டுப்பகுதியில் ஸ்டிரீமிங் சேனல்களை பார்க்கும் வசதி இல்லை என்று பதிவிட்டுள்ளார். 

    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
    • இதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கரை வென்றது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் வெற்றியாளர்கள் தேர்வு இதற்கு முன்பே நடைபெற்ற நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்தது.

     

    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    இதில் இந்திய சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றது.


    குனீத் மோங்கா - கார்த்திகி கோன்சால்வ்ஸ்

    குனீத் மோங்கா - கார்த்திகி கோன்சால்வ்ஸ்

    இந்நிலையில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குனீத் மோங்கா, கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் விருதை வென்ற மனதை வருடசெய்யும், அற்புதமான தி எலிஃபேண்ட் விஸ்பரரஸ் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
    • இதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கரை வென்றது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் வெற்றியாளர்கள் தேர்வு இதற்கு முன்பே நடைபெற்ற நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்தது.

     

    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்)

    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்)

    இதில் இந்திய சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றது.


    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தியா சார்பில் ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "வாழ்த்துக்கள் கீரவாணி மற்றும் சந்திர போஸ் ஏற்கனவே கணிக்கப்பட்ட மற்றும் தகுதியானது. உங்கள் இருவருக்கும் மற்றும் ஆர்.ஆர்.ஆர் குழுவிற்கும் ஜெய்ஹோ!! என்று பதிவிட்டுள்ளார்.


    இந்திய சார்பில் ஆஸ்கர் வென்றவர்கள்
    இந்திய சார்பில் ஆஸ்கர் வென்றவர்கள்

    மேலும் மற்றொரு பதிவில், வாழ்த்துக்கள், இந்திய இயக்குனர்களுக்கு நீங்கள் ஒரு மடையை திறந்து ஊக்கப்படுத்தியுள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதை (சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடல்) வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×