search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pelli"

    • 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றது.
    • இதனையடுத்து பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளி உலக அளவில் புகழ்பெற்றனர்.

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தாயை பிரிந்து வந்த ரகு, பொம்மி ஆகிய 2 குட்டி யானைகளை பாகன் தம்பதிகளான பொம்மன்-பெள்ளி ஆகியோர் பராமரித்து வளர்த்து வந்தனர்.

    இதையறிந்த கார்த்தகி கொன்சால்வேஸ் என்ற பெண் இயக்குனர் 2 குட்டி யானைகளை வளர்த்த விதம் உள்ளிட்ட அனைத்தையும் 2 ஆண்டுகளாக வனப்பகுதியில் தங்கி 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற பெயரில் ஆவணபடமாக எடுத்தார். இந்த படத்தின் காட்சிகள் சிறப்பாக இருந்ததன் காரணமாக படக்குழுவினர் இதனை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பினர். அங்கு இந்த ஆவணப்படம் எல்லோராலும் பாராட்டப்பட்டு சிறந்த ஆவணப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதினை பெற்றது.

    இதனையடுத்து பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளி உலக அளவில் புகழ்பெற்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோர் முதுமலைக்கு வந்து, பாகன் தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சென்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாகன் தம்பதியை சென்னைக்கு அழைத்து ரூ.1 லட்சம் பணம் கொடுத்து பாராட்டினார்.

    இந்த நிலையில் ஆவணப்படம் எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் படம் முடிந்ததும், தங்களுக்கு வீடு, நிலம், பணம் தருவதாக கூறி ஏமாற்றியதாக பாகன் தம்பதி புகார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பாகன் தம்பதியினர் கூறியதாவது:-

    இரவு, பகல் பாராமல் வனப்பகுதிக்குள் சென்று அவர்கள் கூறியபடி நாங்கள் நடித்து கொடுத்தோம். வயதான காலத்தில் எங்களுக்கு நடக்க கூட முடியாத நிலையிலும் கஷ்டத்தை பொறுத்து கொண்டு, காடு, மேடு என அலைந்து அவர்கள் கூறியபடி அனைத்தையும் செய்தோம்.

    ஆவணப்படம் முடிந்ததும் எங்களுக்கு வீடு, பணம், நிலம், பேரக் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் எதுவுமே கடைசிவரை தரவில்லை. இயக்குனரை தொடர்பு கொண்டு கேட்டால் நான் கொஞ்சம் பிசியாக இருக்கிறேன். உங்கள் வங்கி கணக்கில் பணம் போட்டு விட்டேன் என்கிறார். அதனை நம்பி நாங்களும் எங்களது வங்கி கணக்கில் சென்று பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை. பணம் போட்டுவிட்டதாக கூறி ஏமாற்றுகிறார்கள். எல்லாத்தையும் கடவுள் பார்த்து கொள்வார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரவீன்ராஜ் என்பவர் பொம்மன்-பெள்ளி தம்பதியை அழைத்து சென்று, அவர்களின் பிரச்சினை குறித்து முகமது மன்சூர் என்ற வக்கீலிடம் பேசினார். இதனை தொடர்ந்து 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருக்கு வக்கீல் முகமது மன்சூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் பிரவீன்ராஜ் கூறியதாவது:-

    இந்த ஆவணப்படம் எடுக்க பொம்மன்-பெள்ளி தம்பதி பல்வேறு கஷ்டங்களை சந்தித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவில் வீடு, பணம், பேரன்களுக்கு படிப்பு கொடுப்பதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆஸ்கர் விருது என்பது அதில் நடித்த யானை, பூனை என எல்லோருக்கும் சொந்தமானது தான். அந்த ஆஸ்கர் விருதை 2 நாட்கள் பொம்மன் வீட்டில் வைத்திருக்கலாமே.

    அப்படி என்ன தீண்டத்தகாதவர்களா அவர்கள். ஆஸ்கர் விருது கிடைத்ததன் மூலமாக தயாரிப்பாளர், இயக்குனருக்கு ரூ.7 கோடி வரை பணம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆவணப்படத்தின் மூலமாக கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை பொம்மன்-பெள்ளிக்கு கொடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் அதனை செய்யவில்லை. வீடு கட்டி தருவதாகவும் கூறியுள்ளனர். இப்போது தொடர்பு கொண்டால் அவர்கள் போனை எடுப்பதில்லை.

    இதையடுத்து தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரின் முகவரிக்கும், மெயிலுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இதேபோல் ஆஸ்கர் விருது குழுவுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சாதாரண யானைகள் காப்பகமாக இருந்த தெப்பக்காடு முகாம் தற்போது சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது.
    • பிரதமர், ஜனாதிபதி உள்பட பலர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து யானைகளை பார்வையிட்டு சென்றனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், சாகச போட்டிகள் நடைபெற்றது. இது தவிர பேச்சு, எழுத்து, கட்டுரை, பாடல், நடனம், நாடகம் என பல்வேறு போட்டிகளிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற பள்ளிக்கு ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

    அவர்களுடன் மாணவ-மாணவிகள் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அவர்களிடம் பேசிய பொம்மன், பெள்ளி தம்பதியினர், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

    சாதாரண யானைகள் காப்பகமாக இருந்த தெப்பக்காடு முகாம் தற்போது சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது. பிரதமர், ஜனாதிபதி உள்பட பலர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து யானைகளை பார்வையிட்டு சென்றனர். தற்போது சி.எஸ்.கே. அணியின் கேப்டனான எம்.எஸ்.டோனி விரைவில் முகாமுக்கு வருகை தர உள்ளார். அவரது வருகையை பழங்குடியின மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×