search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமிரபரணி"

    • அருப்புக்கோட்டைக்கு புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் டிசம்பர் முதல் வழங்கப்படும்.
    • இந்த தகவலை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    அருப்புக்கோட்டை

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அருப்புக்கோட்டை விருதுந கர், சாத்தூர் ஆகிய நகராட்சி களுக்கு புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகி ன்றன. இதில் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு மட்டும் .226 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் சீவலப்பேரியிலிருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு பகிர்மான குழாய்கள் மூலம் அருப்புக்கோட்டைக்கு கொண்டு வரப்படும். இதற்காக அருப்புக் கோட்டை நகர் பகுதிகளில் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க வாய்ப்பு உள்ளது. இதுவரை 90 சதவீத பணிகள் முடி வடைந்துள்ளன. நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும். மேலும் வைகையில் இருந்தும் குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகை வறண்ட நிலையில் உள்ளதால் வைகையில் இருந்து வரும் தண்ணீரின் தன்மை குறைந்து சுவை யற்ற நிலையில் வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வைகை யில் இருந்து அருப்புக் கோட்டைக்கு குழாய்கள் மூலம் கொண்டு வரும் குடிநீரை கட்டங்குடியில் ரூ. 6 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை சுத்திகரிப்பு செய்து அதன்பின் அருப்புக்கோட்டைக்கு வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

    பழைய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வல்லநாட்டில் இருந்து அருப்புக்கோட்டை வரை 19 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்க ளில் ஆங்காங்கே அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாகி வருகிறது. அதையும் நிவர்த்தி செய்யும் வகையில் புதிய குழாய்கள் அமைக்க குடிநீர் வடிகால் வாரியத்தி னரிடம் திட்ட மதிப்பீடு தயார் செய்ய கூறியுள்ளேன். திட்ட மதிப்பீடு தயார் செய்தவுடன் அரசுக்கு அனுப்பி நிதியை பெற்று குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்படும். மேலும் கட்டங்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வரை பழைய இரும்பு குழாய்களுக்கு பதிலாகரூ. 6 கோடி செலவில் டி.ஐ.பைப் பதிக்கப்பட உள்ளது.

    தற்போது தாமிரபரணி, வைகை ஆகிய 2 குடிநீர் திட்டங்களிலும் குறைந்த அளவே குடிநீர் பெறப்ப டுவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, ஆணையாளர், அசோக்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் தி.மு.க. நகர செயலாளர் ஏ.கே.மணி உடனிருந்தனர்.

    • சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட ஒரு சில ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • புதிய பாலத்தில் இருந்து மேலப்பாளையம் சாலை வரை நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. பாளை பஸ் நிலையம், வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம், வணிக வளாகம், பல்நோக்கு அரங்கம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளது.

    சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட ஒரு சில பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நெல்லை மாவட்ட மக்களின் ஜீவநதியாக விளங்கும் தாமிர பரணி ஆற்று தண்ணீரானது மாநகர பகுதியில் சாக்கடை உள்ளிட்ட கழிவுகளால் மாசடைவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

    இதனால் அந்த மாசுபாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தாமிர பரணி ஆற்றின் அழகை ரசிக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை கலெக்டர் அலுவலகம் எதிரே நடை பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்துக்காக ரூ. 11.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரமாக புதிய பாலத்தில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகத்தை தாண்டி மேலப்பாளையம் சாலை வரையிலும் சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு இந்த நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    சுமார் 15 மீட்டர் அகலம் கொண்ட வகையில் அமைக்கப்படும் இந்த நடை பாதையில் மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் விடுமுறை காலங்களிலும், வெள்ள காலகட்டத்தின் போதும் தாமிரபரணி ஆற்றின் அழகை ரசிக்கும் வண்ணம் இந்த நடைபாதை அமைக் கப்பட்டுள்ளது. அந்த கால கட்டங்களில் இந்த நடை பாதையில் நின்று தாமிரபரணி ஆற்றின் அழகை புகைப்படம் எடுக்கவும், ரசிக்கும் விதமாகவும் 5 இடங்களில் 'வியூ பாய்ண்ட்' அமைக் கப்படுகிறது.

    தற்போது இங்கு சுமார் 65 சதவீத பணிகள் முடிவடை ந்துள்ள நிலையில் கிரானைட் ஒட்டும் பணி, மின் கம்பங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் வருகிற 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தாமிரபரணி நதியின் தூய்மையை பாதுகாக்க பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற் கொண்டு வரும் நிலையில் தற்போது அதன் அழகை ரசிக்கும் விதத்தில் நடை பெற்று வரும் இந்த பணியை பொதுமக்கள் பயனுள்ள தாகவே கருதுகின்றனர்.

    அதே நேரத்தில் இரவு நேரங்களில் அந்த நடை பாதைகளை மது பிரியர்கள் ஆக்கிரமித்து மது குடிப்பதை தவிர்க்கும் விதமாக கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலாளிகள் மேற்பார்வை யில் காவல் பணிகள் தொடரும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விவசாயிகள் கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆழ்வை ஒன்றிய குழு மற்றும் கடம்பாகுளம் விவசாயிகள் இணைந்து தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விவசாயிகள் சங்க தலைவர் குருகாட்டூர் பூலான் தலைமையில், ரவிச்சந்திரன், நயினார் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் கடம்பாகுளம் பாசனத்தில் தற்போது செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் அறுவடையானதும், எதிர் வரும் மார்ச் மாதத்திற்குள் கடம்பாகுளம் நீர் மட்டம் அறிந்து முன் சாகுபடி செய்ய கடம்பாகுளம் விவசாயிகளை கேட்டுக்கொள்வதும் காலம் தாழ்த்தாமல் முன்சாகுபடி செய்ய தாமிரபரணி நீர் வழங்க அனுமதி கேட்பது மறுக்கும் பட்சத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும், மேலும் நெல்கொள் முதல் நிலையம் கூடுதலாக அறுவடை காலத்தில் விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகத்தினை கேட்டு கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆழ்வார் திருநகரி சுற்று வட்டாரத்திலுள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தாமிரபரணி ஆற்றில் மூழ்கினார்.

    கன்னியாகுமாரி:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பாரதபள்ளி மடத்துவிளையைச் சேர்ந்த வர் தங்கமணி. இவர் பந்தல் கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பபாய் (60).

    இவர்களுக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள், உள்ளனர். இரண்டு பெண் களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணமாகி விட்டது. கடைசி மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் புஷ்ப பாய் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். துணியை துவைத்து கரையில் வைத்து விட்டு ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் இழுத் துச்சென்று நீரில் மூழ்கி யுள்ளார். இதையடுத்து அப்பகுதியினர் திருவட்டார் போலீசுக்கும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து புஷ்பபாயை மாலை 6 மணி வரை தேடினார்கள். பின்னர் இருட்டி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர்.

    இந்நிலையில் மலை யோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பா றை அணையிலிருந்து தொடர்ந்து 800 கன அடி உபரிநீர் வெளியேற்றபட்டு வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டி ருப்பதையடுத்து மாயமான புஷ்பபாயை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இன்று 2-வது நாளாக காலையில் இருந்தே புஷ்பபாயை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கயிறுகட்டி அந்த பகுதி முழுவதும் தேடி வருகிறார்கள்.

      நாகர்கோவில்:

      குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் இருந்தது.

      இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பு அணை கட்டினால் கடல் நீர் புகுவது தடுக்கப்படுவதோடு, குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் மாறுவதும் தடுக்கப்படும் எனக்கூறப்பட்டது.

      இதையடுத்து தமிழக அரசு புதுக்கடையை அடுத்த பரக்காணி பகுதியில் ரூ.15.37 கோடியில் தடுப்பு அணை கட்ட முடிவு செய்தது.

      பரக்காணியில் தடுப்பு அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி ஆழ்கடல் மீன்பிடிப்பு சங்கம் சார்பில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

      அதில் முறையான ஆய்வு மற்றும் அனுமதியின்றி தடுப்பணை கட்டப்படுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

      இந்த மனுவை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், பரக்காணி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தடுப்பு அணை கட்ட தடை விதித்துள்ளது.

      கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதியை பெறும்வரை இப்பணிகளை நிறுத்த வேண்டும், ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனுதாரர் தரப்பு மனு அளித்திருந்தால் அதனை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தடுப்பணையால் ஏற்படும் பாதிப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களிடம் அறிக்கை பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளது.  

      • தமது முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் செய்வது வழக்கம் பின் தாமிரபரணி ஆற்றில் நீராடி மகாதேவர் கோவில் சென்று செல்வது வழக்கம்.
      • தேவையான அளவு தண்ணீர் அணையிலிருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் திறந்து விட வேண்டும்

      கன்னியாகுமரி :

      ஆடி அமாவாசை வரும் 28-ந்தேதி அனுஷ்டிக்கப்படு கிறது.

      அன்று பொதுமக்கள் இறந்து போன தமது முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் செய்வது வழக்கம் பின் தாமிரபரணி ஆற்றில் நீராடி மகாதேவர் கோவில் சென்று செல்வது வழக்கம்.

      கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா ஊரடங்கை ஒட்டி பலி தர்ப்பணத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் பலி தர்ப்பணம் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

      கடந்த 10 நாட்களாக போதுமான மழை பெய்யா ததால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் மிகக் குறைவாக பாய்ந்தது.ஏராளமான பொதுமக்கள் ஆடி அமாவாசை அன்று தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது கீழ் பகுதியில் உள்ள சகதி தண்ணீ ரோடு கலந்து தண்ணீர் சகதியாக மாறவாய்ப்பு உள்ளது.

      எனவே தேவையான அளவு தண்ணீர் அணையிலிருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் திறந்து விட வேண்டும் என்று குழித்துறை கோவில் கமிட்டி தலைவர் வெங்கட்ராமன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பிரதீப் ஆகியோர் அமைச்சர் மனோ தங்கராஜியிடம் நேரில் வலியுறுத்தினர்.

      இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் பேச்சி பாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. குழித்துறை சப் பாத்து அளவில் தண்ணீர் பாய்கிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      • தாமிரபரணிக்கரையில் பல நூற்றாண்டுகளை கடந்த ஆலமரங்கள் பல இடங்களில் வளர்ந்து நிற்கின்றன.
      • தாமிரபரணிக்கரையில் பல நூற்றாண்டுகளை கடந்த ஆலமரங்கள் பல இடங்களில் வளர்ந்து நிற்கின்றன.

      செய்துங்கநல்லூர்:

      தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. பொதிகை மலையில் உற்பத்தியாகி புன்னக்காயல் கடலில் கலக்கிறது.

      இந்த நதி பாய்ந்தோடும் ஆற்றுக்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமத்து தெய்வங்கள் உள்ளது. குறிப்பாக சுடலைமாடன், பேச்சியம்மன், முண்டன் என 18 பரிவார தேவதைகளுடன் கிராம தெய்வங்கள் வீற்றிருக்கின்றன.

      இந்த கிராம தெய்வங்கள் வீற்றிருக்கும் அனைத்து கோவில்களிலும் பல நூறாண்டு பழமையையும், பெருமையையும் சொல்லும் ஒரு மரம் கண்டிப்பாக இருக்கும்.

      இந்த தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள கோவில்களில் நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் மரங்கள் தற்போது கம்பீரமாக நிற்க காரணம் இந்த18 கிராம தெய்வங்கள் தான்.

      தெய்வங்கள் என்றாலே பொதுமக்களுக்கு எப்போதும் பயபக்தி தான். இந்த பயபக்தியின் காரணமாகவே இந்த மரங்கள் அனைத்தும் வானுயர வளர்ந்து நிற்கிறது.

      தாமிரபரணிக்கரையில் பல நூற்றாண்டுகளை கடந்த ஆலமரங்கள் பல இடங்களில் வளர்ந்து நிற்கின்றன. இதற்கு காரணம் அதனை யாரும் வெட்டுவது கிடையாது. வெட்டினால் அந்த பகுதியில் உள்ள கிராமத்து தெய்வம் கண்ணை குத்திவிடும். தெய்வம் வீடு தேடி வந்துவிடும் என்ற ஒரு பயத்திலேயே இந்த மரங்களை மக்கள் வெட்டுவதில்லை.

      மேலும் அந்த மரங்கள் சாய்ந்து விழுந்தாலோ அதில் இருந்து யாரும் ஒரு கம்பை கூட எடுத்துச்செல்ல மாட்டார்கள்.

      தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் வளர்ந்துள்ள மரங்கள். ஆலமரங்கள் அனைத்தும் விழுதுகள் விட்டு, அந்த விழுதுகள் அனைத்தும் வேராக வளர்ந்து மரங்கள் அனைத்தும் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.

      இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:-

      எங்கள் பகுதியில் தாமிரபரணிக்கரையில் ஏராளமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதில் இருந்து விழும் ஒரு மரத்தின் துண்டுகளை கூட நாங்கள் எடுத்துச் செல்வது கிடையாது.

      கோவில் திருவிழா நாட்களில் விறகிற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். இல்லை என்றால் கீழே விழுந்த மரக்கிளைகள் அனைத்தும் அங்கு தான் கிடக்கும் என்று தெரிவித்தனர்.

      • கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
      • நதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

      செய்துங்கநல்லூர்:

      நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்திற்கு குடிநீர் தரக்கூடிய நதியாக விளங்குகிறது.

      தாமிரபரணி மகாத்மியம் படி வைகாசி விசாகம் அன்று தான் பிறந்த நாள் கூறுவார்கள். அகத்திய பெருமான் இன்று தான் தாமிரபரணியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.

      இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இன்று பிறந்த நாள் விழா தாமிரபரணி நல இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.

      இதற்காக கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தாமிரபரணி நதியில் நின்று நதியை காக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

      தொடர்ந்து நதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      ×