என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தர்ப்பனத்திற்கு தண்ணீர் திறப்பு
- தமது முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் செய்வது வழக்கம் பின் தாமிரபரணி ஆற்றில் நீராடி மகாதேவர் கோவில் சென்று செல்வது வழக்கம்.
- தேவையான அளவு தண்ணீர் அணையிலிருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் திறந்து விட வேண்டும்
கன்னியாகுமரி :
ஆடி அமாவாசை வரும் 28-ந்தேதி அனுஷ்டிக்கப்படு கிறது.
அன்று பொதுமக்கள் இறந்து போன தமது முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் செய்வது வழக்கம் பின் தாமிரபரணி ஆற்றில் நீராடி மகாதேவர் கோவில் சென்று செல்வது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா ஊரடங்கை ஒட்டி பலி தர்ப்பணத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் பலி தர்ப்பணம் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த 10 நாட்களாக போதுமான மழை பெய்யா ததால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் மிகக் குறைவாக பாய்ந்தது.ஏராளமான பொதுமக்கள் ஆடி அமாவாசை அன்று தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது கீழ் பகுதியில் உள்ள சகதி தண்ணீ ரோடு கலந்து தண்ணீர் சகதியாக மாறவாய்ப்பு உள்ளது.
எனவே தேவையான அளவு தண்ணீர் அணையிலிருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் திறந்து விட வேண்டும் என்று குழித்துறை கோவில் கமிட்டி தலைவர் வெங்கட்ராமன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பிரதீப் ஆகியோர் அமைச்சர் மனோ தங்கராஜியிடம் நேரில் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் பேச்சி பாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. குழித்துறை சப் பாத்து அளவில் தண்ணீர் பாய்கிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்