search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமத்து தெய்வங்கள்"

    • தாமிரபரணிக்கரையில் பல நூற்றாண்டுகளை கடந்த ஆலமரங்கள் பல இடங்களில் வளர்ந்து நிற்கின்றன.
    • தாமிரபரணிக்கரையில் பல நூற்றாண்டுகளை கடந்த ஆலமரங்கள் பல இடங்களில் வளர்ந்து நிற்கின்றன.

    செய்துங்கநல்லூர்:

    தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. பொதிகை மலையில் உற்பத்தியாகி புன்னக்காயல் கடலில் கலக்கிறது.

    இந்த நதி பாய்ந்தோடும் ஆற்றுக்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமத்து தெய்வங்கள் உள்ளது. குறிப்பாக சுடலைமாடன், பேச்சியம்மன், முண்டன் என 18 பரிவார தேவதைகளுடன் கிராம தெய்வங்கள் வீற்றிருக்கின்றன.

    இந்த கிராம தெய்வங்கள் வீற்றிருக்கும் அனைத்து கோவில்களிலும் பல நூறாண்டு பழமையையும், பெருமையையும் சொல்லும் ஒரு மரம் கண்டிப்பாக இருக்கும்.

    இந்த தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள கோவில்களில் நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் மரங்கள் தற்போது கம்பீரமாக நிற்க காரணம் இந்த18 கிராம தெய்வங்கள் தான்.

    தெய்வங்கள் என்றாலே பொதுமக்களுக்கு எப்போதும் பயபக்தி தான். இந்த பயபக்தியின் காரணமாகவே இந்த மரங்கள் அனைத்தும் வானுயர வளர்ந்து நிற்கிறது.

    தாமிரபரணிக்கரையில் பல நூற்றாண்டுகளை கடந்த ஆலமரங்கள் பல இடங்களில் வளர்ந்து நிற்கின்றன. இதற்கு காரணம் அதனை யாரும் வெட்டுவது கிடையாது. வெட்டினால் அந்த பகுதியில் உள்ள கிராமத்து தெய்வம் கண்ணை குத்திவிடும். தெய்வம் வீடு தேடி வந்துவிடும் என்ற ஒரு பயத்திலேயே இந்த மரங்களை மக்கள் வெட்டுவதில்லை.

    மேலும் அந்த மரங்கள் சாய்ந்து விழுந்தாலோ அதில் இருந்து யாரும் ஒரு கம்பை கூட எடுத்துச்செல்ல மாட்டார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் வளர்ந்துள்ள மரங்கள். ஆலமரங்கள் அனைத்தும் விழுதுகள் விட்டு, அந்த விழுதுகள் அனைத்தும் வேராக வளர்ந்து மரங்கள் அனைத்தும் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் தாமிரபரணிக்கரையில் ஏராளமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதில் இருந்து விழும் ஒரு மரத்தின் துண்டுகளை கூட நாங்கள் எடுத்துச் செல்வது கிடையாது.

    கோவில் திருவிழா நாட்களில் விறகிற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். இல்லை என்றால் கீழே விழுந்த மரக்கிளைகள் அனைத்தும் அங்கு தான் கிடக்கும் என்று தெரிவித்தனர்.

    ×