search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.11.50 கோடியில் பணிகள் மும்முரம்- நெல்லையில் தாமிரபரணி ஆற்றை ரசிக்க வியூ பாய்ண்ட்
    X

    ரூ.11.50 கோடியில் பணிகள் மும்முரம்- நெல்லையில் தாமிரபரணி ஆற்றை ரசிக்க 'வியூ பாய்ண்ட்'

    • சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட ஒரு சில ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • புதிய பாலத்தில் இருந்து மேலப்பாளையம் சாலை வரை நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. பாளை பஸ் நிலையம், வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம், வணிக வளாகம், பல்நோக்கு அரங்கம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளது.

    சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட ஒரு சில பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நெல்லை மாவட்ட மக்களின் ஜீவநதியாக விளங்கும் தாமிர பரணி ஆற்று தண்ணீரானது மாநகர பகுதியில் சாக்கடை உள்ளிட்ட கழிவுகளால் மாசடைவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

    இதனால் அந்த மாசுபாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தாமிர பரணி ஆற்றின் அழகை ரசிக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை கலெக்டர் அலுவலகம் எதிரே நடை பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்துக்காக ரூ. 11.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரமாக புதிய பாலத்தில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகத்தை தாண்டி மேலப்பாளையம் சாலை வரையிலும் சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு இந்த நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    சுமார் 15 மீட்டர் அகலம் கொண்ட வகையில் அமைக்கப்படும் இந்த நடை பாதையில் மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் விடுமுறை காலங்களிலும், வெள்ள காலகட்டத்தின் போதும் தாமிரபரணி ஆற்றின் அழகை ரசிக்கும் வண்ணம் இந்த நடைபாதை அமைக் கப்பட்டுள்ளது. அந்த கால கட்டங்களில் இந்த நடை பாதையில் நின்று தாமிரபரணி ஆற்றின் அழகை புகைப்படம் எடுக்கவும், ரசிக்கும் விதமாகவும் 5 இடங்களில் 'வியூ பாய்ண்ட்' அமைக் கப்படுகிறது.

    தற்போது இங்கு சுமார் 65 சதவீத பணிகள் முடிவடை ந்துள்ள நிலையில் கிரானைட் ஒட்டும் பணி, மின் கம்பங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் வருகிற 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தாமிரபரணி நதியின் தூய்மையை பாதுகாக்க பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற் கொண்டு வரும் நிலையில் தற்போது அதன் அழகை ரசிக்கும் விதத்தில் நடை பெற்று வரும் இந்த பணியை பொதுமக்கள் பயனுள்ள தாகவே கருதுகின்றனர்.

    அதே நேரத்தில் இரவு நேரங்களில் அந்த நடை பாதைகளை மது பிரியர்கள் ஆக்கிரமித்து மது குடிப்பதை தவிர்க்கும் விதமாக கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலாளிகள் மேற்பார்வை யில் காவல் பணிகள் தொடரும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×