search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பதி"

    • 7 பவுன் சங்கிலி மற்றும் ரூ.2ஆயிரத்தை தவறவிட்டதாக போலீசில் புகார் அளித்தார்.
    • சாலையில் கிடந்த மணி பர்சை திறந்து பார்த்தனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் தாராபுரத்தை அடுத்த ஆச்சியூரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 80). இவர் தனது மணிபர்சில் வைத்திருந்த 7 பவுன் சங்கிலி மற்றும் ரூ.2ஆயிரத்தை தவறவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தாராபுரத்தை அடுத்த கொழிஞ்சிவாடி,உப்புத்துறைபாளையத்தை சேர்ந்த செல்வராஜ், இவரது மனைவி சாரதா ஆகியோர் தாராபுரம்- கரூர் சாலையில் வந்த போது சாலையில் கிடந்த மணி பர்சை திறந்து பார்த்தனர். அதில் தங்கச்சங்கிலி ரூ.2ஆயிரம் இருந்தது.

    அதனை அந்த தம்பதியினர் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து தாராபுரம் போலீசார் மூதாட்டி லட்சுமியை அழைத்து நகை,பணத்துடன் பர்சை காண்பித்தனர். அது தன்னுடைய நகை, பணம் என அடையாளம்் கூறினார். இதையடுத்து அவரிடம் 7 பவுன் சங்கிலி மற்றும் ரூ.2 ஆயிரத்தை போலீசார் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த நகை மற்றும் பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த செல்வராஜ், சாரதா தம்பதிைய போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.

    • கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடைய உடல் அருகே அழுது கொண்டிருந்த ஐயம்மாள் ஒரு மணி நேரத்தில் கணவன் உடல் மீது மயங்கி விழுந்தார்.
    • கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் தர்மாபுரி சுற்று வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அடுத்துள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தர்மாபுரி புதுகாட்டு வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (90). இவரது மனைவி ஐயம்மாள் (85).

    இருவருக்கும் திருமணம் ஆகி 60 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற மகனும், மாரியம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

    முத்துசாமி, ஐயம்மாள் தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்தனர். முத்துசாமி நெசவுத்தொழில் செய்து வந்தார். ஐயம்மாள் கணவனுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவரை கவனித்து வந்தார்.

    வெளியிடங்களுக்கு போகும் போதும், திருமணம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் போது இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர்.

    இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக இருவரும் வீட்டிலேயே இருந்து வந்தனர். அவர்களை மகனும், மருமகளும் பராமரித்து வந்தனர். சம்பவத்தன்று மதியம் முத்துசாமி உயிரிழந்தார்.

    கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடைய உடல் அருகே அழுது கொண்டிருந்த ஐயம்மாள் ஒரு மணி நேரத்தில் கணவன் உடல் மீது மயங்கி விழுந்தார்.

    உடனே உறவினர்கள் ஐயம்மாளை தூக்கி தண்ணீர் தெளித்தனர். ஆனால் எழுந்திரிக்காம லேயே கணவன் உடல் மீது உயிரைவிட்டார். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரை விட்ட சம்பவம் உறவினர்கள், ஊர்மக்களிடம் துக்கத்தை மேலும் அதிகரித்தது.

    இதனையடுத்து இறந்தவர்கள் உடலை அருகருகே வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரையும் ஒரே ஆம்புலன்சில் ஏற்றி சலங்கபாளையம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்று ஒரே மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

    கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் தர்மாபுரி சுற்று வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வசந்த், கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு சூலூர் அப்பநாயக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.
    • தம்பதியை கார் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரித்து அந்த கும்பலை தேடி வந்தனர்.

    சூலூர்:

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் வசந்த்(41). இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.வசந்த் தனது குடும்பத்தினருடன் சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன், காஸ் சிலிண்டர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கலங்கல் பகுதிக்கு சென்றார்.

    அப்போது அவரை கார் ஒன்று வேகமாக பின்தொடர்ந்து வந்தது. கலங்கல் குட்டை அருகே வந்தபோது கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.மோதிய வேகத்தில் வசந்த் மற்றும் அவரது மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். பின்னர் 2 பேரும் எழுந்திருக்க முயன்றனர்.

    அப்போது காரில் இருந்து 3 பேர் கும்பல் திபு,திபுவென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே இறங்கி, வசந்தை அரிவாளால் வெட்டினர். வலி தாங்க முடியாத அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று வெட்டினர்.இதை பார்த்த வசந்த்தின் மனைவி காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டார். இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தத சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த வசந்த்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தம்பதியை கார் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரித்து அந்த கும்பலை தேடி வந்தனர். மேலும் சி.சி.டி.வி காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது, அந்த கும்பல் செல்லும் கார் திருப்பூர் அமராவதி செக்போஸ்ட் வழியாக சென்ற தகவல் தெரியவரவே போலீசார் திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் குறிப்பிட்ட காரை மறித்து, அதில் இருந்த 3 பேரையும் பிடித்து சூலூர் போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.

    போலீசார் அவர்களை கோவை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்த்தை காரை ஏற்றியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றது தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கருப்புசாமி உத்தமபாளையம் பகுதியில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். மேலும் அவருக்கு தேனியில் ெசாந்தமாக 21 சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை அவரது உறவினர் முருகன் என்பவர் குத்தகைக்கு கேட்டார்.

    அவரும், முருகனுக்கு குத்தகைக்கு விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்புசாமி அந்த நிலத்தை பார்க்க சென்ற போது வசந்த் என்பவர் அங்கு கோழிப்பண்ணை அமைத்து இருந்தார்.

    இதுகுறித்து கருப்புசாமி வசந்த்திடம் சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் விசாரித்து வசந்த்தை அந்த இடத்தை காலி செய்ய வைத்து கருப்புசாமியிடம் ஒப்படைத்தனர். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வசந்த், கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு சூலூர் அப்பநா யக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.

    தன்னை வெட்டியவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே கருப்புசாமி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வசந்த்தை காரை ஏற்றியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கருப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் கைது செய்தனர்.

    ×