search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணை பிரியாத"

    • கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடைய உடல் அருகே அழுது கொண்டிருந்த ஐயம்மாள் ஒரு மணி நேரத்தில் கணவன் உடல் மீது மயங்கி விழுந்தார்.
    • கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் தர்மாபுரி சுற்று வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அடுத்துள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தர்மாபுரி புதுகாட்டு வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (90). இவரது மனைவி ஐயம்மாள் (85).

    இருவருக்கும் திருமணம் ஆகி 60 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற மகனும், மாரியம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

    முத்துசாமி, ஐயம்மாள் தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்தனர். முத்துசாமி நெசவுத்தொழில் செய்து வந்தார். ஐயம்மாள் கணவனுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவரை கவனித்து வந்தார்.

    வெளியிடங்களுக்கு போகும் போதும், திருமணம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் போது இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர்.

    இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக இருவரும் வீட்டிலேயே இருந்து வந்தனர். அவர்களை மகனும், மருமகளும் பராமரித்து வந்தனர். சம்பவத்தன்று மதியம் முத்துசாமி உயிரிழந்தார்.

    கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடைய உடல் அருகே அழுது கொண்டிருந்த ஐயம்மாள் ஒரு மணி நேரத்தில் கணவன் உடல் மீது மயங்கி விழுந்தார்.

    உடனே உறவினர்கள் ஐயம்மாளை தூக்கி தண்ணீர் தெளித்தனர். ஆனால் எழுந்திரிக்காம லேயே கணவன் உடல் மீது உயிரைவிட்டார். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரை விட்ட சம்பவம் உறவினர்கள், ஊர்மக்களிடம் துக்கத்தை மேலும் அதிகரித்தது.

    இதனையடுத்து இறந்தவர்கள் உடலை அருகருகே வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரையும் ஒரே ஆம்புலன்சில் ஏற்றி சலங்கபாளையம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்று ஒரே மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

    கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் தர்மாபுரி சுற்று வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×