search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க தேரோட்டம்"

    • 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகன சேவை.
    • வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    திருமலை:

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகன சேவை, இரவு கருடவாகன சேவை நடந்தது. அதில் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்லக்கு வாகனத்துக்கு அருகில் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உடன் வந்தார்.

     வாகனங்களுக்கு முன்னால் பக்தி பஜனைகளை பாடியபடி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பெண்களும், ஆண்களும் கோலாட்டம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து சிறப்பு கருட வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    • கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • பக்தர்கள் குழுக்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியபடி வந்தனர்.

    திருமலை:

    திருப்பதியில் இருந்து சீனிவாசமங்காபுரத்துக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் கோவிலில் மூலவருக்கும், கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது. திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    விழாவின் 5-வது நாளான நேற்று இரவு 7 மணிக்கு கருடசேவை (கருட வாகன வீதிஉலா) நடந்தது. கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரருக்கும், மூலவர் கல்யாண வெங்கடேஸ்வரருக்கும் அணிவித்து அலங்காரம் செய்வதற்காக நேற்று காலை திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் சன்னதியில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

     ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை ஒரு கூடையில் வைத்து பெரிய ஜீயர் சுவாமி தனது தலையில் சுமந்தபடி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து வெளியே ஊர்வலமாக கொண்டு வந்து அம்பாரி வாகனத்தில் வைத்தார். காலை 6.30 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் எஸ்.வி.கோசம் ரக்ஷன சாலை, தாடித்தோப்பு, பெருமாள்பள்ளி வழியாக சீனிவாசமங்காபுரம் கோவிலை அடைந்தது.

    கோவில் யானை மீது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை வைத்து நான்கு மாடவீதிகளில் ஊர்வலம் நடத்தி மூலவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நான்கு மாடவீதிகளில் யானைகளுக்கு முன்னால் பக்தர்கள் குழுக்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியபடி வந்தனர்.

    கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளில் ஒன்று மூலவருக்கும், மற்றொரு மாலை கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது.

    ஊர்வலத்தில் பெரியஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, துணை அதிகாரிகள் வரலட்சுமி, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தங்க தேரோட்டம்

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை தங்கத்தேரோட்டம் நடக்கிறது. உற்சவர்களான சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    • 2010-ம் ஆண்டு மே மாதம் 2 கோடி ரூபாய் மதிப்பில் தங்க தேர் வெள்ளோட்ட விழா நடந்தது.
    • கடந்த மாதம் 7-ந் தேதி திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சேலம்:

    சேலத்தில் பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 2 கோடி ரூபாய் மதிப்பில் தங்க தேர் வெள்ளோட்ட விழா நடந்தது.

    பக்தர்கள், அரசியல் கட்சியினர் கட்டணத்தை கட்டி தேரை இழுத்து வருவார்கள். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலாலயம் நடைபெற்றது. இதனால் கோவிலில் தங்க தேரோட்ட வீதி உலா மற்றும் திருவிழாக்கள் நடைபெறவில்லை.

    கடந்த மாதம் 7-ந் தேதி திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. இந்த பூஜைகள் வரும் 25-ந் தேதி முடிவடைகிறது. அதன்பின் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெற உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும், மண்டல பூஜை நிறைவுக்கு பிறகு கோவிலில் வழக்கமான பூஜைகள், விழாக்கள் நடைபெறும் என்பதால், பக்தர்கள் கூட்ட நாட்களை தவிர்த்து தங்க தேரோட்ட வீதி உலாவுக்கு, கோவில் நிர்வாகத்தில் முன்னதாக ரூ.2000 கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×