search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Golden Chariot"

    • பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
    • விடுமுறை நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விழா நாட்களிலும், விடுமுறை நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

     இந்த நிலையில் சித்திரை மாதம் 1-ம் நாளான நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி மூலவருக்கும், சம்பந்த விநாயகருக்கும் வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

     பஞ்சாங்கம் வாசித்தல்

    மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கப்படி பால் பெருக்கு நிகழ்ச்சியும், 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்து பஞ்சாங்கத்தை வாசித்து இந்த ஆண்டுக்கான அருணாசலேஸ்வரர் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்தனர்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் தமிழ் புத்தாண்டையொட்டி நகரத்தார் சார்பில் கோவில் வளாகத்தில் தங்க தேர் இழுக்கப்பட்டது. இதில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்தனர். மேலும் கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தாிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை பக்தர்கள் பலர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். நேற்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    ஆரணி

    ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சப்த மாதாக்களுக்கும், அரியாத்தம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல புதுக்காமூர் பகுதியில் உள்ள குழந்தை வரம் அருளும் பெரியநாயகி சமேத புத்திர காமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் வரதராஜ பெருமாள் கோவில், பாப்பாத்தி அம்மன் கோவில், ஆண்டாள் அம்மன் கோவில், கொசப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பூமிநாதர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மேலும் நகராட்சி அருகே உள்ள வீரஆஞ்சநேயர் கோவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்சதீப விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அகல் தீபம் ஏற்றி லட்சதீப வழிபாடு செய்தனர்.

    போளூர்

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு போளூரில் உள்ள கைலாசநாதர் கோவில், சோமநாத ஈஸ்வரர் கோவில், நற்குன்று பாலமுருகன் கோவில், குன்னத்தூர் தண்டபாணி முருகர் கோவில் ஆகிய கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சந்தவாசல் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகன சேவை.
    • வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    திருமலை:

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகன சேவை, இரவு கருடவாகன சேவை நடந்தது. அதில் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்லக்கு வாகனத்துக்கு அருகில் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உடன் வந்தார்.

     வாகனங்களுக்கு முன்னால் பக்தி பஜனைகளை பாடியபடி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பெண்களும், ஆண்களும் கோலாட்டம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து சிறப்பு கருட வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    • கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • பக்தர்கள் குழுக்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியபடி வந்தனர்.

    திருமலை:

    திருப்பதியில் இருந்து சீனிவாசமங்காபுரத்துக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் கோவிலில் மூலவருக்கும், கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது. திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    விழாவின் 5-வது நாளான நேற்று இரவு 7 மணிக்கு கருடசேவை (கருட வாகன வீதிஉலா) நடந்தது. கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரருக்கும், மூலவர் கல்யாண வெங்கடேஸ்வரருக்கும் அணிவித்து அலங்காரம் செய்வதற்காக நேற்று காலை திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் சன்னதியில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

     ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை ஒரு கூடையில் வைத்து பெரிய ஜீயர் சுவாமி தனது தலையில் சுமந்தபடி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து வெளியே ஊர்வலமாக கொண்டு வந்து அம்பாரி வாகனத்தில் வைத்தார். காலை 6.30 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் எஸ்.வி.கோசம் ரக்ஷன சாலை, தாடித்தோப்பு, பெருமாள்பள்ளி வழியாக சீனிவாசமங்காபுரம் கோவிலை அடைந்தது.

    கோவில் யானை மீது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை வைத்து நான்கு மாடவீதிகளில் ஊர்வலம் நடத்தி மூலவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நான்கு மாடவீதிகளில் யானைகளுக்கு முன்னால் பக்தர்கள் குழுக்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியபடி வந்தனர்.

    கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளில் ஒன்று மூலவருக்கும், மற்றொரு மாலை கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது.

    ஊர்வலத்தில் பெரியஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, துணை அதிகாரிகள் வரலட்சுமி, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தங்க தேரோட்டம்

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை தங்கத்தேரோட்டம் நடக்கிறது. உற்சவர்களான சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    • நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
    • சுமார் 250க்கும் மேற்பட்டோர் ரூ.2000 கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தினந்தோறும் மலைக்கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக ரூ.2000 கட்டணம் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

    சாதாரண நாட்களில் சராசரியாக 100 பக்தர்கள் வரை தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள். சித்ரா பவுர்ணமி, மாத கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபாடுவார்கள்.

    இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். சுமார் 250க்கும் மேற்பட்டோர் ரூ.2000 கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர். இதனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் நேற்று முதல் கோர்ட்டு உத்தரவுப்படி செல்போன் மற்றும் கேமராக்களுக்கு கட்டணம் வசூலித்து அவை பாதுகாப்பு அறையில் வாங்கி வைக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் அதிகரித்தது.

    கோவில் பாதுகாப்பு அலுவலர்கள் பக்தர்களிடம் சோதனை நடத்தி செல்போன் மற்றும் கேமராக்களை வாங்கி வைத்தனர். அதனால் கூட்டம் அதிகரித்ததால் சோதனை நடத்துவது நிறுத்தப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கியது.

    இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ் நிலையத்தில் வெளியூர் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    • பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
    • ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்கத் தேரில் 4 மாட வீதிகளில் உலா.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 6-வது நாளான நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இரவு 7 மணிக்கு ஏழுமலையான் கஜ வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார். அப்போது ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த 250 கலைஞர்கள் 4 மாட வீதிகளில் கலை நிகழ்ச்சிகளை செய்து காட்டி பக்தர்களை பரவசப்படுத்தினர்.

    பாண்டிச்சேரி லலிதாம்பிகை கலைக்குழுவை சேர்ந்த 25 கலைஞர்கள் பிரம்மா லட்சுமி நாராயணா பகிரதன் போன்று வேடமணிந்து கலை நிகழ்ச்சி செய்தனர்.

    இதேபோல் கேரளா கலைஞர்கள் பாரம்பரிய உடை அணிந்து கரகாட்டம் ஆடினர். பிரம்மோற்சவ விழா 7-வது நாளான இன்று காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

    மதியம் 1 மணி முதல் 3 வரை வரை ஏழுமலையானுக்கு ஸ்நான திருமஞ்சனம் நடந்தது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஏழுமலையான் சந்திரபிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார்.

    நேற்று ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பி வழிந்தது.

    கிருஷ்ண தேஜா தங்கும் விடுதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். திருப்பதியில் நேற்று 74,884 பேர் தரிசனம் செய்தனர். 32,213 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • தூத்துக்குடி மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேர் பவனி நடக்கிறது.
    • நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் இருந்து சைரன் ஒலிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள உலக புகழ் பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் தேர் தருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தங்கத்தேர் பவனி

    தூத்துக்குடி மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேர் பவனி நடக்கிறது. இந்த பேராலயத்தின் 441-ம் ஆண்டு திருவிழா மற்றும் 16-வது தங்கத்தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பங்குத்தந்தை குமார் ராஜா மற்றும் இறை மக்கள் கலந்து கொண்ட சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

    கொடியேற்றம்

    இதனை தொடர்ந்து பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் இருந்து சைரன் ஒலிக்கப்பட்டது. கொடிமரம் முன்பாக நூற்றுக்கணக்கான சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது.

    நிகழ்ச்சியில் சமூக நலத்துறைதுறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    அன்னைக்கு பொன் மகுடம்

    மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி வருகிற 5-ந் தேதி நடக்கிறது. விழாவையொட்டி அதிகாலை 5.15 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தங்கத்தேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகிறார்.

    அதுபோல் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஜெபம் செய்து தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது.

    தினமும் ஜெபமாலை

    விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். மேலும் இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த தங்கத் தேர் சுமார் 216 ஆண்டுகள் பழமையானதாகும். 53 அடி உயரம் கொண்ட இந்த தேருக்கு, ஜப்பான் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட தங்க தாள்கள், அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட 9 ஆயிரம் வைர கற்கள் ஆகியவை கொண்டு சுமார் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் தங்கத்தேர் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாநகராட்சி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநகராட்சி சார்பில் எம்பரர் தெரு, கெரகோப் தெரு, குருசடி தெரு மற்றும் மனுவேல் ஜேக்கப் லேன் ஆகிய பகுதிகளை சுத்தப்படுத்தி பொதுமக்கள் ஆலயத்திற்கு வந்து செல்வதற்கு ஏற்றவாறு 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா மற்றும் அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

    டி.ஐ.ஜி., எஸ்பி. ஆய்வு

    இன்று தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை மொத்தம் 11-நாட்கள் நடைபெறும் திருவிழாவின் பாதுகாப்பு பணிகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஸ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் ஆலய வளாகம், பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுவதும் பார்வையிட்டு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறுகையில், திருவிழாவிற்காக மாதா கோவில் பகுதி முழுவதும் 50 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 7 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதைபோல் சீருடை இல்லாமல் 110-சிறப்பு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் உயர்மட்ட கோபுரங்கள் சில இடங்களில் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆலயத்திற்கு வரக்கூடியவர்கள் வாகனங்களை நிறுத்த ஆலயம் அருகிலேயே பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. திருவிழாவினை எவ்வித அசம்பாதவிதமும் இல்லாமல் நடைபெ றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யபட்டு உள்ளது என்றார்.

    • முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்கத் தேர் இழுத்தனர்.
    • திருப்பரங்குன்றத்துக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.

    மதுரை

    தமிழக முன்னாள் முதல்வர்-அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின்

    72-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மாவட்டச் செயலாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ.,முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

    இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபாகர், ஜி.ராமமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் உசிலை பிரபு , உசிலம்பட்டி நகர செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு பூஜைகள் செய்து தங்கத்தேர் இழுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்துக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ கருப்பையா, கண்ணன், மகாலிங்கம், கொம்பையா, முத்துராஜ், சிவா, சுந்தரா, துதி.திருநாவுக்கரசு, குருசாமி, கீழமாத்தூர் தங்கராஜ்,சக்திவேல், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெகநாதன் தலைமையில் மாநில மருத்துவர் அணிதுணை செயலாளர் டாக்டர் கிங் முன்னிலையில் நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்தனர்.
    • மாவட்ட இளைஞர்அணி தலைவர் ஆனந்தன், கொங்குநகர் பிரதிநிதி தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனின் 60-வது பிறந்த நாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இருக்கும் சிவன்மலை ஆண்டவர் முருகன் கோவிலில் தங்க தேர் இழுக்கும் விழா மாவட்ட பொருளாளர் சேகர் என்ற ஜெகநாதன் தலைமையில் மாநில மருத்துவர் அணிதுணை செயலாளர் டாக்டர் கிங் முன்னிலையில் நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் கோமதி செல்வராஜ்,மாவட்டக் துணை செயலாளர் சூர்யா செந்தில், மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ரத்தினசாமி, மாவட்ட  பனியன் தொழிலாளர் சங்க செயலாளர் சுரேஷ் ராஜா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குட்வின்பழனிச்சாமி, கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் மாரிமுத்து, மாவட்ட இளைஞர்அணி தலைவர் ஆனந்தன், கொங்குநகர் பிரதிநிதி தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • நடிகர் விஜய் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடினர்.
    • திண்டுக்கல்லில் தங்கத்தேர் எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விஜய் தலைமை இளைஞரணி சார்பில் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தர்மா தலைமையில் கோட்டை மாரியம்மன் கோவிலில் விஜய் பெயருக்கு சிறப்பு பூஜை செய்தும் மற்றும் தங்கத்தேர் இழுத்தும் வழிபாடு செய்தனர்.

    இதில் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


    ×