search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடைகள்"

    • கோடை வெயில் தாகத்தால் ஜில் பீர் விற்பனை சூடு பிடித்தது.
    • வெயிலின் தாக்கத்தால் ஹாட் மதுபானம் குடித்தவர்கள் கூட பீருக்கு மாறினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் பீர் விற்பனை அமோகமாக இருந்தது. குறிப்பாக கூலிங் பீர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

    குறிப்பிட்ட பீர் வகைகள் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோடை வெயில் தாகத்தால் ஜில் பீர் விற்பனை சூடு பிடித்தது. வெயிலின் தாக்கத்தால் ஹாட் மதுபானம் குடித்தவர்கள் கூட பீருக்கு மாறினார்கள்.

    இதனால் ஏப்ரல் மாதத்தில் 20 சதவீதமும், மே மாதத்தில் 25 சதவீதமும், ஜூன் மாதத்தில் 40 சதவீதமும் பீர் விற்பனை அதிகரித்தது.

    இந்த நிலையில் தற்போது ஜில் பீர் விற்பனை குறையத் தொடங்கி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஜில் பீர் விற்பனை சரிந்தது.

    இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த மாதம் பீர் விற்பனை 45 சதவீதம் வரை அதிகரித்தது. அதனால் தட்டுப்பாடு இல்லாமல் மதுபானங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் 'கூலிங்' பீர் விற்பனை குறைந்தது.

    சென்னையில் மட்டும் 20 சதவீதமும், தமிழகம் முழுவதும் 30 சதவீதமும் ஜில் பீர் விற்பனை சரிந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நிர்வாக இயக்குனர் பால சுப்பிரமணியத்திற்கு வந்த புகாரின் பேரில் அதிரடி சோதனை ஒரு வாரமாக நடக்கிறது.

    90 நாட்களுக்கு மேலான உயர் வகை சரக்குகள் கடையில் இருப்பு வைக்க கூடாது, எந்த பிராண்ட் மது அதிகளவு விற்கப்படுகிறதோ அதனை ஒரு வாரம் விற்பனை அளவில் இருப்பு வைக்க வேண்டும்.

    நடுத்தர, குறைந்த ரக மதுபானங்கள் அதிகமாக விற்பனை ஆவதால் அதனை 'இல்லை' என்று சொல்லாமல் இருப்பு வைக்க வேண்டும் என கடை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை, வெளிநபர்கள் வேலைபார்த்தல், சட்ட விரோத பார் செயல்படுதல் போன்றவற்றை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சென்னையில் மட்டும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரம் தெரிவிக்கின்றது.

    • பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு நிறைந்த பகுதிகள், பிரதான சாலை அருகில் மதுக்கடைகளைத் திறப்பதை கைவிட வேண்டும்.
    • மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை மூடவும், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியின் போது டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது தி.மு.க. இப்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின், கருப்பு உடையணிந்துப் போராட்டம் நடத்தினார். ஆனால், ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. திமுக ஆட்சியிலும் புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுவது தொடர்கிறது.

    கடந்த சில மாதங்களாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

    டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அரசுக்கு வருவாயை பெருக்குவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது.

    எனவே, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு நிறைந்த பகுதிகள், பிரதான சாலை அருகில் மதுக்கடைகளைத் திறப்பதை கைவிட வேண்டும். மேலும், ஏற்கனவே மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை மூடவும், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டாஸ்மாக் ஊழியர்களும் முக கவசத்தை சரியான முறையில் அணிந்திருப்பதுடன் அவர்கள் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    • அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    எனவே டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் கடைபிடிக்குமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. எனவே பொது இடங்களில் முக கவசம் அணிவதை கண்டிப்பாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அதிரடி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

    'மாஸ்க்' அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும், மதுவாங்க வருவோரை கூட்டமாக நிற்க அனுமதிக்க கூடாது, இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்துமாறு டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் டாஸ்மாக் ஊழியர்களும் முக கவசத்தை சரியான முறையில் அணிந்திருப்பதுடன் அவர்கள் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட மேலாளர்களும், ஊழியர்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×