search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிகா"

    • படத்தின் டிரெய்லர் காட்சிகள் 2 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஓடியது.
    • சைத்தான் வரும் மார்ச் 8-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

    அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா நடித்த இந்தி படம் 'சைத்தான்'. இது ஒரு திரில்லர் படம் ஆகும். இந்த படத்தில் ஆர்.மாதவன் 'சைத்தான்' வேடத்தில் நடிக்கிறார்.

    இப்படத்தின் டிரெய்லர் காட்சி வெளியீட்டு விழா மும்பையில் இன்று நடந்தது. இதில் நடிகர்கள் அஜய்தேவ்கன், மாதவன், நடிகை ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். 

    விழாவுக்கு வந்த அஜய்தேவ்கன் கருப்பு நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தார். மாதவன் பழுப்பு நிற ஓவர்கோட் அணிந்திருந்தார். ஜோதிகா வழக்கம் போல் பேன்ட்சூட் அணிந்து இருந்தார். 

    படத்தின் டிரெய்லர் காட்சிகள் 2 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஓடியது. பிரமிக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்து இருந்தது.

    'ரோலர்கோஸ்டர்' சவாரிக்கு அழைத்துச்செல்வது போலவும் இருந்தது. முன்னெப்போதும் இல்லாத ஒரு த்ரில்லான அனுபவத்தை டிரெய்லர் அளித்தது. இப்படம் வருகிற மார்ச் 8-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

    • குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
    • 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

    தமிழில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த 'காதல் தி கோர்' படம் திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

    தற்போது குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சைத்தான்' படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

    தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே, இந்தி சினிமாவில் ஜோதிகா நடித்திருந்தார். அந்த வகையில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார். 'சைத்தான்' படத்தில் நடிகர் மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜோதிகா-மாதவன் நடிப்பில் வெளியான 'டும்... டும்... டும்...', 'பிரியமான தோழி' ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.

    அந்தவகையில் மாதவனும், ஜோதிகாவும் இந்தி படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

    • பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை ரசிகர்கள் விரும்ப வேண்டும்.
    • இந்தி, மலையாள மொழிகளில் பெண்களை மையப்படுத்தி படங்கள் இயக்கப்படுகின்றன.

    நட்சத்திர தம்பதிகளான சூர்யா-ஜோதிகாவுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, சமீபத்தில் வெளியான காதல்-தி கோர் படத்தில் மம்முட்டிக்கு மனைவியாக நடித்திருந்தார். படம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் நேர்காணல் ஒன்றில் ஜோதிகா கூறியதாவது:-

    சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் அமைவதற்காக அதிகமாக உழைக்கிறேன். கதாநாயகிகள் 10 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை ரசிகர்கள் விரும்ப வேண்டும். பெரிய கதாநாயகர்களை மட்டும் உயர்த்தி பிடித்தால் கதாநாயகிகள் எப்படி வளர முடியும்?


    புது இயக்குனர்கள் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கின்றனர். பெரிய இயக்குனர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தி, மலையாள மொழிகளில் பெண்களை மையப்படுத்தி படங்கள் இயக்கப்படுகின்றன. தமிழில் அப்படி இல்லாதது வருத்தம். திருமணத்திற்கு பிறகு நான் தமிழ் பேச பழகிவிட்டேன்.

    குழந்தைகளுக்கு நாங்கள் திட்டமிட்டதால் நடிப்பதற்கு சில காலம் இடைவெளி கொடுத்தேன். சினிமாவை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. குழந்தைகளா? சினிமாவா? என்றால் குழந்தைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். ரசிகர்களுக்கு என் மேல் பாசம் இருந்தால் தமிழ்நாடு மருமகள் என்பார்கள்.


    கோபம் வந்தால் இந்திக்காரி என்பார்கள். சமூக வலைதளத்தில் என்னை குஷி ஜோதிகா என்றும் குயின் எனவும் சிலர் கிழவி என்றும் கூறுவார்கள். இதை பற்றி நான் கவலைப்படமாட்டேன். எப்போதும் ஒரே கதாபாத்திரமில்லாமல் வில்லி கதாபாத்திரம் வந்தாலும் நடிப்பேன் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜியோ பேபி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதல்- தி கோர்'.
    • இந்த படத்தை மம்முட்டி கம்பெனி தயாரித்துள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


    தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    காதல் தி கோர் போஸ்டர்

    இந்நிலையில், காதல் - தி கோர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர். மம்முட்டியை கட்டியணைத்தபடி ஜோதிகா இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘காக்க காக்க’.
    • இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனது குறித்து சூர்யா பதிவிட்டுள்ளார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வெளியான படம் 'காக்க காக்க'. இதில் ஜீவன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி அன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் திருப்புமுனை படமாக மாறியிருந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள், வசனங்கள், கதாப்பாத்திரம் என அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடினர்.



    இந்நிலையில் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், "எனக்கு அனைத்தும் கொடுத்த படம் இது. அன்புச்செல்வன் கதாப்பத்திரம் எப்பொழுதும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஜோதிகா தான் இந்தப் படம் குறித்து என்னிடம் முதலில் பேசி இருந்தார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சக நடிகர்கள் மற்றும் உடன் பணியாற்றிய சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. இப்படத்தில் நல்ல பல நினைவுகள் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.



    • விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
    • இப்படம் தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    வெங்கட் பிரபு -விஜய்

    இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.


    தளபதி 68

    இதையடுத்து இப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


    ஜோதிகா -விஜய்

    விஜய் -ஜோதிகா இணைந்து நடித்த 'குஷி', 'திருமலை' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது விஜய்யுடன் ஜோதிகா மீண்டும் நடிக்கவுள்ளதாக பரவிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நடிகர் அஜய் தேவ்கன் தற்போது விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் அஜய் தேவ்கன் நடிப்பில் 'போலா' என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    மாதவன் -அஜய் தேவ்கன்

    இதைத்தொடர்ந்து, நடிகர் அஜய் தேவ்கன் 'குயின்', 'சூப்பர் 30', 'குட் பை' உட்பட பல படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

    ஜூன் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, முசோரி மற்றும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.


    ஜோதிகா

    நடிகை ஜோதிகா கடைசியாக 1998-ஆம் ஆண்டு வெளியான 'டோலி சாஜா கே ரக்னா' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது அஜ்ய தேவ்கன் - மாதவன் நடிக்கும் இப்படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி திரையுலகிற்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நடந்து வருகிறது.

    நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நடந்து வருகிறது.


    கங்குவா படக்குழுவினருடன் சூர்யா -ஜோதிகா

    படப்பிடிப்பிற்கு இடையே தனது மனைவி ஜோதிகா மற்றும் படக்குழுவினருடன் நடிகர் சூர்யா கொடைக்கானலின் இயற்கை அழகை கண்டு ரசித்தார். தற்போது சுற்றுலா பயணிகள் அதிகமாக கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் அவர்கள் பார்வையில் படாதபடி அதிகாலை நேரங்களில் பிரையண்ட் பார்க் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானலுக்கு வரும் போதெல்லாம் இயற்கை அழகை கண்டு ரசிப்பது புதுவித அனுபவத்தை தருவதாகவும், எத்தனை முறை ரசித்தாலும் கண்களுக்கு சலிப்பை தராத இயற்கை காட்சிகள் இங்கு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஜோதிகா.
    • இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


    தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா அவ்வப்போது உடற்பயிற்சி தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.



    இந்நிலையில், தற்போது வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஜோதிகா தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் தலைக்கீழாக நின்று ஒர்க்கவுட் செய்வதை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போய் 'வாவ்' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • சில தினங்களுக்கு முன்பு கீழடி அருங்காட்சியகத்தை சிவக்குமார், சூர்யா-ஜோதிகா பார்வையிட்டனர்.
    • அப்பொழுது மாணவ-மாணவிகளை நீண்ட நேரம் வெளியே காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்தை ஏராளமான திரைபிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது சூர்யாவின் குடும்பத்தினர் அருங்காட்சியத்தின் உள்ளே இருந்ததால் அங்கு வரக்கூடிய மொதுமக்களையும், மாணவர்களையும் வெளியே நீண்ட நேரம் காத்திருக்க வைத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வைரலானது.


    கீழடியை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்
    கீழடியை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்

    இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்ட பின்னர் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கீழடி அருங்காட்சியத்தை பார்ப்பதற்காக வந்தேன். நம் பெருமைகளையும் தரவுகளையும் மிகவும் அழகாக பராமரித்துள்ளனர். இந்த இடத்தை விட்டு வெளியே செல்வதற்கு எனக்கு மனமில்லை. வரலாற்று புகைப்படங்கள், அதன் வழிமுறைகள் கேட்கும்பொழுது இன்னும் சற்று தமிழ் திமிரு தலைக்கேறி நிற்கிறது, பெருமையாக இருக்கிறது.

    இந்த மண்ணுக்கு துரோகமான செயலை இந்த மண்ணுக்குறியவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இந்த மண்ணுக்கு எந்த கெடுதல் நடந்தாலும் அதற்கு எதிராகதான் நாங்கள் நிற்போம். அதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு மக்கள் நீதிமையத்திற்கு இருக்கிறது. மக்கள் நீதி மைய்யத்தின் உறுப்பினராகவும் ஒரு கவிஞனாகவும் எனக்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது என்றார்.


    செய்தியாளர்களை சந்தித்த சினேகன்
    செய்தியாளர்களை சந்தித்த சினேகன்

    மேலும் கீழடியில் சூர்யா குடும்பத்தினர் வந்திருந்த பொழுது மாணவர்களை வெளியே நிற்க வைத்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. வெறும் தகவல்களின் அடிப்படையில் வைத்து பேசுவது சரியாக இருக்காது. அவர் வேண்டும் என்று செய்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எதோ தெரியாமல் இது நடந்திருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். அவர் அப்படி செய்கிறார் ஆள் இல்லை, அப்படி கண்டிப்பாக அவர் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    எனவே இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அன்றைக்கு எனக்கும் அந்த காணொலியை பார்க்கும் பொழுது சின்ன குழந்தைகள் வெளியே நிற்கிறார்களே என்று நானும் வருத்தப்பட்டேன். ஆனால் காட்சியில் பார்த்ததற்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்பதற்கும் வேறு மாதிரியாக இருக்கிறது. எனவே நான் தெரியாமல் தீர்ப்பு சொல்லிவிடகூடாது. இது எல்லோருக்கும் பொதுவானது எனவே அனைவரும் பார்த்து நம் பெருமைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது.
    • இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்தை ஏராளமான திரைப்பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது மதுரை எம்.பி. சு.வெங்க டேசன் உடன் இருந்தார். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கி கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா.
    • தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள காதல் என்பது பொதுவுடமை படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

    2016-ம் ஆண்டு வெளியான லென்ஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். அதன்பின்னர் தி மஸ்கிட்டோ பிலாசபி என்ற படத்தை இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான தலைக்கூத்தல் படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். இதில் சமுத்திரகனி, கதிர், வசுந்தரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

     

    ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தற்போது காதல் என்பது பொதுவுடமை என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் ஜெய் பீம் படத்தில் நடித்து பிரபலமடைந்த லிஜோமோல் நடிக்கிறார். மேலும் ரோகிணி, வினித், அனுஷா மற்றும் தீபா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

     

    இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகை ஜோதிகா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல, அது இரண்டு இதயம் சார்ந்தது. காதலையும் அன்பையும் மட்டுமே மதித்து காதலர் தினத்தை கொண்டாடுவோம் என குறிப்பிட்டு காதல் என்பது பொதுவுடமை படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    ×