search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைடிஷ்"

    • பன்னீரில் அதிகம் கால்சியம் இருப்பதால் பற்கள், எலும்புகளை வலுவாக்க உதவும்.
    • பன்னீரில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 200 கிராம்,

    பெரிய வெங்காயம் -3,

    தக்காளி - 4,

    இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,

    மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்,

    தனியா தூள் - 1 டீஸ்பூன்,

    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்,

    வெண்ணெய் - 50 கிராம்,

    ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்

    காய்ந்த வெந்தயக் கீரை - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பன்னீரை சிறு துண்டுளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை 'ஸிம்'மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

    பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.

    கடைசியாக, பன்னீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.

    ஃப்ரெஷ் கிரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.

    குழந்தைகள் விரும்பும் சத்தான சைடிஷ், இந்த பன்னீர் பட்டர் மசாலா!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • தோசை, சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    கனவா மீன் - அரை கிலோ

    வெங்காயம் - 1 சிறியது

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    சீரக தூள் - அரை தேக்கரண்டி

    தனியா தூள் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்

    கறிவேப்பிலை

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * வெங்காயம், சின்ன வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கனவா மீனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்..

    * கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கி, பின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.

    * பின்பு கால் கப் தண்ணீர் ஊற்றி மசாலாவில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.

    * அடுத்து ஊறவைத்த கனவா மீனை சேர்த்து கலந்துவிடவும்.

    * பின்பு கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.

    * கடைசியாக கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்து இறக்கவும்.

    * கனவா மீன் மசாலா தயார்!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கடைகளில் வாங்கும் பீனட் பட்டரில் நன்மைகள் குறைவு.
    • இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.

    தேவையான பொருட்கள்

    வறுத்த வேர்க்கடலை - 2 1/2 கப்

    உப்பு - 1 சிட்டிகை

    தேன் - 2 தேக்கரண்டி

    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

    செய்முறை:

    * மிக்சியில் 1/2 கப் வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

    * அதே மிக்சியில் 2 கப் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    * அடுத்து எண்ணெய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * பிறகு அதில் தேன், உப்பு, சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து கொள்ளவும்.

    * கடைசியாக கொரகொரப்பா பொடித்த வேர்க்கடலையை சேர்த்து ஒரு முறை மிக்சியில் சுற்றி கொள்ளவும்.

    * இப்போது சுவையான பீனட் பட்டர் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சாம்பார், தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேனைக்கிழங்கு - 250 கிராம்

    துருவிய தேங்காய் - கால் கப்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * சேனைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி நன்றாக கழுவிக்கொள்ளவும்.

    * சேனைக்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    * பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சாம்பார் தூள் சேர்த்து சில நொடிகள் வறுத்து, வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து, சிறிது உப்பைத் தூவி நன்கு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

    * கிழங்குடன் மசாலா அனைத்தும் ஒன்று சேர்ந்ததும், அதில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வெந்தய கீரை கூட்டு, மிகவும் சத்தான, சுவையான கூட்டு.
    • சூடான சாதத்தில் இந்த கூட்டு, நெய் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    வெந்தய கீரை - 2 கப்

    பாசி பருப்பு - 5 மேஜைக்கரண்டி

    தேங்காய் - கால் கப்

    சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    உப்பு - தேவைக்கேற்ப

    சர்க்கரை - 1/4 தேக்கரண்டி

    தாளிக்க

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    சின்ன வெங்காயம் -7

    செய்முறை

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசி பருப்பை நன்றாக கழுவி 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 2 விசில் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

    வெந்தய கீரையை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

    சிறிது தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் வெந்தய கீரை, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும்.

    தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    வெந்த கீரை வெந்ததும் அதில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காயையும் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்த பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமானவுடன் கூட்டில் சேர்த்து கலக்கவும்.

    இப்போது சூப்பரான வெந்தய கீரை பருப்பு கூட்டு ரெடி.

    அறவே கசப்புத்தன்மை தெரியாது. எந்த சாதத்துடனும் தொட்டு சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நார்த்த‌ங்காயை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம்.
    • மலச்சிக்கல், சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது நார்த்தங்காய்.

    தேவையான பொருட்கள் :

    நார்த்தங்காய் - 5,

    வெல்லம் - 250 கிராம்,

    பச்சை மிளகாய் - 4,

    தனி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,

    கடுகு - கால் டீஸ்பூன்,,

    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    * நார்த்தங்காயின் தோல், கொட்டைகளை நீக்கி, சுளைகளை எடுத்து பொடியாக நறுக்கவும்.

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், நார்த்தங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.

    * வடிகட்டி வைத்த வெல்லத்தை சேர்க்கவும்.

    * எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    * அவ்வளவு தான் சூப்பரான நார்த்தங்காய் பச்சடி ரெடி.

    * நன்றாக ஆறியதும் காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.
    • கொள்ளு அதிக சூடு நிறைந்தது. தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.

    தேவையான பொருட்கள்

    கொள்ளு - 1 கப்,

    பெரிய வெங்காயம் - 1,

    தக்காளி - 1,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,

    மல்லித்தூள் - 1 தேக்கரண்டி,

    மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,

    கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - 1 தேக்கரண்டி,

    கொத்தமல்லித்தழை - சிறிது.

    செய்முறை

    * கொள்ளுவை மலர வேகவிடவும்.

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி குழைய வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.

    * சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும், உப்புப்போடவும்.

    * வேக வைத்த கொள்ளுவை ஓரளவு மசித்து சேர்க்கவும்.

    * மசாலா திக்கான பதம் வந்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறலாம்.

    * இப்போது சூப்பரான கொள்ளு மசாலா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
    • இந்த தொக்கு 2 நாட்கள் வரை கெட்டு போகாது.

    தேவையான பொருட்கள் :

    நாட்டுத் தக்காளி - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)

    உரித்த மலைப்பூண்டு - 15 பற்கள்,

    இளம் இஞ்சி - 25 கிராம்,

    மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்,

    கடுகு - ஒரு டீஸ்பூன்,

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,

    நல்லெண்ணெய் - 100 கிராம்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் பூண்டு, துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு சற்று வதங்கியதும் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். இல்லையெனில் அடி பிடித்து விடும்.

    தொக்கு திரண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாம்பழத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாம்பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தித்திப்பான பழுத்த மாம்பழம் - 1,

    சர்க்கரை - 1 கப்,

    மாம்பழ எசன்ஸ் - சில துளிகள்,

    இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,

    எலுமிச்சை பழம் - 1.

    செய்முறை:

    மாம்பழத்தை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். (விருப்பப்பட்டால் சிறிய துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளலாம்.

    அடுப்பில் அடி கனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயை வைத்து மாம்பழத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து 25 நிமிடங்கள் மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.

    மாம்பழ கலவை திக்கான பதம் வரும் போது இஞ்சி துருவல், மாம்பழ எசன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி விடவும்.

    இஞ்சி பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை 'சிம்'மில் வைத்தால் அடிபிடிக்காது).

    நன்றாக ஆறியதும் கண்ணாடி டப்பாவில் போட்டு வைக்கவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ ஜாம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இது பூரி, சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சூப்பரா இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    நீண்ட கிளி மூக்கு மாங்காய் - 3,

    சர்க்கரை - 100 கிராம்,

    தோல் நீக்கி, துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,

    உப்பு - கால் டீஸ்பூன்,

    தேன் - 1 டீஸ்பூன்.

    செய்முறை:

    மாங்காய்களைக் கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    இத்துடன் இஞ்சித் துருவல் உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஒரு ஜாடியில் போட்டு, வெள்ளைத் துணியால் வாய்க்கட்டு கட்டி, நல்ல வெயிலில் ஒரு வாரம் வைத்து எடுக்கவும்.

    மாந்துருவல் பாகு போல் ஆனதும் தேன் சேர்த்துக் கிளறவும்.

    இப்போது சூப்பரான மாங்காய் முரப்பா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாங்காய் வைத்து சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    துருவிய தேங்காய் - ஒரு கப்,

    தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,

    பச்சை மிளகாய் - 2,

    கடுகு - கால் டீஸ்பூன்,

    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி கலந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பிஷ் ஃபிங்கர்ஸ் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
    • இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    வஞ்சரம் (அ) வவ்வால் மீன் - அரை கிலோ

    எலுமிச்சை பழம் - இரண்டு (சாறு எடுக்கவும்)

    ரொட்டித்தூள் - 1௦௦ கிராம்

    காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரணடி

    முட்டை - மூன்று

    வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    எண்ணெய் - தேவைகேற்ப

    செய்முறை

    முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும்.

    பின்னர் மீனை விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

    மிளகு தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

    எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் போடவும்.

    மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி.

    ×