search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள் பேரணி"

    • செஸ் ஒலிம்பியாட்போட்டி சிவகாசி-குற்றாலத்திற்கு சைக்கிள் பேரணி சென்ற கல்லூரி மாணவர்களை ராஜபாளையத்தில் வரவேற்றனர்.
    • 240 கி.மீ. தூர சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார்கல்லூரியின் உடற் கல்வியியல் துறை மாணவர்கள் 210 பேர் தமிழக அரசு சார்பாக மாமல்லபுரத்தில்நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றியவிழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த திட்டமிட்டனர்.

    இதைத்தொடர்ந்து சிவகாசியில் இருந்து குற்றாலம் வரை 240 கி.மீ. தூர சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக ராஜபாளையம் வந்தடைந்தது.

    ராஜபாளையம் அன்ன ப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் வைத்து தாளாளர்

    என். ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் உடற்கல்வி மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் தளவாய்புரம், முகவூர், தேவதானம்

    • உடல் ஆரோக்கியம் குறித்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • தேவதாஸ் மருத்துவமனை இயக்குனர் சதீஷ் தேவதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி சார்பில் சைக்கிள் பயணத்தால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடந்தது. திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளத்தில் இருந்து கண்டு குளம் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பயணம் நடந்தது. இதில் மாணவ-மாணவிகளும், மற்ற பள்ளி மாணவர்கள், பெற்றோர்களும் பங்கேற்றனர். தேவதாஸ் மருத்துவமனை இயக்குனர் சதீஷ் தேவதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தாளாளர் மதிவாணன், ஷாலினி முன்னிலை வகித்தனர். முதல்வர் கீதா ராணி, அகாடமி இயக்குனர் சத்யா, உடற் கல்வி ஆசிரியர் முத்தையா ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கண்டு குளத்தில் உள்ள பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்களுக்கு நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

    • 200க்கும் மேற்பட்ட சைக்கிள் ரைடர்கள் கலந்து கொண்டு 30 கிலோமீட்டர் வரை சைக்கிளில் பேரணியாகச் சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    திருப்பூர்:

    சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28ந்தேதி முதல் ஆகஸ்ட் 10ந்தேதி வரை 44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது . செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் நிர்வாகம் ,திருப்பூர் ரைடர்ஸ் கிளப் மற்றும் இந்தியன் யங் அமைப்பு சார்பில் திருப்பூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட சைக்கிள் ரைடர்கள் கலந்து கொண்டு 30 கிலோமீட்டர் வரை சைக்கிளில் பேரணியாகச் சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பாலாஜி நகர், திருப்பாலைத்துறை, பி.டி.ஓ அலுவலகம் காலனி சாலை ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • சைக்கிள் பேரணி பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தூய்மையை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்தது.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சி யில் நகரங்களின் தூய்மை க்கான மக்கள் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா, நீர்நிலைகள் தூய்மை பணி மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்தி கேயன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பாலாஜி நகர், திருப்பா லைத்துறை, பி.டி.ஓ அலுவ லகம் காலனி சாலை ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சைக்கிள் பேரணி பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தூய்மையை வலியுறு த்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்தது. திருப்பா லைத்துறை பாலைவனநாதர் கோவில் சாலையிலிருந்து பெரியார் சிலை வரைக்கும் வடிகால் தூர் வாரும் பணி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூர் தி.மு.க. செயலாளர் கபிலன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், முத்து மேரி, தேன்மொழி, கீர்த்தி வாசன், புஷ்பா, சமீரா பர்வீன் ஜாஃபர் அலி பிரகாஷ், விஜயா, கெஜலட்சுமி, கோட்டையம்மாள், துரைமுருகன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சிபணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • 189 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
    • சைக்கிள் பேரணி மார்த்தாண்டம், தக்கலை வழியாக பார்வதிபுரம் சந்திப்பு வரை சென்றது. சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    கன்னியாகுமரி :

    44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்தியாவில் முதல் முறையாக அரங்கேறும் செஸ் ஆட்டத்தில் மிக உயரிய போட்டியான இதில் இந்தியா, அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், நெதர் லாந்து உட்பட 189 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    ஆகவே இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. இன்னொரு பக்கம் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் என நடைபெற்று மக்களை ஈர்த்து வருகிறது.

    இந்தப் போட்டியை சிறப்பாகவும் என்றென்றும் நினைவில் நிற்கும் வகையில் வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் இருந்து செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். பொறியாளர் பேரின்பம் முன்னிலை வகித்தார்.

    இந்த சைக்கிள் பேரணி மார்த்தாண்டம், தக்கலை வழியாக பார்வதிபுரம் சந்திப்பு வரை சென்றது. சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் டி.பி.ராஜன், குழித்துறை நகர இளைஞரணி அமைப்பாளர் ஆசாத் அலி, கிறிஸ்டோபர், மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல், விளவங்கோடு தாலுகா செஸ் அசோசியேசன் தலைவர் சிவராஜ், நகராட்சி மேலாளர் ஜெயின் பெல்லார்மின், ஸ்டான்லி, குழித்துறை நகராட்சி வழக்கறிஞர் ஷாஜி குமார், கவுன்சிலர்கள் விஜூ, ரீகன், ரோஸ்லெட், ஷாலின் சுஜாதா, , பெர்லின் தீபா, ரவி உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • நான்கு இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடியேற்றப்பட்டு, 14வது துவக்க தின விழா கொண்டாடப்பட்டது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர் அஹமது முன்னிலை வகித்தார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் 14- ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு மங்கலத்தில் கொடியேற்று விழா மற்றும் பேரணி நடைபெற்றது. மங்கலம் அருகே உள்ள வடுகன்காளிபாளையத்தில் இருசக்கர வாகன பேரணி ஆரம்பித்து அக்ரஹாரப்புத்தூர், மங்கலம் வழியாக பல்லடத்தில் முடிவடைந்தது. மேலும் ரம்யா கார்டன், அக்ரஹாரபுத்தூர், மங்கலம், பல்லடம் உள்ளிட்ட நான்கு இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடியேற்றப்பட்டு, 14வது துவக்க தின விழா கொண்டாடப்பட்டது.

    எஸ்.டி.பி.ஐ., கட்சியின் பல்லடம் தொகுதி பொருளாளர் நாசர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கோவை மண்டலத் தலைவர் ராஜா உசேன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்டத்தலைவர் ஹாரிஸ் பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர் அஹமது முன்னிலை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் முகமது ரபிக், எஸ்.டி.டி.யு. தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக், எஸ்.டி.டி.யு, மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், எஸ்.டி.டி.யு. துணைத் தலைவர் நாகூர் மீரான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பல்லடம் தொகுதி தலைவர் யாசர் அரபாத், பல்லடம் தொகுதி துணை தலைவர் அபுதாஹீர் மற்றும் தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×