search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் மோட்டார் சைக்கிள் பேரணி
    X

    மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்ற காட்சி

    எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் மோட்டார் சைக்கிள் பேரணி

    • நான்கு இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடியேற்றப்பட்டு, 14வது துவக்க தின விழா கொண்டாடப்பட்டது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர் அஹமது முன்னிலை வகித்தார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் 14- ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு மங்கலத்தில் கொடியேற்று விழா மற்றும் பேரணி நடைபெற்றது. மங்கலம் அருகே உள்ள வடுகன்காளிபாளையத்தில் இருசக்கர வாகன பேரணி ஆரம்பித்து அக்ரஹாரப்புத்தூர், மங்கலம் வழியாக பல்லடத்தில் முடிவடைந்தது. மேலும் ரம்யா கார்டன், அக்ரஹாரபுத்தூர், மங்கலம், பல்லடம் உள்ளிட்ட நான்கு இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடியேற்றப்பட்டு, 14வது துவக்க தின விழா கொண்டாடப்பட்டது.

    எஸ்.டி.பி.ஐ., கட்சியின் பல்லடம் தொகுதி பொருளாளர் நாசர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கோவை மண்டலத் தலைவர் ராஜா உசேன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்டத்தலைவர் ஹாரிஸ் பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர் அஹமது முன்னிலை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் முகமது ரபிக், எஸ்.டி.டி.யு. தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக், எஸ்.டி.டி.யு, மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், எஸ்.டி.டி.யு. துணைத் தலைவர் நாகூர் மீரான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பல்லடம் தொகுதி தலைவர் யாசர் அரபாத், பல்லடம் தொகுதி துணை தலைவர் அபுதாஹீர் மற்றும் தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×