search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்யது ஹமீதா கல்லூரி"

    • செய்யது ஹமீதா கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    முகம்மது சதக் அறக்கட்டளையின் பொன் விழாவினை முன்னிட்டு கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் தவசலிங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஹமிதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நாசர் வாழ்த்த பேசினார்.

    கீழக்கரை அல்பைனா பள்ளி ஆசிரியை முகமது ஜெய்லானி, சாயல்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மொத்தம் 50 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ், பொன்விழா கேடயம் ஆகியவை வழங்கி கவுரவிக்கப்பட்டது. முடிவில் பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார். பேராசிரியை ஜக்கினா ஆமினா, சுபேர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் தொழில் முனைவோர் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மை துறை தலைவர் அஜ்மல் கான் துறை சார்ந்த பேராசிரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பாக தொழில் முனைவோ ருக்கான வணிக யோசனைகள் குறித்த நிகழ்ச்சி கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் கலந்து கொண்டு தொழில் மேம் பாட்டு செயல்முறையின் 6 படிகளான யோசனை உருவாக்கம், சந்தை ஆராய்ச்சி, சாத்தியக்கூறு ஆய்வு, வணிகத் திட்டம், நிறுவன தொடக்கம் மற்றும் வளர்ச்சி குறித்து மாணவ- மாணவிகளிடையே உரை யாற்றினார்.

    இளம் தொழில் முனை வோரான சிலம்பரசன் பேசுகையில், தொழில் முனைவோர் திறன்களை வளர்ப்பதற்கு தொடர்ந்து கல்வி மற்றும் அறிவு தேவைப்படுகிறது. உங்கள் தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்து வதற்கான சிறந்த வழி,புதிய தகவல்களையும் உத்வேகத்தையும் தொடர்ந்து தேடுவதே ஆகும் என அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மை துறை தலைவர் அஜ்மல் கான் துறை சார்ந்த பேராசி ரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.

    • தேசிய விளையாட்டு விழா நடந்தது.
    • நலப்படுத்திட்ட அலுவலர்கள் சுலைமான், சதாம் உசேன், முனிய சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இந்திய தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கி பேசுகையில், இந்தியாவின் சிறந்த ஆக்கி வீரராக திகழ்ந்த தயான்சந்த் நினைவாக அவரது பிறந்த நாளான ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் விளையாட்டு வீரர்களை கவுரவிக்க அர்ஜுனா விருது, ராஜிவ் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சதுரங்கம், வாலிபால், டேபிள் டென்னிஸ், யோகா, கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம், நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர்கள் சுலைமான், சதாம் உசேன், முனிய சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • செய்யது ஹமீதா கல்லூரியில் கற்றல் முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • பேராசிரியர் முகமது ஆசாத் பெயிக் பேராசிரியர் நஜ்முதீன் உள்பட பலர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரபிக் துறை சார்பாக அரபு மொழியின் தனித்தன்மை மற்றும் கற்றல் முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அரபிக் துறை பேராசிரியர் செய்யது முஹம்மது இலியாஸ் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே அரபி கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அரபிக் துறை தலைவர் முகைதீன் அப்துல் காதீர்,பேராசிரியர் முகமது ஆசாத் பெயிக் பேராசிரியர் நஜ்முதீன் உள்பட பலர் செய்திருந்தனர்.

    ×