search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் முனைவோர்"

    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் தொழில் முனைவோர் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மை துறை தலைவர் அஜ்மல் கான் துறை சார்ந்த பேராசிரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பாக தொழில் முனைவோ ருக்கான வணிக யோசனைகள் குறித்த நிகழ்ச்சி கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் கலந்து கொண்டு தொழில் மேம் பாட்டு செயல்முறையின் 6 படிகளான யோசனை உருவாக்கம், சந்தை ஆராய்ச்சி, சாத்தியக்கூறு ஆய்வு, வணிகத் திட்டம், நிறுவன தொடக்கம் மற்றும் வளர்ச்சி குறித்து மாணவ- மாணவிகளிடையே உரை யாற்றினார்.

    இளம் தொழில் முனை வோரான சிலம்பரசன் பேசுகையில், தொழில் முனைவோர் திறன்களை வளர்ப்பதற்கு தொடர்ந்து கல்வி மற்றும் அறிவு தேவைப்படுகிறது. உங்கள் தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்து வதற்கான சிறந்த வழி,புதிய தகவல்களையும் உத்வேகத்தையும் தொடர்ந்து தேடுவதே ஆகும் என அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மை துறை தலைவர் அஜ்மல் கான் துறை சார்ந்த பேராசி ரியர்கள், மாண வர்கள் செய்திருந்தனர்.

    ×