செய்யது ஹமீதா கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

செய்யது ஹமீதா கல்லூரியில் கற்றல் முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பேராசிரியர் முகமது ஆசாத் பெயிக் பேராசிரியர் நஜ்முதீன் உள்பட பலர் செய்திருந்தனர்.
செய்யது ஹமீதா கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
Published on

கீழக்கரை

கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரபிக் துறை சார்பாக அரபு மொழியின் தனித்தன்மை மற்றும் கற்றல் முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அரபிக் துறை பேராசிரியர் செய்யது முஹம்மது இலியாஸ் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே அரபி கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அரபிக் துறை தலைவர் முகைதீன் அப்துல் காதீர்,பேராசிரியர் முகமது ஆசாத் பெயிக் பேராசிரியர் நஜ்முதீன் உள்பட பலர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com