search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டையன்"

    • திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும்.
    • திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம். எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வழியில் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டு காலம் தமிழகம் வியக்கத்தக்க வகையில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பல மாற்றங்களை துறைதோறும் உருவாக்கி சிறந்த முறையில் ஆட்சி நடத்தினார்.

    பழகுவதற்கு எளிமையானவர். பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை பொதுமக்கள், கழகத்தினர் போற்றும் அயராத உழைப்பினால் எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

    அவரது தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களத்தில் முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றோம். கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. யாராலும் தகர்க்க முடியாது. அவரது தலைமையில் இன்று பணியை ஆற்றுகின்றோம்.

    அனைத்து பகுதிகளிலும் தேர்தல் களம் கண்டவர்கள் வந்துள்ளனர். பல தேர்தலை சந்தித்தவர்கள் பணியாற்றுகின்றார்கள். தேர்தல் களத்தில் அமைதியோடு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம்.

    இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.

    ஆகவே களத்தில் பணிகளை சிறப்போடு, அமைதியோடு செய்து வருகின்றோம். சரியான முறையில் கழகத்தின் சார்பாக எடப்பாடி தலைமையில் சரியான முறையில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் களத்தில் அந்த பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம்.

    இரட்டை இலை சின்னம் வழக்கை பொறுத்தவரை நீதித்துறையில் என்னென்ன தேவையோ அதை பூர்த்தி செய்து செயல்பட்டு வருகிறோம். அச்சமின்றி தேர்தல் பணி செய்கிறோம். தெளிவாக 98.5 சதவீத பேர் ஒரு மனதாக பொதுச்செயலாளரை தேர்வு செய்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் செயலாற்றுகிறோம். முழு மனதோடு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம்.

    4 அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறாது. தேர்தல் களத்தில் மனு தாக்கல் தொடங்கி முடிய கால அவகாசம் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதையும் ஆய்வு செய்து வருகின்றோம். முழுமையாக ஆய்வு செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார். குருச்சேத்திர யுத்தத்தை போல் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணி, தனித்து போட்டி குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதம் குறித்த கேள்விக்கு விரைவில் அறிவிக்கப்படுவார் என்று பதில் அளித்தார்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மூலம் வேட்பாளர் அறிவிக்கப்படும்போது களம் இன்னும் வேகமாக இருக்கும்.
    • நாங்கள் வீடு வீடாக சென்று களப்பணி ஆற்றும்போது மாற்றம் தேவை என வெளிப்படையாக மக்கள் கூறி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிழக்கு தொகுதி தேர்தல் பணி களத்தில் அ.தி.மு.க.வின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல்வேறு தேர்தல் களம் கண்டவர்கள். எனவே தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். அ.தி.மு.க.வை பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கை எட்டுவதற்கு அயராது பணிகளை செய்து வருகிறோம்.

    எனவே எங்களது களப்பணி என்பது வரலாற்றில் இல்லாத வகையில் அமைய உள்ளது. அதற்கான அறிவுரைகளை எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளை அழைத்துப் பேசி 2 முறை வழங்கியுள்ளார். மேலும் வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் இந்த தேர்தல் செங்கோட்டை வியக்கத்தக்க அளவிற்கு எதிர்காலத்தில் மாற்றத்தை உருவாக்க இருக்கிறது. இந்த குரல் டெல்லி செங்கோட்டைக்கு ஒலிக்க இருக்கிறது.

    அ.தி.மு.க. எத்தனை அணிகளாக பிரிந்து இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்திருப்பதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவர்கள் (தி.மு.க) மாடியில் இருந்து மக்களை பார்கிறார்கள், அ.தி.மு.க.வினர் மக்களோடு இருந்து மக்களை பார்கிறோம். வெற்றி என்பது எங்கள் லட்சியத்தின் இலக்காக உள்ளது.

    ஒவ்வொரு இயக்கத்தினரும் தங்களுக்கான கொள்கை முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் ஆட்சி மன்ற குழு தலைநகரில் தான் நடைபெறும். பிரச்சாரத்திற்கு தடைகள் இல்லை. அ.தி.மு.க மெகா கூட்டணியுடன் இணைந்து பிரச்சார பணிகளை மேற்கொள்ள உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மூலம் வேட்பாளர் அறிவிக்கப்படும்போது களம் இன்னும் வேகமாக இருக்கும். ஆதரவு கேட்ட கட்சியின் நிலைப்பாடு குறித்து 2, 3 நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். மக்களை பொறுத்தவரை மாற்றத்தை விரும்புகிறார்கள். நாங்கள் வீடு வீடாக சென்று களப்பணி ஆற்றும்போது மாற்றம் தேவை என வெளிப்படையாக மக்கள் கூறி வருகின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.ஜி.ஆர். தலைமையில் திண்டுக்கல்லில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போன்று இந்த தேர்தலிலும் எடப்பாடி தலைமையில் நாம் வெற்றி பெறுவோம்.
    • 98.5 சதவீத பேர் ஒரே அணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுகிறோம்.

    ஈரோடு:

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா ஏன் உலகில் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்களும் இந்த இடைத்தேர்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர். தலைமையில் திண்டுக்கல்லில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போன்று இந்த தேர்தலிலும் எடப்பாடி தலைமையில் நாம் வெற்றி பெறுவோம். இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கி காட்டும். அ.தி.மு.க. கூட்டணியில் யார்? யார் ? இருக்கிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி இன்னும் 3 நாட்களில் அறிவிப்பார். 98.5 சதவீத பேர் ஒரே அணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுகிறோம்.

    இந்த தேர்தலில் சரித்திர வெற்றி பெறுவோம். இதனை நம்பி நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறோம். எங்களது வேகம், விவேகம் மக்களை சந்திக்கும் விதம் போக போக உங்களுக்கே தெரியும். இன்று முதல் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறோம். அவர்கள் மனநிலை குறித்தும் தெரிந்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உங்களுக்கு ஆதரவு அளிக்குமா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார். இதேப்போல் இரட்டை இலை சின்னம் உங்களுக்கு கிடைக்குமா என்ற கேள்விக்கும் கேள்விக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள பணிக்குழு அமைப்பு.
    • அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் அடங்குவர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவில் 106 நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கீழ்க்கண்டவர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.

    அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண் முகம், செம்மலை,

    தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, விஜயபாஸ்கர், கடம்பூர் சி.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, பென்ஜமின், கருப்பசாமி பாண்டியன், கழக அமைப்பு செயலாளர் நா.பாலகங்கா, கழக இலக்கிய அணிச் செயலாளர் வைகைச் செல்வன், எஸ்.ஆர்.விஜய குமார், சி.த.செல்லப்பாண்டி யன், செ.தாமோதரன், இசக்கி சுப்பையா, ஆதிராஜாராம், வாலாஜாபாத் பா.கணேசன், எம்.சி.சம்பத், கே.சி.கருப்பணன், எம்.ஆர். விஜய பாஸ்கர், எஸ்.பி. சண்முக நாதன், மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, எஸ்.ஆர். ராஜேஷ், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, தி.நகர். சத்தியா, எம்.கே.அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், சிறுணியம் பலராமன், வி.அலெக்சாண்டர், தஞ்சை கணேச ராஜா, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், ஜாண்தங்கம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் இடம் பெற்று உள்ளன.

    • அ.தி.மு.க.வால் தனித்து நிற்கவும் முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
    • நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை.

    அட... செங்கோட்டையனா இது? இவரது அற்புதமான பேச்சை கேட்டு எவ்வளவு காலம் ஆச்சு... என்று அவரது பேச்சை கேட்டு ஈரோட்டு அரங்கில் விசில் பறந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம்தான் அது. அந்த கூட்டத்தில் பேசும்போது, "நமது மண் திராவிட மண், ஒடுக்கப்பட்ட மக்களை தட்டி எழுப்பியவர் தந்தை பெரியார். பெரியாருக்கு பிறகு அண்ணா தனது எழுத்து ஆற்றலால் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பி ஒடுக்கப்பட்டவர்களும் கோட்டைக்கு வரலாம் எனக் காட்டினார். அவர்கள் வழியில் வந்த எம்ஜிஆர் மாபெரும் புரட்சியை உருவாக்கினார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று அதற்கடுத்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரை முதல்வராக அமர வைக்கும் வரை தொண்டர்கள் உழைக்க வேண்டும்.

    அ.தி.மு.க. கூட்டத்தைக் கூட்டினால் எந்தக் கட்சியும் நம்முடன் போட்டியிட முடியாது. தமிழகத்தில் தனித்து நிற்கிறோம் என எந்தக் கட்சியையாவது சொல்லச் சொல்லுங்கள். ஆனால் அ.தி.மு.க.வால் தனித்து நிற்கவும் முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை. சில வெட்டுக்கிளிகளும், வேடந்தாங்கல் பறவைகளும், சில பட்டுப்பூச்சிகளும், பருவகாலச் சிட்டுகளும் அதிமுகவை விட்டுச் சென்றாலும் யாராலும் வீழ்த்த முடியாது, காற்றை சுவர் எழுப்பித் தடுக்க முடியாது, கடலை அணை போட்டுத் தடுக்க முடியாது' என மூச்சுவிடாமல் பேசினார் செங்கோட்டையன்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணன் இப்படி கம்பெடுத்து சுற்றுகிறாரே? என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அப்போதுதான் கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள் எடப்பாடிக்கு வந்த நெருக்கடியை பயன்படுத்தி பல பதவிகள் வாங்கி கொண்டார்கள். உங்கள் கையை பிடித்து அரசியலுக்கு வந்தவர்களை எங்கேயோ போய்விட்டார்கள் பாருங்கள். நீங்கள் இப்படியே இருந்தால்... என்று உசுப்பேற்றி இருக்கிறார்கள்.

    அதை கேட்டு யோசித்த பிறகுதான் தானும் தன் இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செங்கோட்டையன் விசுவரூபம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    ×