search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கோட்டையனின் விசுவரூபம்
    X

    செங்கோட்டையனின் விசுவரூபம்

    • அ.தி.மு.க.வால் தனித்து நிற்கவும் முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
    • நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை.

    அட... செங்கோட்டையனா இது? இவரது அற்புதமான பேச்சை கேட்டு எவ்வளவு காலம் ஆச்சு... என்று அவரது பேச்சை கேட்டு ஈரோட்டு அரங்கில் விசில் பறந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம்தான் அது. அந்த கூட்டத்தில் பேசும்போது, "நமது மண் திராவிட மண், ஒடுக்கப்பட்ட மக்களை தட்டி எழுப்பியவர் தந்தை பெரியார். பெரியாருக்கு பிறகு அண்ணா தனது எழுத்து ஆற்றலால் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பி ஒடுக்கப்பட்டவர்களும் கோட்டைக்கு வரலாம் எனக் காட்டினார். அவர்கள் வழியில் வந்த எம்ஜிஆர் மாபெரும் புரட்சியை உருவாக்கினார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று அதற்கடுத்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரை முதல்வராக அமர வைக்கும் வரை தொண்டர்கள் உழைக்க வேண்டும்.

    அ.தி.மு.க. கூட்டத்தைக் கூட்டினால் எந்தக் கட்சியும் நம்முடன் போட்டியிட முடியாது. தமிழகத்தில் தனித்து நிற்கிறோம் என எந்தக் கட்சியையாவது சொல்லச் சொல்லுங்கள். ஆனால் அ.தி.மு.க.வால் தனித்து நிற்கவும் முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை. சில வெட்டுக்கிளிகளும், வேடந்தாங்கல் பறவைகளும், சில பட்டுப்பூச்சிகளும், பருவகாலச் சிட்டுகளும் அதிமுகவை விட்டுச் சென்றாலும் யாராலும் வீழ்த்த முடியாது, காற்றை சுவர் எழுப்பித் தடுக்க முடியாது, கடலை அணை போட்டுத் தடுக்க முடியாது' என மூச்சுவிடாமல் பேசினார் செங்கோட்டையன்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணன் இப்படி கம்பெடுத்து சுற்றுகிறாரே? என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அப்போதுதான் கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள் எடப்பாடிக்கு வந்த நெருக்கடியை பயன்படுத்தி பல பதவிகள் வாங்கி கொண்டார்கள். உங்கள் கையை பிடித்து அரசியலுக்கு வந்தவர்களை எங்கேயோ போய்விட்டார்கள் பாருங்கள். நீங்கள் இப்படியே இருந்தால்... என்று உசுப்பேற்றி இருக்கிறார்கள்.

    அதை கேட்டு யோசித்த பிறகுதான் தானும் தன் இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செங்கோட்டையன் விசுவரூபம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×