search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீ சின்பின்"

    • மாலத்தீவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என மாலத்தீவு அதிபர் திட்டவட்டம்.
    • சீன அதிபருடனான சந்திப்பை தொடர்ந்து, இந்திய ராணுவம் வெளியேற உத்தரவிட்டுள்ளார்.

    தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் பெற்று கடந்த மாதம் அதிபராக தேர்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப்படி நாட்டின் 8-வது அதிபராக அந்நாட்டு தலைமை நீதிபதியின் முன்னிலையில் பதவியேற்றார்.

    சீன ஆதரவு நிலைப்பாடு உள்ள முகமது மூயிஸ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டி இனி எந்த நாட்டு ராணுவத்திற்கும் இடம் கிடையாது என அறிவித்தார். மேலும், மாலத்தீவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் அறிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து, மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தினரை திரும்ப பெற வேண்டும் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீன பயணம் மேற்கொண்ட முகமது முய்சு, சீன அதிபர் சீ சின்பிங்-யை சந்தித்து பேசினார். சீன அதிபருடனான சந்திப்பை தொடர்ந்து, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாலத்தீவு அதிபரின் இந்த அறிவிப்பு இந்தியா மாலத்தீவு இடையிலான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.

    சுமார் 70-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் மாலத்தீவில் உள்ள ரேடார் நிலையங்களையும், கண்காணிப்பு விமானங்களையும் பராமரித்து வருகின்றனர்.

    சீன ஆதரவாளர் முகமது முய்சு, தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் முழுவதும் வெளியேற நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. 

    ×