search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவபத்மநாதன்"

    • பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • 6 பள்ளிவாசலுக்கும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான பட்டியல் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    சென்னையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் வக்பு வாரிய செயலாளர் ரபி புல்லாவை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீராணம் முகைதீன் ஆண்டவர்பள்ளிவாசல் சுற்றுச்சுவரை சீரமைக்க வீராணம் ஒன்றிய கவுன்சிலர் சேக் முகமது கொடுத்த கோரிக்கையின் அடிப்படை யிலும், மத்தளம்பாறை முகைதீன் ஜூம்மா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ ஆம்பூர் பாதுஷா பள்ளிவாசலுக்கும், பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கைகள் அடிப்படையிலும், முதலியார்பட்டி முகமது நைனார் ஜூம்மா பள்ளிவாசலுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையிலும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுன்சிலர் முகமது கனி கோரிக்கையின் அடிப்படையில் 11-வது வார்டு நைனா முகமது ஜூம்மா பள்ளிவாசலுக்கும், கடையநல்லூர் கிழக்கு பகுதி அல் மூப்பன் கீழத்தெரு நைனா முகம்மது ஜூம்மா பள்ளிவாசலுக்கு கவுன்சிலரும், முன்னாள் நகர செயலாளரும், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளருமான முகமது அலி கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சுற்றுச்சுவர் கட்டவும் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்று கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஏற்கனவே சிவபத்மநாபன் கொடுத்த மனுவின் அடிப்படையில் மனுவில் கூறப்பட்டுள்ள 6 பள்ளிவாசலுக்கும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான பட்டியலை சிவபத்மநாதனிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோரிக்கையினை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்த அமைச்சர் மற்றும் வக்புவாரிய செயலாளருக்கு சிவபத்மநாதன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

    • தர்மபுரம் மடம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.

    கடையம்:

    கடையம் அருகே தர்மபுரம் மடம் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி, ரூ. 7 லட்சத்து13 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை திறப்பு விழா மற்றும், சமையல் கூடம், ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தி.மு.க.மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகாரி மீரா சாகிப், சசிகுமார், மோகன், அர்ஜுனன், முருகன், இளங்கோ, அந்தோணி சாமி, முல்லையப்பன், அந்தோணி தாமஸ் அருள் சதாம் உசேன், ஜஹாங்கீர், முருகன் முத்தையா, பக்கீர் மைதீன், பிவி கோதர் மைதீன் ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி மிக்கேல், சங்கர், ரம்யா ராம்குமார், ஊராட்சி தலைவர்கள் சன்னத் ,சதாம் முகமது உசேன், வளர்மதி சங்கரபாண்டியன், மகேஷ் பாண்டியன் அல்லாஹ் பிச்சை, ஆர்.எஸ். பாண்டியன், செல்வராஜ், கணேசன் , முருகன், பாலமுருகன், சுபேர் மேசியா சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • செங்கோட்டையில் இருந்து கடையநல்லூர் செல்லும் பஸ் கடந்த 2 ஆண்டு காலமாக முறையாக வரவில்லை.
    • மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சிவசங்கர் உடனடி நட வடிக்கை எடுப்பதாக கூறினார்.

    தென்காசி:

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

    அதில் செங்கோட்டையில் இருந்து கடையநல்லூர் செல்லும் பஸ் கடந்த 2 ஆண்டு காலமாக முறையாக வரவில்லை. அந்த பஸ்ஸை முறையாக செங்கோட்டை, விஸ்வநாத புரம், தேன்பொத்தை, பண்பொழி, கரிசல்குடியிருப்பு, வடகரை, வாவா நகரம், அச்சன்புதூர், காசி தர்மம், மேலகடையநல்லூர் வழியாக மீண்டும் இயக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சிவசங்கர் உடனடி நட வடிக்கை எடுப்பதாக கூறினார். சந்திப்பின் போது தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேஷ், தலைமை பொது குழு உறுப்பினர் சாமிதுரை, அருள், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சக்தி, கடையநல்லூர் முன்னாள் ஒன்றிய செய லாளர் காசி தர்மம் துரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மூவண்ணா மசூது, மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் சேக் முகமது, கடையநல்லூர் நகராட்சி உறுப்பினர் மைதீன் கனி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், கடையம் பெரும்பத்து ஊராட்சி தலைவர் பரமசிவம், நாகல்குளம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஆம்பூர் கருணாநிதி, வக்கீல் ஹரி, ஒன்றிய கவுன்சிலர் சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

    • சீவலசமுத்திரம் கிராமத்தில் 9.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
    • சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    சுரண்டை:

    தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் வடக்கு ஒன்றியம்,மருக்கலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சீவலசமுத்திரம் கிராமத்தில் 9.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

    புதிய சாலை அமைக்கும் பணியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகமது, மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் வள்ளியம்மாள் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் மருதநாச்சியார் வெள்ளைத்துரை, நிர்வாகி கள் விஜயகுமார், விஜயராஜ், முருகையா, படித்துரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கழிவுநீர் கால்வாய் ஆலங்குளம் யூனியன் அலுவலகம் முதல் ஊர்மடை வரை அமைய உள்ளது.
    • அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கையினை சிவ பத்மநாதன் முன் வைத்திருந்தார்.

    தென்காசி:

    தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலையில் ஆலங்குளம் எல்கைக்கு உட்பட்ட இடங்களில் சாலையின் வடபுறம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் கால்வாய் ஆலங்குளம் யூனியன் அலுவலகம் முதல் ஊர்மடை வரை அமைய உள்ளது.

    இந்த கழிவுநீர் கால்வாய் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக அமைய வேண்டும் என்று ஆலங்குளம் வியா பாரிகள் சங்கம் சார்பாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனிடம் தெரிவித்திருந்தனர்.

    அதன்படி சில நாட்களுக்கு முன் நெடுஞ்சாலை துறை அமைச்சரை சென்னையில் நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கையினை சிவ பத்மநாதன் முன் வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து சாலையின் கழிவுநீர் கால்வாய் குறித்து மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வரைபடம் மூலம் காண்பித்து விளக்கி னார்.

    கோரிக்கையின் முக்கிய த்துவம் குறித்து கலெக்டர் ஆகாஷ் சம்பந்தப்பட்ட அதிகாரி களை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்நிகழ்வின் பொழுது ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா, நெல்சன்,தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் வியா பாரிகள் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சுகாதார நிலையம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார்.
    • நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் மீரான் சேட் காலனியில் ரூ.75 லட்சம் மதிப்பில் பொது சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சிக் கூடம், யோகா நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.

    நகர சபை ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொது சுகாதார நிலையம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சோம செல்வ பாண்டியன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் எம்.எஸ். ராஜ், துணை செயலாளர் குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் டைட்டஸ் ஆதித்தன், ம.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் நடுவை முருகன்,

    காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் மனோகரன், தி.மு.க. நகர நிர்வாகி பிரகாஷ், நகரத் துணைச் செயலாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் மாரிச்சாமி, எஸ்.டி.எஸ். சரவணக்குமார், புனிதா, புஷ்பம், குருப்பிரியா மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, கேபிள் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×