search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் பகுதியில் வளர்ச்சிப்பணிகள் சிவபத்மநாதன் தொடங்கிவைத்தார்
    X

    கடையம் பகுதியில் வளர்ச்சிப்பணிகள் சிவபத்மநாதன் தொடங்கிவைத்தார்

    • தர்மபுரம் மடம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.

    கடையம்:

    கடையம் அருகே தர்மபுரம் மடம் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி, ரூ. 7 லட்சத்து13 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை திறப்பு விழா மற்றும், சமையல் கூடம், ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தி.மு.க.மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகாரி மீரா சாகிப், சசிகுமார், மோகன், அர்ஜுனன், முருகன், இளங்கோ, அந்தோணி சாமி, முல்லையப்பன், அந்தோணி தாமஸ் அருள் சதாம் உசேன், ஜஹாங்கீர், முருகன் முத்தையா, பக்கீர் மைதீன், பிவி கோதர் மைதீன் ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி மிக்கேல், சங்கர், ரம்யா ராம்குமார், ஊராட்சி தலைவர்கள் சன்னத் ,சதாம் முகமது உசேன், வளர்மதி சங்கரபாண்டியன், மகேஷ் பாண்டியன் அல்லாஹ் பிச்சை, ஆர்.எஸ். பாண்டியன், செல்வராஜ், கணேசன் , முருகன், பாலமுருகன், சுபேர் மேசியா சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×