search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதி"

    • வாரணாசி ஒரு மினி பஞ்சாப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.
    • இந்தியா இன்று சாந்த் ரவிதாஸின் தகவல்களை ஏற்று வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியை தாக்கி, அதன் உறுப்பினர்கள் சாதிவெறியின் பெயரால் மக்களைச் சுரண்டுவதாக குற்றம் சாட்டினார்.

    அவர் தனது வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் சாந்த் ரவிதாஸின் 647-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். முன்னதாக, இங்கு புதிதாக நிறுவப்பட்ட சாந்த் ரவிதாஸ் சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார். 

    அப்போது பிரதமர் மோடி பேசுகையில்," சாந்த் ரவிதாஸின் பிறந்தநாளின் புனிதமான நிகழ்வில், உங்கள் அனைவரையும் அவரது பிறந்த இடத்திற்கு வரவேற்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் தொலைதூர இடங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள். குறிப்பாக பஞ்சாபில் இருந்து வந்திருக்கும் என் சகோதர சகோதரிகள். வாரணாசி ஒரு மினி பஞ்சாப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.

    இந்தியா இன்று சாந்த் ரவிதாஸின் தகவல்களை ஏற்று வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. அவரது ஆசீர்வாதத்தால் இவை அனைத்தும் சாத்தியமானது.

    தங்களின் குடும்பத்தினரின் நலன் மீது மட்டுமே அக்கறை கொண்டவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலன் பற்றி சிந்திக்க முடியாது. பழங்குடியின பெண் ஒருவரை இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்" என்றார்.

    • பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர்.
    • சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புவனேஸ்வர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நடத்தி வருகிறார். அவரது யாத்திரை, தற்போது ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்து வருகிறது. இன்று யாத்திரையில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    பிரதமர் மோடி, தனது சாதி பற்றி பொய் சொல்கிறார். அவர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் அல்ல. அவர் குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். அந்த சமூகத்திற்கு 2000-ம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் அடையாளத்தை பா.ஜனதா வழங்கியது. பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர். பொது சாதியில் பிறந்தவர் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்கமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தி தனது யாத்திரையில் பிரதமர் மோடி, மத்திய அரசையும் விமர்சனம் செய்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை பற்றி பேசி வருகிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
    • மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசுக்கு கவலை இல்லை

    குளச்சல் :

    மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு (பெடா), கோடிமுனை பங்கு பேர வை, பங்கு மக்கள் சார்பில் உலக மீனவர் தினம் கோரிக்கை மாநாடு மற்றும் கோடிமுனையில் மீன் பிடித்துறைமுகத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அமைச்சர்களுக்கு பாராட்டு விழா கோடி முனையில் ஊர் தலைவர் சார்லஸ் தலைமையில் நடந்தது. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்த லைவர் எனல்ராஜ், பெடா தலைவர் பிரிட்டோ ஆன்றனி ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    விழாவில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பா ளராக பங்கேற்றார். அவர் பேசியதாவது-

    ஒவ்வொரு நாளும் இயற்கையுடன் போரிட்டு, அதே சமயம் மிகவும் இயற்கையை நேசித்து வாழ்பவர்கள் மீனவ மக்கள். மீனவர்களின் துயரங்களை ஏற்றுக் கொள்ளாமல், கொண்டாடப்பட வேண்டி யவர்களை கொண் டாடாமல், மதிக்க வேண்டிய மீனவர்களுக்கு மரியாதை தராமல், ஒடுக்கும் சூழலை நாம் பார்த்துக் கொண்டி ருக்கிறோம்.

    சூழலியல் மாற்றத்தால் பனி பிரதேசத்தில் பனி உருகி கடல் மட்டம் உயரும் நிலை உள்ளது. கடல் மட்டம் உயரும் போது கடல் கரையில் இருக்கும் வீடுகள் அழியும் நிலை ஏற்படும். கடலில் மக்களின் வாழ்வி யலை பார்த்துவிட்டு ஆறு மாதங்களுக்கு பிறகு வந்து பார்த்தால் அந்த இடத்தில் இருந்த வீடுகள், கடற்கரை காணாமல் போகும் நிலை யை காண்கிறோம்.

    மீனவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட் டமாகவே உள்ளது. கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு கடல் தாய் போன்றது. தாயில் பிரிவினை இல்லை. இது உன்னுடைய எல்லை, இது என்னுடைய எல்லை எனக்கூறி மீனவர்கள் கைது செய்யப்படுவது, படகுகள் பிடுங்கப்படுவதும் நடக்கி றது. மீனவர்கள் பாதிக்கப்ப டும் பிரச்சினையில் மத்திய அரசுக்கு கவலை இல்லை. மீனவர்களின் படகுகள் பிடித்து வைக்கப்படுவதில் அக்கறை இல்லை. மக்களை பிரித்தாளுவது, ஜாதி, மதத்தின் பெயரால் பிரச் சினைகளை உருவாக்கி காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் பிரிவினை ஏற்படுத்துவதில் மத்திய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

    பிரிவினையால் பிரச்சி னைகள் ஏற்படும்போது பாதிக்கப்படுவது பெண்க ளும், குழந்தைகளும் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண் டும். எந்த மதமாச்சரி யங்களும் இல் லாமல் அனைவரும் ஒற்று மையாக இந்த விழாவை கொண்டாடு கிறோம். இது தொடர வேண்டும். நாம் ஒன்றுப்பட்ட மனிதர்களாக வாழும் சூழ்நி லையை தொடர வேண்டும்.

    ஒற்றுமையாக இருக்கும் போது, நம்மை பற்றி கவ லைப்படும் அரசு இருக் கும்போது கோரிக்கைகள் நிறைவேறும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டா லின் கடிதம் எழுதி உள்ளார். நானும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன்.

    ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கையில் வைத்துள்ளார். சட்டசபையில் மசோதா நிறைவேற்றினால் அதை நிறுத்தி வைக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. உங்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீனவர்களுக்கு நலவாரி யம், தனித்துறை அமைக்கப் பட்டது கலைஞர் ஆட்சி யில்தான். தொடர்ந்து உங்களோடு நிற்கும் ஆட்சி, உங்களோடு கைகோர்த்து வரும் ஆட்சி. நிச்சயமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது, பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள் சேர்க்கப்படு வார்கள்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    மீனவர்களை பழங்குடி யினர் பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தீர்மானத்தை பெடா பொதுச்செயலாளர் ராஜ் முன் மொழிந்தார். முன்னதாக குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தலைமையில் சைமன்காலனி சந்திப்பில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ், கோடிமுனை பங்குத்தந்தை சீலன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், தி.மு.க.தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், பசிலியான் நசரேத், கோடிமுனை ஊர் பொருளாளர் சுரேஷ், குழியாளி ஜாண்சன், பெடா நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாதி மோதல்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறினார்.
    • தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.

    மதுரை

    மதுரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை விடுவிக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக நீண்ட போராட்டம் நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான சூழல் வரும் என்று நம்புகிறோம்.

    மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு கூடி எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து விட்டது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.

    எனவே தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி தான் பழனிசாமி தான்

    தமிழக அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. இது தொழிலாளர்களுக்கு எதிரான செயல்.

    தமிழகத்தில் ஜாதி மோதல் இருக்கிறது. சமீபத்தில் பரமக்குடியில் நடந்த கல்லூரி விழாவில் தாழ்த்தப்பட்ட மாணவன் மீது பிற மாணவர்கள்-ஆசிரியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    மேலும், கடலாடியில் பள்ளி ஆசிரியரை அதிகாரிகள் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.

    இந்தச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற சம்பவங்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்லடத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
    • நம் நாட்டின் பாரம்பரியம் குறித்து தெரியப்படுத்த இங்கு ஆளில்லை.

    பல்லடம் :

    பல்லடத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. பொள்ளாச்சி ரோடு, வடுகபாளையத்தில் துவங்கி ஹாஸ்டல்ரோடு, கொசவம்பாளையம் ரோடு வழியாக பொதுக்கூட்ட மேடை வரை அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் துவக்கிவைத்தார். ஏராளமான தொண்டர்கள் சீருடையுடன் அணிவகுப்பில் நேர்த்தியுடன் பங்கேற்றனர்.

    திருப்பூர் கோட்ட பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் கார்மேகம், பல்லடம் நகர தலைவர் செந்தில்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி கோட்ட தலைவர் முத்துகிருஷ்ணசாமி பேசுகையில், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும்இந்த இயக்கத்தில் உள்ளனர். நம் நாட்டின் பாரம்பரியம் குறித்து தெரி யப்படுத்த இங்கு ஆளில்லை. ஆர்.எஸ்.எஸ்.,ன்ஒவ்வொரு தொண்டனும் தேசத்தின் பாரம்பரியத்தை விதை க்கின்றனர். முன்னோர்கள், குடும்ப உறவுகள், பாரம்ப ரியம் குறித்து இன்றைய தலை முறைக்கு சொல்ல ப்படுவதில்லை.தீண்டாமை, சாதிவேறுபாடுகள் ஒவ்வொருவர் மனதிலும் இருந்தும் நீங்க வேண்டும். தாங்கள் வகுத்த கொ ள்கைகள், சித்தாந்த ங்களை பல அமைப்புகள் இழந்து ள்ளன. ஆனால் தான் கொண்ட கொள்கை களால் கடந்த 97 ஆண்டு களாக உடையாத இயக்க மாகஆர்.எஸ்.எஸ்., உள்ளது என்றார்.உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பா.ஜ., மாநில பொது செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்டோர் பங்கே ற்றனர்.அணி வகுப்பில் ஏராளமான தொண்டர்கள் சீருடையுடன் கம்பீரத்துடன் பங்கேற்றனர்.

    • தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.
    • வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெறாதவாறு நடவடிக்கை.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் சாதி குறித்து கேள்வி இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய கேள்வியால் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இனிவரும் காலங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வினாக்கள் இடம் பெறாதவாறு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்ற வினாத்தாள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வில் சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
    • அ.ம.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

    அரியலூர்:

    அரியலூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் அலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது அ.தி.மு.க.வில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்கள் குறித்து அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளிவந்துள்ளது. அவர் உண்மையைத்தான் பேசியுள்ளார். ஆனால், யாருக்கோ பயந்து கொண்டு அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

    இதே போல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக நான் பேசியபோது, என் மீது வழக்கு தொடுக்கப்படும் என ஜெயகுமார் கூறியுள்ளார். அந்த வழக்கை சந்திக்க நான் தயார். அப்போதுதான் ஆடியோவில் உள்ள உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, அ.தி.மு.க.வில் நடைபெறக்கூடிய அனைத்து சம்பவங்களும் தொண்டர்களுக்கு தெரியவரும். அ.தி.மு.க. பொது குழு எவ்வாறு நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வில் தற்போது சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சாதிரீதியாக பிரித்து, அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிட பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது. துரோகம் செய்தவர்கள் துரோகத்தால் அழிந்து போவார்கள். விரைவில், துரோகிகளிடமிருந்து அ.தி.மு.க. மீட்கப்படும் என்றார்.

    கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் துரை.மணிவேல் தலைமை வகித்தார். அ.ம.மு.க. துணைச் செயலர் ரங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்டச் செயலர் ராஜேஷ், பெரம்பலூர் மாவட்டச் செயலர் கார்த்திக்கேயன், தா.பழூர் ஒன்றியச் செயலர் புகழேந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான்கு பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
    • சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம்

    சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வி கேட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வினாத்தாள் பிற பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டதாக விளக்கம்.
    • பெரியார் பல்கலைக்கழகத்திலேயே சாதி பற்றிய கேள்வி கேட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வி கேட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

    மேலும், வினாத்தாள் பிற பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

    பெரியார் பல்கலைக்கழகத்திலேயே சாதி பற்றிய கேள்வி கேட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×