search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனாதனம் சர்ச்சை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்தை இந்தியா கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
    • உதயநிதி ஸ்டாலின் மீது சனாதன ஒழிப்பு கருத்து தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

    அப்போது சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு விவாதத்தை கிளப்பியது. இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என தெலுங்கானா காங்கிரஸ் முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

    ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு கருத்து குறித்த கேள்விக்கு கடும் கோபத்துடன் ஆவேசமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது:-

    உதயநிதியின் கருத்து தவறானது. இதனை நான் கண்டிக்கிறேன். அது அவரது எண்ணம். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என அவர் கூறியதற்காக தண்டிக்கப்பட வேண்டும்.

    ஒரு குடும்பத்திற்குள் கூட, தனிநபர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், உதயநிதியின் நிலைப்பாடு அவருடையது.

    தெலுங்கானா மாநிலத் தலைவர் மற்றும் முதல்-மந்திரி என்ற முறையில், சனாதன தர்மம் குறித்த கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த தவறான கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே நமது கொள்கை. மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தீங்கு விளைவிக்காமல் அனைத்து நம்பிக்கைகளையும் நிலை நிறுத்துவது முக்கியம்.

    பாஜகவின் "400 தொகுதிகளில் வெற்றி முழக்கம் என்பது தேர்தல் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருத்தமானது.

    தற்போது இது சாத்தியமில்லை. மக்களவையில் 400 இடங்கள் என்ற இலக்கை அடைய பா.ஜ.க. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாக்கு கேட்க வேண்டும்.

    குஜராத்தில் 26 இடங்களையும், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும், டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றாலும் கூட. பீகாரில் 39 முதல் 40 இடங்களும், உத்தரபிரதேசத்தில் 62 இடங்களும், வங்காளத்தில் 18 இடங்களும், வட மாநிலங்களில் கணிசமான பெரும்பான்மையும் பெற்றால், 300 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும். பா.ஜ.க.வால் இலக்கை அடைய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்- மந்திரி கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் விரைவில் பா.ஜ.கவுக்கு சென்று விடுவார் என தெலுங்கானா எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை என்ற குழந்தையை பார்த்து கொள்ளும் தாய் தூய்மை பணியாளர்கள்.
    • வெயில், மழை பார்க்காமல் உழைப்பவர்கள் தூய்மை பணியாளர்கள்.

    சென்னை:

    கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-


    நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது ஒரு பக்கம் தாய்மார்கள் தம்பி தீபாவளி வாழ்த்துகள் என்று சொல்லி வரவேற்றார்கள், நான் வாழ்த்துகள் வாழ்த்துகள் என்று சொன்னேன்.

    மற்றொரு பக்கம் தி.மு.க.இளைஞரணி நிர்வாகிகள் பெரியார் வாழ்க பெரியார் வாழ்க என்று சொல்லி வரவேற்றார்கள்.

    இது தான் திராவிட மாடல். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் அரசு.

    சென்னையை அழகாக பராமரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மகிழ்ச்சி. கட்சி நிர்வாகிகளின் உழைப்பு தான் காரணம்.

    சென்னையில் 2019 ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், அதன்பிறகு வந்த சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற காரணம் நீங்கள்தான். அதே போல் 2024 பாராளுமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.

    சென்னை இன்று சென்னையாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தூய்மை பணியாளர்கள் தான். நாம் சென்னையில் தூய்மையான காற்றை சுவாசிக்க காரணம் தூய்மை பணியாளர்கள். காலையில் முதலில் வேலைக்கு செல்வது தூய்மை பணியாளர்கள். வெயில், மழை பார்க்காமல் உழைப்பவர்கள் தூய்மை பணியாளர்கள்.

    சென்னை என்ற குழந்தையை பார்த்து கொள்ளும் தாய் தூய்மை பணியாளர்கள்.

    சனாதனம் பற்றி பேசுவதை விமர்சிக்கிறார். சனாதனம் குறித்து நான் பேசியது பேசியது தான். நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொன்னார்கள், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. சட்ட ரீதியாக சந்தித்து கொள்வோம், நான் எந்த ஒரு மதத்தையும் இழிவுப்படுத்தி பேசவில்லை.

    சமூக நீதி வேண்டும், அனைவரும் சமம் என்பதற்காக தான் நான் பேசினேன். நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் பையன், கலைஞர் பேரன், பேசியது பேசியது தான். கொள்கையை தான் பேசினேன், பேசியதிலிருந்து பின் வாங்கமாட்டேன். எது வந்தாலும் தொண்டர்கள் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×