search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனாதனம் தர்மம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்தை இந்தியா கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
    • உதயநிதி ஸ்டாலின் மீது சனாதன ஒழிப்பு கருத்து தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

    அப்போது சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு விவாதத்தை கிளப்பியது. இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என தெலுங்கானா காங்கிரஸ் முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

    ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு கருத்து குறித்த கேள்விக்கு கடும் கோபத்துடன் ஆவேசமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது:-

    உதயநிதியின் கருத்து தவறானது. இதனை நான் கண்டிக்கிறேன். அது அவரது எண்ணம். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என அவர் கூறியதற்காக தண்டிக்கப்பட வேண்டும்.

    ஒரு குடும்பத்திற்குள் கூட, தனிநபர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், உதயநிதியின் நிலைப்பாடு அவருடையது.

    தெலுங்கானா மாநிலத் தலைவர் மற்றும் முதல்-மந்திரி என்ற முறையில், சனாதன தர்மம் குறித்த கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த தவறான கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே நமது கொள்கை. மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தீங்கு விளைவிக்காமல் அனைத்து நம்பிக்கைகளையும் நிலை நிறுத்துவது முக்கியம்.

    பாஜகவின் "400 தொகுதிகளில் வெற்றி முழக்கம் என்பது தேர்தல் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருத்தமானது.

    தற்போது இது சாத்தியமில்லை. மக்களவையில் 400 இடங்கள் என்ற இலக்கை அடைய பா.ஜ.க. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாக்கு கேட்க வேண்டும்.

    குஜராத்தில் 26 இடங்களையும், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும், டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றாலும் கூட. பீகாரில் 39 முதல் 40 இடங்களும், உத்தரபிரதேசத்தில் 62 இடங்களும், வங்காளத்தில் 18 இடங்களும், வட மாநிலங்களில் கணிசமான பெரும்பான்மையும் பெற்றால், 300 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும். பா.ஜ.க.வால் இலக்கை அடைய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்- மந்திரி கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் விரைவில் பா.ஜ.கவுக்கு சென்று விடுவார் என தெலுங்கானா எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • சனாதனம் தர்மம் விவகாரத்தில் அதிமுக-வின் நிலைப்பாடு என்ன?
    • ஆட்சி அதிகாரத்தைவிட, கொள்கைதான் முக்கியம்

    ஜி20 உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியது. இதில் ஜி20 அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் மோடி, பேச்சை தொடங்கும்போதே பாரத் எனத் தொடங்கினார். மேலும், ஒவ்வொரு நாட்டின் பெயரை பிரதிநிதிப்படுத்தும் பெயர் பலகையில், பிரதமர் மோடியின் முன் பாரத் என வைக்கப்பட்டிருந்தது. இதனால் பாரத் நாட்டின் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் இந்தியாவின் பெயர் ஏறக்குறை பாரத் என மாற்றடைய உறுதியாகிவிட்டது எனக் கூறலாம்.

    இந்த நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் பின்வருவாறு:-

    கேள்வி: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் முன் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதே?

    பதில்: வாழ்த்துகள் (சிரித்துக்கொண்டே) 9 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போலவே, இந்தியாவையே மோடி மாற்றி காட்டிவிட்டார்.

    கேள்வி: சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதற்காக உங்களையும், சேகர் பாபுவையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் பா.ஜனதா துணைத் தலைவர் உள்ளிட்டோர் புகார் மனு அளித்துள்ளனரே?

    பதில்: திமுக கட்சியே அதற்காக தொடங்கப்பட்ட கட்சி. எங்களுக்கு ஆட்சியை பற்றி கவலை கிடையாது. கொள்கை பக்கம் நிற்போம். ஆட்சி அதிகாரித்தை விட கொள்கையே முக்கியம்.

    கேள்வி: சனாதனம் தர்மம் ஒழிப்பு காரணமாக ஆட்சியே போனால் பரவாயில்லை என எடுத்துக் கொள்ளலாமா?

    பதில்: ஆம். எடுத்துக் கொள்ளலாம். அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோர் பேசாததை நான் பேசவில்லை.

    கேள்வி: மாநாட்டில் உங்களுடைய பேச்சு மட்டும் விமர்சனமாக்கப்படுகிறது. இது தனிமனித தாக்குதல் என்று எடுத்துக் கொள்ளலாமா?

    பதில்: தனி மனித தாக்குதல் கிடையாது. கொள்கை தாக்குதல்.

    இவ்வாறு குறிப்பிட்டார்.

    மேலும், "பா.ஜனதாவை விட்டுவிடுங்கள். என்னுடைய கேள்வி அ.தி.மு.க. பற்றியது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். கட்சியில் அண்ணா பெயர் உள்ளது. அண்ணாதான் அதிக அளவில் சனாதன தர்மத்தை எதிர்த்து பேசியுள்ளார். சனாதன தர்மம் விவகாரத்தில் அவர்களுடைய கருத்து என்ன? அதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்

    ×