search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே.ஜி.எப்.2"

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உலகம் முழுக்க 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகியும், கடைசியில் ஐமேக்ஸ் திரையரங்கில் ரிலீசாகவில்லை. #2Point0 #Rajinikanth #AkshayKumar
    ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படம் வருகிற உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் இன்று ரிலீசாகி புதிய சாதனை படைத்துள்ளது.

    ‘2.0’ இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.600 கோடி செலவில் தயாரான நேரடி தமிழ் படம். இந்திய திரையுலகில் முதல் முறையாக 3டி கேமராவில் முழு படத்தையும் எடுத்துள்ளனர். ஹாலிவுட் படங்களை போல், ஐமேக்ஸ் தியேட்டர்களில் 2.0 படத்தை திரையிட ஒப்பந்தம் செய்திருந்ததாக முன்னதாக தகவல் வெளியானது. ஆனால் படம் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகவில்லை.

    படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவதில் தாமதமானதால், படத்தை ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியிடவில்லை. எனினும் 2 வாரங்களில் ஐமேக்ஸ் திரையில் 2.0 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐமேக்ஸ் திரையில் 2.0 ரிலீசாகும் பட்சத்தில் அங்கு திரையிடப்படும் நேரடி முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை 2.0 படத்திற்கு கிடைக்கும்.

    3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமை 2.0 படத்திற்கு கிடைத்துள்ளது.

    முதன் முறையாக 4டி ஒலி தொழில்நுட்பத்தில் இதன் ஒலி அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்திய படங்கள் அனைத்தையும் பாகுபலி, வசூலில் பின்னுக்கு தள்ளி உலக அளவில் பேசப்பட்டது. அதுபோல் 2.0 படமும் ஹாலிவுட் படங்களுக்கு இணையான இடத்தை எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படம் உலகம் முழுக்க 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகி சாதனை படைத்துள்ளன. #2Point0 #Rajinikanth #AkshayKumar
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் எந்திரன். ரோபோவை மையமாக கொண்டு உருவான இந்த படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

    இந்த படத்தின் அடுத்த பாகத்தை 2.0 என்ற பெயரில் உருவாக்க 2014-ம் ஆண்டு முடிவு செய்தனர். 2015-ம் ஆண்டு தொடங்கிய 2.0 படம் இன்று வெளியானது.

    இந்தியத் திரையுலகிலேயே முதன்முறையாக 3டி கேமராவில் முழுப்படத்தையும் ஷூட் செய்திருக்கிறார்கள். உலகத்தில் முதன்முறையாக 4டி சவுண்ட் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் ஒலியமைப்பை உருவாக்கி இருக்கிறார் ரசூல் பூக்குட்டி.

    இந்தியாவில் முதல் முறையாக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே சுமார் 500 கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள்.

    ‌ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியின் ‘2.0’ திரைப்படம் உலகளவில் கிட்டத்தட்ட 10,500 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இதற்கு முன் ‘பாகுபலி 2’ 9000-க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை ‘2.0’ தற்போது முறியடித்துள்ளது.



    வட இந்தியாவில் மட்டும் 5000 தியேட்டர்களில் ‘2.0’ திரையிடப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 1100, தமிழகத்தில் 900, கேரளாவில் 450, கர்நாடகாவில் 400 என இந்தியாவில் மட்டும் 7,800 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று பதிப்புகளையும் சேர்த்து 800 தியேட்டர்களில் வெளியாகின. படத்தின் வரவேற்புக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை கூடலாம். கனடாவில் மூன்று மொழி பதிப்புகளுக்கும் சேர்த்து 50 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அமெரிக்காவில் மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் செய்த படங்களில், ரஜினி படங்களே நான்கு உள்ளன. இதில் ரஜினிக்கு போட்டியே இல்லை. ‘எந்திரன்’, ‘லிங்கா’, ‘கபாலி’, ‘காலா’ படங்களைத் தொடர்ந்து ‘2.0’வும் மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மலேசியாவில் 140 தியேட்டர்களில் ‘2.0’ வெளியாகின. இங்கு ‘கபாலி’யின் வசூலை இதுவரை எந்தப் படமும் முந்தவில்லை. அதே போல, பிரிட்டனில் எந்திரனின் வசூலை இதுவரை எந்தப் படமும் முந்தவில்லை. அங்கு ‘2.0’ 297 தியேட்டர்களில் வெளியாகின.

    ஐக்கிய அரபு எமிரேட்சில் 300லிருந்து 350 தியேட்டர்களில் ‘2.0’ வெளியானது. இங்கு மட்டும், முதல் நாளில், 700-க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக தெரிகிறது. இது சமீபத்தில் வெளியான அமீர்கானின் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தானின்’ முதல் நாள் காட்சிகளை விட அதிகமாகும்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் 155 தியேட்டர்களில் வெளியாகிறது. ஆஸ்திரேலியாவை பொருத்தவரை அங்கு அதிகம் வசூலித்த படமாக ‘பாகுபலி 2’ இருக்கிறது. அடுத்த இடத்தில் ‘கபாலி’ இருக்கிறது.



    ரஜினி தனது 2.0 படக்குழுவிற்கு டுவிட்டர் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் அவர், “படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். அந்த மகத்தான நாள் வந்து விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் இன்று காலை 2.0 படம் வெளியானது. அதிகாலை 4 மணிக்கு சில தியேட்டர்களிலும் 7 மணிக்கு சில தியேட்டர்களிலும் வெளியானது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 8.30 மணிக்கு வெளியானது.

    இன்றைய காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் புக்கிங் திறக்கப்பட்ட நேற்று முன்தினமே விற்கப்பட்டு காலியாகின. சில தியேட்டர்களில் இன்று காலை கவுண்டர்களில் டிக்கெட் கிடைத்ததால் அந்த தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது.

    2.0 படம் 3டியில் வெளியானதால் 3டி கண்ணாடி அணிந்து ரசிகர்கள் உற்சாகமாக பார்த்தனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெருமையும் 2.0-வுக்கு கிடைத்துள்ளது.

    இந்தியத் திரையுலகில் பிரமாண்டமான சயின்ஸ் பிக்சன் படங்கள் வெற்றி என்றால் ‘எந்திரன்’ மட்டுமே. ‘ரா ஒன்’ இந்திப் படம் தோல்வியைச் சந்தித்தது.

    இதனால் ‘2.0’ படமும் வெற்றி பெற்றால் இன்னும் உலக அரங்கில் தமிழ் சினிமாவின் மதிப்பு பலமடங்கு உயரும். நிச்சயம் இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `2.0' படத்தின் விமர்சனம். #2Point0Review #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson
    எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் 2.0 படத்தின் முதல் காட்சியிலேயே அக்‌ஷய் குமார் மொபைல் டவர் ஒன்றில் தூக்குப்போட்டு இறக்கிறார். அவரது இறப்புக்கு அடுத்த நாள் மர்மமான முறையில் செல்போன்கள் அனைத்தும் வானை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. திடீரென செல்போன்கள் அனைத்தும் பறந்ததால் மக்கள் அனைவரும் பீதியில் உறைந்திருக்கின்றனர்.

    இந்த நிலையில், செல்போன் கடை வைத்திருக்கும் ஐசரி கணேஷ் இந்த நேரத்தில் அனைத்து செல்போன்களையும் விற்று லாபம் பார்க்க எண்ணி, புதிய மொபைல்களை வரவைக்கிறார். அந்த போன்களும் காணாமல் போகின்றன. மேலும் ஐசரி கணேஷ் மர்மமான முறையில் இறக்கிறார்.



    இந்த நிலையில், இந்த பிரச்சனைகள் குறித்து தனது ஆராய்ச்சியை தொடங்குகிறார் (விஞ்ஞானி வசீகரனான) ரஜினிகாந்த். ரஜினிக்கு துணையாக அவரது புதிய ரோபோவான ஏமி ஜாக்சன் உதவி செய்கிறது. இவர்களது ஆராய்ச்சியில் அனைத்து மொபைல்களையும் கட்டுப்படுத்தும் சக்தி ஒன்று வந்துள்ளது என்றும், மனிதர்களுக்கு எதிராக இது செயல்படுகிறது என்பதும் தெரிய வருகிறது.

    இதையடுத்து நடக்கும் உயர்மட்டகுழு ஆலோசனையில், வந்திருப்பது பயங்கரமான சக்தி, சிட்டி வந்தால் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று ரஜினி கூறுகிறார். எந்திரன் படத்தில் வசீகரனின் குருவான போஹ்ரா சிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார். அதேபோல் இந்த பாகத்தில் அவரது மகன் சுதஸ்னு பாண்டே எதிர்ப்பு தெரிவிக்கிறார். சிட்டியால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், சிட்டிக்கு ஆதரவு குறைகிறது. இந்த நிலையில், மேலும் சில பிரபலங்கள் உயிரிழக்க சிட்டியை மீண்டும் கொண்டுவர முடிவு செய்கின்றனர்.



    சிட்டியின் வருகைக்கு பிறகு அந்த மாய சக்தி மனிதர்களை தாக்க ஆரம்பிக்கிறது. பறவையாக மாறி வரும் அந்த சக்தியால் மேலும் பல்வேறு சேதங்கள் ஏற்படுகின்றன. மேலும் இந்த சண்டையில் சிட்டி அழிக்கப்படுகிறது.

    கடைசியில், அந்த பறவையை கட்டுப்படுத்தியது யார்? மாய சக்தியான பறவை அழிக்கப்பட்டதா? அக்‌ஷய் குமார் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    வசீகரன், சிட்டி, எந்திரன் 2.0, 3.0 என வித்தியாசமாக ரோபோக்களாக ரஜினிகாந்த் கலக்கியிருக்கிறார். வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் அக்‌ஷய் குமார். திரையில் குறைவான நேரமே வந்தாலும், உணர்வுப்பூர்வமாக நம்மை கலங்க வைக்கிறார். ரோபோவாக ஏமி ஜாக்சனும் அவரது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

    சுதஸ்னு பாண்டே, அடில் உசைன், கலாபவன் ஷாஜன், மயில்சாமி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.



    படம் அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கிறது. குறிப்பாக தமிழில் முழுநீள 3டி படத்தை  பார்க்கும் போது வித்தியாசமான, புதுமையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அளவுக்கு பிரம்மாண்டமான படைப்பை கொடுத்திருக்கும் ஷங்கருக்கு பாராட்டுக்கள். படத்தில் கிராபிக்ஸ், வி.எப்.எக்ஸ். காட்சிகள் பிரம்மாண்டத்தை உணர வைக்கின்றன. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பது ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் கதாபாத்திரங்களுக்கு பெரியதாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையோ என்ற ஏமாற்றத்தை உண்டுபண்ண வைக்கிறது. திரையில் அக்‌ஷய் குமாரின் தோற்றத்தை விட பறவையின் தோற்றமே வந்து விளையாடி சென்றிருக்கிறது. அந்த அளவுக்கு பறவையை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் ஷங்கர். 

    ரஜினியை மாஸாக பார்க்க வேண்டும் என்றோ, வித்தியாசமான அக்‌ஷய் குமாரை பார்க்க வேண்டுமென்றோ சென்றால் அது ஏமாற்றத்தை தான் கொடுக்கும். இது ரஜினி படம் அல்லது அக்‌ஷய் குமார் படம் என்று கூறுவதை விட இது ஷங்கர் படம் எனலாம். அந்த அளவுக்கு தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் மொத்த பிரம்மாண்டத்தையும் இறக்கியிருக்கிறார். அத்துடன் கிளைமேக்ஸில் அடுத்த பாகத்திற்கான சஸ்பென்ஸையும் இணைத்திருப்பது ரசனை.



    ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ரசூல் பூக்குட்டியின் 4டி ஆடியோ சவுண்ட் அபாரம். இருவரும் இணைந்து இசையில் அடுத்த லெவலுக்கே சென்றிருக்கின்றனர். நிரவ் ஷாவின் 3டி ஒளிப்பதிவு உண்மையான விஷுவல் ட்ரீட் தான்.

    மொத்தத்தில் `2.0' மிகப் பிரம்மாண்டம். #2Point0Review #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson

    ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 2.0 படத்தில் செல்போன்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மனுதாக்கல் செய்துள்ளதால், 2.0 படத்திற்கு சிக்கல் வந்துள்ளது. #2Point0 #Rajinikanth
    ‌ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது ‘2.0’ திரைப்படம்.

    கடந்த 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் உள்ளிட்டோரும் நடித்துள்ளதால் இந்திய அளவில் படத்துக் கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பலமுறை படத்தை வெளியிடத் திட்ட மிட்டு கிராபிக்ஸ் வேலைகள் முடிவடையாத நிலையில் படம் வெளியாகவில்லை. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து நாளை (29-ந்தேதி) வெளியாக உள்ளது. ஏற் கெனவே படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.



    2.0 படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் செல்போன்கள் வைத்து அதிகமான காட்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில் செல்போன்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி 2.0 படத்தை மறுதணிக்கை செய்யக்கோரி தொலைத்தொடர்பு நிறுவனத்தினர் மத்திய தணிக்கைத்துறையிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    எந்த வித ஆதாரமும் இன்றி 2.0 திரைப்பட டீசர் டிரைலரில் செல்போன்கள் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது என்று கூறி மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு இந்திய செல்போன் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் புகார் மனு அனுப்பியுள்ளனர். நாளை படம் வெளியாக உள்ள நிலையில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #2Point0 #Rajinikanth

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் முன்னோட்டம். #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson
    லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள படம் `2.0'.

    ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கிறது. சுதன்சு பாண்டே, கலாபவன் ஷாஜான், ரியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    இசை - ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி, பாடல்கள் - பாஸ்கர் பத்லா, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கலை - டி.முத்துராஜ், சண்டைபயிற்சி - ஸ்டண்ட் சில்வா, ஒலி வடிவமைப்பு - ரசூல் பூக்குட்டி, தயாரிப்பு - சுபாஸ்கரன், துணை இயக்குநர் - முகமது யூனஸ் இஸ்மாயில், திரைக்கதை, வசனம் - ஷங்கர், ஜெமோகன், கதை, இயக்கம் - ஷங்கர்.



    படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ‌ஷங்கர் பேசியதாவது:-

    எந்திரன் 2.0 படத்தின் பலமே ரஜினி தான். அவர் எது செய்தாலும் வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும், மாஸாகவும் இருக்கும். இப்படத்தில் ரஜினியை பல வடிவத்தில் பார்க்கலாம். எந்திரன் முதல் பாகத்தில் ரஜினியை வசிகரன், சிட்டி ஆகிய 2 வேடத்தில் பார்த்தோம். இப்படத்தில் வசிகரன், சிட்டி, ஜெயின்ட் சிட்டி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல வேடத்தில் அவரை பார்க்கலாம்.

    கண்களுக்கு 3டி டெக்னாலஜியும், காதுகளுக்கு 4டி ஒலி டெக்னாலஜியும் அருமையாக இருக்கும். கிராபிக்ஸ், சண்டை காட்சிகள், வி.எப்.எக்ஸ் ஆகியவைதான் சவாலாக இருந்தது.

    படம் நவம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson

    2.0 படத்தின் டிரைலர்:

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படம் உலகம் முழுக்க சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாகவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar
    ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படம் வருகிற 29-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. மேலும் பல மொழிகளில் ‘டப்பிங்’ செய்தும் வெளியிடுகின்றனர். இந்த படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தமிழ் திரையுலக வரலாற்றில் புதிய சாதனை என்கின்றனர். இதற்கு முன்பு எந்த தமிழ் படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானது இல்லை. ஏற்கனவே 1991-ல் வெளியான ரஜினியின் தளபதி படம் வெளிநாடுகளில் முதல் தடவையாக 100 தியேட்டர்களில் வந்தது. 2007-ல் வெளியான சிவாஜி படம் 1000 தியேட்டர்களில் வெளியானது சாதனையாக பேசப்பட்டது.

    ‘2.0’ இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.600 கோடி செலவில் தயாரான நேரடி தமிழ் படம். இந்திய திரையுலகில் முதல் முறையாக 3டி கேமராவில் முழு படத்தையும் எடுத்துள்ளனர். ஹாலிவுட் படங்களை போல் ஐமேக்ஸ் தியேட்டர்களில் 2.0 படத்தை திரையிட ஒப்பந்தம் செய்துள்ளனர்.



    முதன் முறையாக 4டி ஒலி தொழில்நுட்பத்தில் இதன் ஒலி அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்திய படங்கள் அனைத்தையும் பாகுபலி, வசூலில் பின்னுக்கு தள்ளி உலக அளவில் பேசப்பட்டது. அதுபோல் 2.0 படமும் ஹாலிவுட் படங்களுக்கு இணையான இடத்தை எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. #SSLC #HSC #ExamTimeTable
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. #SSLC #HSC #ExamTimeTable

    2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ந் தேதி தொடங்கி 22-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அந்த அட்டவணை வருமாறு:-

    எஸ்.எஸ்.எல்.சி.

    10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்

    11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்

    13-ந் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்

    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்

    17-ந் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்

    18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்

    19-ந் தேதி (புதன்கிழமை) - அறிவியல்

    22-ந் தேதி (சனிக்கிழமை) - சமூக அறிவியல்

    பிளஸ்-1

    10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்

    11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

    12-ந் தேதி (புதன்கிழமை) - தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் அண்ட் டைட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி).

    17-ந் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி.

    19-ந் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செக்கரட்டரிஷிப், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

    22-ந் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்.

    பிளஸ்-2

    10-ந் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்

    11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

    12-ந் தேதி (புதன்கிழமை) - தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

    14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசியன் அண்ட் டைட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண்மை நடைமுறைகள், நர்சிங் (தொழிற்கல்வி), நர்சிங் (பொது).

    17-ந் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் மற்றும் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

    19-ந் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.

    22-ந் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

    மேற்சொன்ன அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளின் முதல் பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 
    சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் சென்சார் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.

    இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று உலகளவில் டிரெண்டானது.



    தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை படக்குழுவினர் வெளியிட்டு நவம்பர் 29ம் தேதி ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர். #2Point0 #Rajinikanth
    2.0 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இசை கோர்வையின் போது படத்தை பார்த்து தான் வியந்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். #2Point0 #ARRahman
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்‌‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ இந்த மாதம் 29-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த படத்தின் 3டி டிரைலர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த 3-ந் தேதி வெளியானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்தப் படத்திற்கு இசை அமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், ‘2.0’வின் ஆறாவது ரீல் காட்சிகளுக்கான மிக்சிங் வேலைகளை செய்து வருகையில், அந்த காட்சிகளை பார்த்து வியந்து அது குறித்து ட்விட் செய்துள்ளார். அதில், “2.0 படத்தின் 6-வது ரீலுக்கான இசையில் மிக்ஸ் செய்து கொண்டிருக்கிறேன். ஓ மை காட்... உணர்வுப்பூர்வமான சயின்ஸ் பிக்‌‌ஷர் சகாப்தம் என்பேன்” என்று பதிவிட்டிருக்கிறார். #2Point0 #Rajinikanth #ARRahman

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ படம் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்ராக்கர்ஸில் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. #2Point0 #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ரூ.543 கோடியில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

    சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    இந்த நிலையில், 2.0 படம் விரைவில் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகும், நவம்பர் மாத ரிலீஸ் என்று சினிமா படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.



    முன்னதாக விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் படத்தையும் படம் ரிலீஸான அன்றே வெளியிட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்தது. இந்த நிலையில், 2.0 படமும் இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth

    2.0 படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ரஜினிகாந்த், ஷங்கர் மற்றும் 2.0 படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #2Point0 #Rajinikanth #KamalHaasan
    ரஜினிகாந்தின் 2.0 பட டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டதையொட்டி அவருக்கும், இயக்குனர் சங்கருக்கும் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறி இருப்பதாவது:-

    ரஜினிகாந்த், ஷங்கர், அக்‌ஷய்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



    2.0 படம் ரஜினிகாந்தின் சாதனைக்கு மற்றொரு மைல்கல்லாக அமையும். இந்த படம் உருவாக சங்கர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும். ஷங்கரின் உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்த்துக்கள். 

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #2Point0 #Rajinikanth #KamalHaasan

    2.0 படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கரிடம் 3.0 படம் வருமா என்று கேட்டதற்கு வரவாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
    2.0 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ‌ஷங்கர் பேசிய தாவது:-

    எந்திரன் 2.0 படத்தின் பலமே ரஜினி தான். அவர் எது செய்தாலும் வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும், மாஸாகவும் இருக்கும். படப்பிடிப்பில் ஒரு நாள் அவருக்கு முழங்காலில் அடிப்பட்டது. அதுபற்றி அவர் எங்களிடம் சொல்லவே இல்லை. நாங்கள் வற்புறுத்தி பார்த்த போது தோல் கிழிந்திருந்தது. ஆனால் அதற்கு அவர் சிகிச்சை பெறாமல் தொடர்ந்து நடிப்பேன் என்று அடம் பிடித்தார். ஆனால் நாங்கள் அவரை வற்புறுத்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். அவருக்கு 4 தையல் போடப்பட்டது. அவர் இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார்.

    இப்படத்தில் ரஜினியை பல வடிவத்தில் பார்க்கலாம். எந்திரன் முதல் பாகத்தில் ரஜினியை வசிகரன், சிட்டி ஆகிய 2 வேடத்தில் பார்த்தோம். இப்படத்தில் வசிகரன், சிட்டி, ஜெயின்ட் சிட்டி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல வேடத்தில் அவரை பார்க்கலாம். அவர் 42 கிலோ எடையை சுமந்து நடித்துள்ளார்.

    கண்களுக்கு 3டி டெக்னாலஜியும், காதுகளுக்கு 4டி ஒலி டெக்னாலஜியும் அருமையாக இருக்கும். கிராபிக்ஸ், சண்டை காட்சிகள், வி.எப்.எக்ஸ் ஆகியவைதான் சவாலாக இருந்தது. எந்திரன் 3.0 வருமா? என்று கேட்கிறார்கள். அதற்காக சின்ன சின்ன ஐடியாக்கள் உள்ளன. அவை ஒன்றாக இணையும் போது கண்டிப்பாக அடுத்த பாகம் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும் போது, ‘நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதை 10 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டேன். நான் 40 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் எந்திரன் படத்தில் ரஜினி கடுமையாக உழைத்ததை பார்த்து ஓய்வு எண்ணத்தை கைவிட்டேன்’ என்றார்.

    வில்லனாக நடித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் கூறும்போது, ‘எந்திரன் 2.0 படத்தில் நடித்தது சந்தோ‌ஷமாக இருக்கிறது. ரஜினிதான் எனக்கு முன் மாதிரியாக இருக்கிறார்’ என்றார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth

    ×