search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
    X

    எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்

    2.0 படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கரிடம் 3.0 படம் வருமா என்று கேட்டதற்கு வரவாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
    2.0 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ‌ஷங்கர் பேசிய தாவது:-

    எந்திரன் 2.0 படத்தின் பலமே ரஜினி தான். அவர் எது செய்தாலும் வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும், மாஸாகவும் இருக்கும். படப்பிடிப்பில் ஒரு நாள் அவருக்கு முழங்காலில் அடிப்பட்டது. அதுபற்றி அவர் எங்களிடம் சொல்லவே இல்லை. நாங்கள் வற்புறுத்தி பார்த்த போது தோல் கிழிந்திருந்தது. ஆனால் அதற்கு அவர் சிகிச்சை பெறாமல் தொடர்ந்து நடிப்பேன் என்று அடம் பிடித்தார். ஆனால் நாங்கள் அவரை வற்புறுத்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். அவருக்கு 4 தையல் போடப்பட்டது. அவர் இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார்.

    இப்படத்தில் ரஜினியை பல வடிவத்தில் பார்க்கலாம். எந்திரன் முதல் பாகத்தில் ரஜினியை வசிகரன், சிட்டி ஆகிய 2 வேடத்தில் பார்த்தோம். இப்படத்தில் வசிகரன், சிட்டி, ஜெயின்ட் சிட்டி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல வேடத்தில் அவரை பார்க்கலாம். அவர் 42 கிலோ எடையை சுமந்து நடித்துள்ளார்.

    கண்களுக்கு 3டி டெக்னாலஜியும், காதுகளுக்கு 4டி ஒலி டெக்னாலஜியும் அருமையாக இருக்கும். கிராபிக்ஸ், சண்டை காட்சிகள், வி.எப்.எக்ஸ் ஆகியவைதான் சவாலாக இருந்தது. எந்திரன் 3.0 வருமா? என்று கேட்கிறார்கள். அதற்காக சின்ன சின்ன ஐடியாக்கள் உள்ளன. அவை ஒன்றாக இணையும் போது கண்டிப்பாக அடுத்த பாகம் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும் போது, ‘நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதை 10 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டேன். நான் 40 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் எந்திரன் படத்தில் ரஜினி கடுமையாக உழைத்ததை பார்த்து ஓய்வு எண்ணத்தை கைவிட்டேன்’ என்றார்.

    வில்லனாக நடித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் கூறும்போது, ‘எந்திரன் 2.0 படத்தில் நடித்தது சந்தோ‌ஷமாக இருக்கிறது. ரஜினிதான் எனக்கு முன் மாதிரியாக இருக்கிறார்’ என்றார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth

    Next Story
    ×