என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சட்டை"
- 75-வது சுதந்திர தினத்தையெட்டி அமுது பெருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது
- ஜூலை 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை குமரி மாவட்டம் முழுவதும் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு
நாகர்கோவில் :
75-வது சுதந்திர தினத்தையெட்டி அமுது பெருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை குமரி மாவட்டம் முழுவதும் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி நடந்தது.மேலும் கலெக்டர் அரவிந்த் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று வேட்டி அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.
பெண் ஊழியர்கள் பாரம்பரிய உடையான சேலை அணிந்து பணிக்கு வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடினார்கள். தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டது மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பி ரியா, ஆர்டிஓ சேதுராம லிங்கம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் பேசிய தாவது:-
75 -வது சுதந்திர தின விழா அமுது பெருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நாம் கடந்து வந்த பாதையை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஏற்கனவே சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை பற்றி நாம் நினைத்து பார்க்க வேண்டும். நமது நாடு முன்பு எவ்வளவு வளர்ச்சி பெற்று இருந்தது தற்போது எவ்வளவு வளர்ச்சி பெற்று உள்ளது என்பதை தெரிந்து இருக்க வேண்டும் .
பழைய நிலைமையை நினைத்துப் பார்க்க வேண்டும். இப்பொழுது உள்ள பிரச்சனைகளையும் நாம் தெரிந்து இருக்க வேண்டும். பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.தற்போது இங்கு நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் வருவாய்துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு உள்ளார்கள்.நம் மாவட்டத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து அந்தத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.
ஈரோடு:
கோவை-ஷீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விடுவதை உடனடியாக கைவிட வேண்டும். நாடு முழுவதும் விரைவு ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ராமாயண யாத்திரை என்ற பெயரில் டெல்லி-நேபால் ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி-க்கு விற்றதை வாபஸ் பெற வேண்டும். பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ரெயில்கள் என்ற பெயரில் 100 விரைவு ரெயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் ஈரோடு கிளை சார்பில் இன்று கறுப்பு தினமாக கடைபிடித்து ஈரோடு ரெயில்வே பணிமனையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வினோத்குமார், செயலாளர் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிர்வாகிகள் முனிச்சந்த் மீனா, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்