search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்களில் சிறப்பு தரிசனம்"

    • ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக பிறந்துள்ளது.
    • நள்ளிரவு முதலே கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

    சென்னை:

    2023-ம் ஆண்டு முடிந்து 2024-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக பிறந்துள்ளது. இதை யொட்டி கோவில்களில் மக்கள் புத்தாண்டு சிறப்பு தரிசனத்துக்காக அலை மோதினார்கள்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. புத்தாண்டில் இன்று சாமி தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு முதலே கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

    பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிக அள வில் காணப்பட்டனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசைக்கும் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. அதன்வழியாக சென்று பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து புத்தாண்டில் தங்கள் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேற மனமுருகி வேண்டிக் கொண்டனர்.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இந்த கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தி.நக ரில் உள்ள திருப்பதி தேவஸ் தான கோவிலில் தரிசனம் செய்ய நள்ளிரவு முதலே பக்தர்கள் திரண்டிருந்தனர். பெருமாளை தரிசித்து செல்வசெழிப்பான வாழ்க்கையை தருமாறு மனமுருகி பக்தர்கள் வேண்டிக் கொண்டனர்.

    கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக கோவிலின் முன்பு உள்ள திருமலைபிள்ளை சாலையில் தடுப்புகள் அமைத்து நீண்ட வரிசை ஏற்படுத்தப் பட்டிருந்தது. அதன் வழியாக சென்று பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.

    வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டை யொட்டி சாமி தரிசனத்துக்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரமாக முருகப்பெருமானுக்கு தங்க நாணய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனை பார்த்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முருகா... முருகா... என்று உச்சரித்தப்படியே மன முருகி வழிபட்டனர்.

    இதன் பின்னர் சந்தன காப்பு அலங்காரத்திலும் முருகன் காட்சி அளித்தார். அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையில் தங்க நாணய அலங்காரத்துடன் காட்சி அளித்த முருகனுக்கு பின்னர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.

    புத்தாண்டையொட்டி இன்று இரவு 9 மணிக்கு நடையை சாத்தாமல், பக்தர்கள் இருக்கும் வரையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக நிழல் தரும் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. கோயம்பேட்டில் உள்ள குருங்காலீஸ்வரர் கோவிலிலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோவிலிலும் நள்ளிரவில் இருந்தே திரண்டனர். பக்தர்கள் அதிகாலையில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். டிசம்பர் 31-ந்தேதியான நேற்று கந்தகோட்டம் முருகன் கோவில் திறக்கப்பட்ட நாளாகும். இதையொட்டி நேற்று மாலையில் கோவிலில் 108 காங்காபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வடிவுடையம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பாடி சிவன் கோவில், திருமுல்லை வாயலில் உள்ள பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு தரிசனம் செய்தார்கள்.

    பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பிரம்மமுகூர்த்த நேர மான அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றது.

    பூப்பந்தல் அமைத்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் திருவல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. திருவேற்காடு தேவி கருமா ரியம்மன் கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னையை அடுத்த ரங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், மடிப்பாக்கம் பாதாள விநாயகர் கோவில், கீழ்க்கட்டளை சக்திமுருகன் கோவில், லட்சுமிநாராயணா கோவில் ஆகிய ஆலயங்களில் இன்று புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கீழ்க்கட்டளை லட்சுமி நாராயணா கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்க ளுக்கு புதிய 5 ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது.

    புரசவைாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயம் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    ×