search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோதையாறு"

    • குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படு கிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.59 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று இரவு 638 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரக்கூ டிய நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று காலை 2000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. மதகுகள் வழியாக 452 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் உபரிநீரை அதி கரிக்கவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதேபோல் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 73.60 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை அணைக்கு 3000 கன அடியாக அதிகரித்தது. பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு-1 அணைக்கும் வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட் டுள்ளது.

    3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இதேபோல் மாம்பழத்துறையாறு அணையும் இன்று முழு கொள்ளள வான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    • கடல் மட்டத்தில் இருந்து 1340 மீட்டர் உயரத்தில் இருப்பதாக வனத்துறை தகவல்
    • திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கேரளா மற்றும் தமிழகத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக்கொம்பன் யானை, வனத்துறையினரின் தீவிர முயற்சிக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

    பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்ட அரிசிக்கொம்பன், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

    அதன்பிறகு காட்டுக்குள் சென்ற அரிசிக்கொம்பன், குடியிருப்பு பகுதிக்கு வரக்கூடும் என திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்தனர். இதற்காக அவர்கள் பல போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் அரிசிக் கொம்பன் யானை, காட்டை விட்டு வெளியே வர வாய்ப்புகள் இல்லை என வனத்துறையினர் உறுதிபட தெரிவித்தனர்.

    அதன் காதில் அணி விக்கப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம், யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் கூறினர். அப்பர் கோதையாறு பகுதியில் அரிசிக் கொம்பன் யானைக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைத்து வருவதால் அந்தப் பகுதியிலேயே யானை சுற்றி வருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டுள்ள அரிசிக் கொம்பன் யானை, கடந்த 13 நாட்களாக அப்பர் கோதையாறு வனத்தில் சுமார் 5 கி.மீட்டர் சுற்றள விலேயே சுற்றி வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள தாவர உணவுகளை உண்டு விட்டு, நல்ல ஓய்வும் எடுத்து வருகிறது. எனவே இனி அரிசிக்கொம்பன் யானை, குடியிருப்பு பகுதிக்கு வரும் என்ற அச்சம் தேவையில்லை.

    இருப்பினும் அதன் நட மாட்டத்தை களக்காடு மற்றும் கன்னியாகுமரி கோட்டங்களுக்கு உட்பட்ட வன கால்நடை அலுவ லர்கள், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள் என பல்வேறு தரப்பினர் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதில் அரிசிக்கொம்பன் யானை நல்ல ஆரோக்கி யத்துடன் இருப்பதும், காட்டுப்பகுதியில் உணவு உண்டு வருவதும் ரேடியோ காலர் சிக்னல்கள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது கடல் மட்டத்தில் இருந்து 1340 கி.மீட்டர் மேல் உள்ள கோதையாறு ஆற்றின் பிறப்பிடம் அருகே உள்ள வனப்பகுதியில் தான் அரிசிக்கொம்பன் உள்ளது என்றனர்.

    • மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்த இவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
    • தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு காட்டுப் பகுதியில் உள்ள கொலஞ்சிமடம் என்ற பகுதியில் வசிப்பவர் நிஷாந்த். இவருக்கு அபிஷா (வயது 19) என்ற மனைவி உள்ளார்.

    இவர்கள் மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்தவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள். முதல் குழந்தை பிரசவ வலியால் அவதிபட்டு வந்தார். இவரின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இரவு 9.54 மணிக்கு பேச்சிப்பாறை ஆம்புலன்சிற்கு போன் செய்தார்கள்.

    உடனடியாக பேச்சிப்பாறை 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று அபிஷாவை அழைத்து வரும் வழியில் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜீஸ் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார். அந்த பகுதியானது இருண்ட அடர்ந்த காட்டு பகுதியாகும். இரவில் மிருகங்கள் நடமாடும் பகுதி மற்றும் கரடுமுரடான பாதையாகவும் இருந்தது.

    அவசர கால மருத்துவ நுட்புநர் சுஜின்ராஜ் அந்தப் பெண்மணிக்கு பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். உடனே அந்தப் பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ சிகிச்சை அளித்து தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்தப் பணியை சிறப்பாக செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    ×