search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சிப்பாறை"

    • வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை, மாங்கமலை, முடவன்பொற்றை உட்பட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த வாக்குசாவடி மையத்திற்கு மலைவாழ் மக்கள் வாக்களிக்க அணையில் படகு மூலம் வந்து வாக்களிப்பது வழக்கம்.

    இதையடுத்து தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலிலும் மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து பேச்சிப்பாறையில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வந்ததுடன் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    • மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
    • 700 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 300 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கொட்டி தீர்த்து வந்த மழை தற்பொழுது சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப் பட்டுள் ளது. சிற்றாறு 1, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 3 அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீர் கோதையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்துக்கொட்டி வருகிறது. சிறுவர் பூங்காவை மூழ்க டித்து தண்ணீர் செல்வதால் அருவியில் குளிப்பதற்கு இன்று 7-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தடை விதிக்கப் பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மாம்பழத்துறையாறு அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணை நீர்மட்டம் 54.12 அடி எட்டி யதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீரை உபரிநீராக வெளியேற்றி வருகிறார்கள்.

    தற்பொழுது அணைக்கு 26 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 26 கன அடி தண்ணீரையும் உபரி நீராக திறந்து விடப்பட் டுள்ளது. அணையின் நீர்மட் டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.98 அடி யாக உள்ளது. அணைக்கு 485 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 106 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.29 அடியாக உள்ளது. அணைக்கு 555 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 300 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.07 அடியாக உள்ளது. அணைக்கு 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும், 536 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் தொ டர்ந்து முழு கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    அணையில் இருந்து நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கோதையாறு, குழித்துறை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
    • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறை யாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி உள்ளது. அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே அணைகள் நிரம்பி வழிவதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பேச்சிப் பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படுவதால் கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளனர். கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.97 அடியாக உள்ளது. அணைக்கு 529 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வும், 509 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.55 அடியாக உள்ளது. அணைக்கு 358 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 15.45 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 15.55 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ள ளவான 54.12 அடி நிரம்பி வழிகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டமும் கடந்த 10 நாட்களாக முழு கொள்ள ளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. 42.65 கன அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணையின் நீர்மட்டம் 8.30 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் மற்ற அணைகள் அனைத் தும் நிரம்பி வழியும் நிலையில் 2 மாதமாக மழை பெய்த பிறகு பொய்கை அணை நீர்மட்டம் உயராத நிலையில் உள்ளது.

    • பேச்சிப்பாறை 25 அடியை எட்டியது
    • நேற்று இரவு அணை பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு, தென்கிழக்கு என இரு பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட 69 சதவீதம் குறை வாகவே பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் சரிந்து காணப் பட்டது. பாசன குளங்களி லும் தண்ணீர் குறைவாகவே இருந்தது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் கடைமடை பகுதிகளில் கன்னி பூ சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.

    இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை நீடித்து வருவதைய டுத்து பாசன குளங்களும், அணைகளும் நிரம்பி வருகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று இரவு அணை பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்தது. இதைய டுத்து அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத்தொடங்கியது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2½ அடியும் பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 5 அடியும் உயர்ந்துள்ளது.

    ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாசன குளங்களும் நிரம்பி வருகின்றன. 600-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 25 அடியை எட்டியது. அணைக்கு 2409 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 330 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.40 அடியாக இருந்தது. அணைக்கு 1820 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.36 அடியாக உள்ளது. அணைக்கு 284 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.46 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 4.92 அடியாகவும் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19.50 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 67.2, பெருஞ்சாணி 50.8, சிற்றார் 1-40.4, சிற்றார் 2-26.8, பூதப்பாண்டி 32.6, களியல் 40.4, கன்னிமார் 42.2, கொட்டாரம் 28.4, குழித்துறை 44.8, மயிலாடி 36.2, நாகர்கோவில் 24.2, புத்தன் அணை 48.6, சுருளோடு 48.2, தக்கலை 37.2, குளச்சல் 34.6, இரணியல் 33, பாலமோர் 68.4, மாம்பழத்துறையாறு 35, திற்பரப்பு 47.6, ஆரல்வாய்மொழி 24.2, கோழிபோர்விளை 52.2, அடையாமடை 61.3, குருந்தன்கோடு 14.6, முள்ளங்கினாவிளை 41.6, ஆணைக்கிடங்கு 32.4, முக்கடல் 39.2.

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 783 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. நாகர்கோ வில், சுருளோடு, தக்கலை, அடையாமடை, முள்ளங்கினாவிளை கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    பாலமோரில் அதிகபட்ச மாக 9.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக 783 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் விடப் பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வரும் நிலையில் விவசாயி கள் கும்பப்பூ சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.35 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்றும் மழை நீடித்தது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அவ்வப்போது மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் இதமான குளிர்காற்று வீசியது. குமரி மேற்கு மாவட்ட பகுதியான தக்கலை, குலசேகரம், மார்த்தாண்டம், குழித்துறை பகுதிகளில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்தது. இரணியல், குளச்சல், மயிலாடி, கொட்டாரம், கன்னியாகுமரி பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 68.8 மல்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை இன்றும் ஒரு அடி உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 9 அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பாசன குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் கடைமடை பகுதியில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகும் அபாயத்தில் இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை விவசாயத்திற்கு கை கொடுக்கும் அளவில் உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.85 அடியாக இருந்தது. அணைக்கு 1007 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.35 அடியாக உள்ளது. அணைக்கு 552 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 68.8, பெருஞ்சாணி 19.2, சிற்றாறு 1-12.2, சிற்றார் 2-9.2, பூதப்பாண்டி 9.8, களியல் 10, கன்னிமார் 5.8, கொட்டாரம் 8.2, குழித்துறை 39, மயிலாடி 5.4, நாகர்கோவில் 8.2, புத்தன்அணை 17.6, சுருளோடு 33.6, தக்கலை 6.2, குளச்சல் 8.6, இரணியல் 23, பாலமோர் 37.2, மாம்பழத்துறையாறு 10, திற்பரப்பு 15.2, கோழிபோர்விளை 6.2, ஆனைகிடங்கு 7.2, அடையாமடை 8.1, முக்கடல் 6.2.

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக கொளுத்திய கடும் வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தன. இந்த நிலையில் முதல் போக சாகுபடியான கன்னிபூ சாகுபடிக்காக கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது.

    இதில் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் தூர்வாரப்படாததால் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கால்வாயை தூர்வாரி கடைவரம்பு பகுதி வரை தண்ணீர் தடங்கல் இன்றி வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது. இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால்வாய் மற்றும் பள்ளக்கால்வாய் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடந்து முடிந்தது.

    இதைத்தொடர்ந்து விவசாய பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொட்டாரம் பகுதியில் உள்ள புத்தனாறு கால்வாயில் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து கொட்டாரம் கடைவரம்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கன்னிபூ சாகுபடி விவசாயப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

    • அனந்தனார் சானலில் விடப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், குளத்து பாசனத்தை நம்பியும் விவசாயி கள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. தக்கலை, அருமநல்லூர், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை நேற்று திறக்கப்பட்டது.

    அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 50 கன அடியாக குறைக்கப்பட் டுள்ளது. பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டு அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் அனந்தனார் சானலில் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற சானல்களிலும் தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தேவை யான அளவு தண்ணீரை வெளியேற்றவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.62 அடி யாக இருந்தது. அணைக்கு 227 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.55 அடியாக இருந்தது. அணைக்கு 60 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது.

    தடுக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை

    கன்னியாகுமாரி, பிப். 26 -

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் அதை சுற்றி கோதையாறு, தக்கமலை, குற்றியாறு, மோதிரமலை போன்ற மலை பகுதிகள் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் வெயில் அதிக அளவில் உள்ளது. இதனால் வனப் பகுதிகளில் அடிக்கடி தீ பரவும் அபாயம் உள்ளது. காட்டு பகுதிகளில் விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. வெயில் காலங்களில் தீ அதிக அளவில் பரவி னால் விலை உயர்ந்த மரங்கள், வனவிலங்குகள் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

    மாவட்டத்தில் மொத்த முள்ள நிலப்பரப்பில் சுமார் 33 சதவிகிதம் காடுகள் உள்ள நிலையில், ஆண்டு தோறும் கோடைகாலத்தில் காடுகளில் ஆங்காங்கே தீ பிடிப்பதால் வன வளம் அழிவதோடு, வன விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப் படுகின்றன. மேலும் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களும், ரப்பர் கழக தொழிலாளர்களும் காட்டுத் தீயால் பாதிக்கப் படுகின்றனர்.

    காடுகளில் மனிதர்களா லும், வெப்பத்தின் காரண மாக மூங்கில் மற்றும் புதற்கள் எரிவதாலும் தீ ஏற்படுகிறது. காடுகளில் ஏற்படும் தீயை கண்காணிக்கும் வகையில் காடுகளில் தீ தடுப்பு காவலர்கள் போதிய அளவில் அரசால் நியமிக்கப்பட வில்லை எனவும், தீ தடுப்பு காடுகள் வெட்டப் டப்படவில்லை எனவும் பழங்குடி மக்கள் மற்றும் ரப்பர் கழக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மாவட்டத்தில் தற்போது காடுகளில் பல்வேறு இடங்களில் தீ ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கோதையாறு அருகே குற்றியாறு ராக் ஏரியா வனப்பகுதி மற்றும் ரப்பர் கழக பகுதிகளில் தீ ஏற்பட்டுள்ளது. காட்டுப் பகுதிகளில் உடனே சென்று தீயை அணைக்கும் வகையிலான தொழில் நுட்பங்கள் இல்லாத நிலையில் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயில் நிலவி வரும் நிலையில், வனப்பகுதிகள் மற்றும் ரப்பர் கழக பகுதிகளில் பல இடங்களில் தீ பிடித்து வருகிறது. குறிப்பாக காட்டுக்குள் ஏற்பட்டுள்ள தீ ரப்பர் கழக பகுதிகளில் பரவி ரப்பர் மரங்கள் கருகி வருகின்றன.

    இதே போன்று காட்டுக்குள் ஏற்பட்டு வரும் தீ காரணமாக விலை உயர்ந்த மரங்கள் கருகி வருவதுடன், வன விலங்குகளும் அச்சுறுத் தலுக்குள்ளாகி உள்ளன. இதே போன்று பழங்குடி மக்களும் அச்சப்பட்ட நிலையில் உள்ளனர். எனவே வனத்துறையினர் காட்டுக்குள் தீ ஏற்படாத வகையில் போதிய தீ தடுப்பு காவலர்களை நியமித்து தீ ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். மேலும் தனியார் வனப்பகுதி எல்கைகளில் தீ தடுப்பு கோடுகள் (பயர் லைன்ஸ்) வெட்ட வேண்டும். மேலும் தீ ஏற்பட்டால் அதை தடுக்க போதிய கருவிகளையும் கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தோட்டக்கலை துறை, அலுவலர்கள் பணி யாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    • பண்ணை பராமரிப்பு குறித்த அறிவுரைகளை வழங்கினார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் அரசு தோட்டக்கலை பண்ணை பேச்சிப்பாறை யில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர். பிருந்தா தேவி தோட்டக்கலை பண்ணை பணிகளை ஆய்வு மேற்கொண்டு பண்ணை பராமரிப்பு குறித்த அறிவு ரைகளை வழங்கினார்.

    இந்த ஆய்வில் டாக்டர். பிருந்தாதேவி கூறியதாவது:-

    பண்ணை பகுதிகளில் நெகிழி குப்பைகள் இல்லா வண்ணம் அனைவரும் பராமரிக்க வேண்டும். பண்ணையில் தாய் செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டு தினமும் பராமரிக்க வேண்டும். இலவங்க பட்டை மரங்களை பராமரிக்க முன்னுரிமை கொடுத்து அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும். தேன் பதப்படுத்தும் அலகி னை பண்ணையிலும் விவசாயிகளும் தொடர்ந்து பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றும் தெரி வித்தார்.

    இந்த ஆய்வில் டான்ஹோடா செயற்பொறியாளர் பாலாஜி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருள்) மு.வ சரண்யா, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆஸ்லின் ஜோஷி, தோட்டக்கலை உதவி இயக்குநர் திலீப், அருண்குமார், நந்தினி மற்றும் தோட்டக்கலை துறை, அலுவலர்கள் பணி யாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கரையோர பொதுமக்களுக்கு எச்சரிக்கை
    • குமரி மாவட்டம் முழுவதும் மழை நீடிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது.இன்று காலையிலும் ஒரு சில இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. பேச்சிப்பாறை அணை பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.அங்கு அதிகபட்சமாக 57.8 மில்லிமிட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதி களிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.அணைக்கு வரக்கூடிய தண்ணீ ருக்கு ஏற்ப அணையிலி ருந்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை ஆறு, பரளியாறு கோதை யாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகி றார்கள். திற்பரப்பு அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப் பட்டு உள்ளது.

    பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று காலை 42.27 அடியாக உள்ளது. அணைக்கு 1437 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1066 கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.70 அடியாக உள்ளது. அணைக்கு 842 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 1864 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 13.22 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.93 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.20 அடியாக உள்ளது.

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் ழுழுவதும் 750 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகிறார்கள். தெரிசனங்கோப்பு, அரும நல்லூர், பூதப்பாண்டி சுசீந்திரம் பகுதிகளில் கும்பப்பூ சாகுபடி நடந்து வருகிறது.

    • மழை குறைந்ததையடுத்து நடவடிக்கை
    • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. கோழிபோர்விளை, குருந்தன்கோடு, ஆணைக்கிடங்கு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    அணை பகுதிகளில் மழை சற்று குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு 1084 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.60 அடியாக உள்ளது.

    அணைக்கு 703 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 381 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும் 1084 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.31 அடியாக உள்ளது.

    அணைக்கு 401 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது .பேச்சி பாறை அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆறு குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் இன்றும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×