search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு
    X

    குமரியில் மழை நீடிப்பு

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 783 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. நாகர்கோ வில், சுருளோடு, தக்கலை, அடையாமடை, முள்ளங்கினாவிளை கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    பாலமோரில் அதிகபட்ச மாக 9.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக 783 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் விடப் பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வரும் நிலையில் விவசாயி கள் கும்பப்பூ சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×