search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை வழக்கில்"

    • வடமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.
    • இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    பரமத்திவேலூர்:

    அசாம் மாநிலத்தை சேர்ந்த வர் சிம்பு ஜாபர்(26). இவர் வடமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.

    கொலை

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுதொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் அளித்த

    புகாரின் பேரில், பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கமிஷன் பிரச்சினை

    இதில் கோழிப்பண்ணை களுக்கு கூலி ஆட்களை அனுப்பி வைப்பத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரஜ்மன் (21), சாம்லுராம் (21) ஆகியோருக்கும், சிம்பு ஜாபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்து. மேலும் கமிஷன் பிரச்சினையில் இருவரும் சிம்பு ஜாபரை படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அறிவழகன் வாதாடி வந்தார்.

    ஆயுள்தண்டனை

    இந்த நிலையில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் ரஜ்மன், சாம்லுராம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இருவரும் ேநற்று இரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனிடையே வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டினார்.

    • கொலை செய்தமைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிபதி வழங்கினார்.
    • 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முன் விரோதம் காரணமாக சதீஷ்குமார் வேலை செய்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் சதிஷ்குமாரை வெட்டி கொலை செய்தனர்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.

    இந்த வழக்கானது பவானி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி லதா தீர்ப்பு கூறினார்.

    இதில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் (45), ஆனந்த பிரபு (37), சூரியகுமார் (27) மற்றும் வெங்கடேஷ்குமார் (38) ஆகிய 4 பேருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    மேலும் வீடு புகுந்து அத்துமீறி கொலை செய்த மைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிபதி வழங்கினார். இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

    • அப்போது 5 பேர் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற நபர்களை விரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
    • கைதா னவர்களில் வேல்முருகன், பாண்டியராஜன், குட்டி என்கிற செந்தில் நாகராஜன் ஆகிய 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    கருங்கல்பாளையம் நெரிக்கல்மேடு பகுதியில் ஒரு கும்பல் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டியது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது 5 பேர் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற நபர்களை விரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக கருங்கல்பாளையம் சிந்தன்நகரை சேர்ந்த வேல்முருகன் (28), ராஜகோபால் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (30), அதே பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற செந்தில் நாகராஜன் (36) காவேரி ரோட்டை சேர்ந்த மணிகண்டன்(26), சொக்காய் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரகு (24) என தெரிய வந்தது.

    இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கைதா னவர்களில் வேல்முருகன், பாண்டியராஜன், குட்டி என்கிற செந்தில் நாகராஜன் ஆகிய 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

    ×