search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழிகள்"

    • பாதாள சாக்கடை-கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டி மூடப்படாத குழிகளால் தொடரும் விபத்துகள் அதிகரித்துள்ளது.
    • சீரமைப்பு பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் முழுகவனம் செலுத்த வேண்டும் என் பதே ராஜபாளையம் வாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வளர்ச்சியில் நாளுக்கு நாள் முன்னேறி வரும் நிலையில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறைந்து கொண்டே செல்கிறது. நக ரின் நுழைவு வாயிலான பஞ்சு மார்க்கெட் முதல் யூனியன் அலுவலகம் வரை மிக மோசமான நிலையில் உள்ள சாலையால் நாள் தோறும் நடக்கும் விபத்துகள் தவிர்க்க முடியாததாகி விட்டது.

    அதிலும் ஒரு மணி நேரம் மழை பெய்துவிட்டால் சாலை எது, சாக்கடை எது என்று தெரியாத அளவுக்கு மூழ்கிவிடுகிறது. பாதசாரி கள் முதல் வாகனங்களில் பயணம் செய்வோர் திக்கு தெரியாமல் தடுமாறும் நிலை இன்றளவும் தொடரத் தான் செய்கிறது.

    இதனை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தை வலியுறுத்தி ராஜபாளையம் நகர் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று (21-ந்தேதி) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் உண்ணாவிரதப் போராட் டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு அனுமதி வழங்கப் படாத நிலையில் உண்ணா விரதம் இருக்க முயன்ற 17 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில அடைத்து வைத்தனர். கைதானவர்கள் அங்கும் தங்களது போராட் டத்தை தொடர்ந்தனர்.

    ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை, தாமிரப ரணி கூட்டு குடிநீர் திட்டப்ப ணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நடைபெற்ற தென்காசி சாலை கடந்த இரண்டு ஆண்டு காலமாக போக்கு வரத்துக்கு லாயக்கற்று மிக மோசமான நிலையில் உள் ளது. இச்சாலையில் பய ணித்த பலரும் விபத்துக்குள் ளாகி உள்ளனர். கடந்த ஆண்டு ஒரு மாணவன் உயி ரிழந்ததுடன், பலருக்கு கை, கால் முறிவு, முதுகுத் தண்டு வட பாதிப்பும் ஏற்பட்டுள் ளது.

    எனவே இந்த சாலையை சரிசெய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளை சமூக ஆர்வலர்கள் கூட்ட மைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர். அதன் அடிப்படையில் இச்சா லையை ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் இந்தச் சாலை போக்குவரத் துக்கு பயன்பாடு உள்ள வகையில் நன்றாக உள்ளது என சான்று அளித்தது கூட்டமைப்பு நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத் துள்ளது.

    இந்நிலையில் தான் 12 மணி நேரம் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு கடந்த 11 ஆம் தேதி அனுமதி கேட்ட நிலையில் நேற்று 20.11.23 இரவு 11 மணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது. இரண்டு வருட காலமாக மக்கள் துன்பத்திற்கு முடிவு கிடைக்காத நிலையில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டால் அதை தடுக்கக்கூடிய வகையில் காவல்துறைக்கு நிர்பந்தம் இருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது.

    மக்களுடைய உணர்வு களை வெளிப்படுத்தும் வித மாக தடையை மீறி ராஜபா ளையம் நகர் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் ஜவகர் மைதானத்தில் உண்ணா விரதத்தை தொடங்கினர். இதையடுத்து போராட்டத் தில் ஈடுபட்ட ஒருங்கிணைப் பாளர்கள் மாரியப்பன், ராமச்சந்திர ராஜா, மணி–கண்டன் தலைமையில் பங்கேற்றோர் கைதானார் கள்.

    இந்த போராட்டம் நடை பெற்ற ஒரு மணி நேரத்திற் குள் சாலைகளை (பேட்ச் ஒர்க்) சரி செய்யும் பணி களை தமிழக நெடுஞ்சா லைத்துறை துவக்கியுள்ளது. நிரந்தரமாக பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமென் றால் பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர் கோவில் வரை புதிதாக சாலை அமைக்கப்பட வேண்டும். எனவே அதற்கான முயற்சி களை தேசிய நெடுஞ்சா லைத்துறை ஆணையம் செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை விரை வில் அறிவிப்போம் என சமூக ஆர்வலர்கள் கூட்ட மைப்பினர் தெரிவித்தனர்.

    நேற்று மதியம் டயருக்கு பஞ்சர் ஒட்டியது போல தென்காசி செல்லும் மெயின் ரோடான தேசிய நெ(கொடு)ஞ்சாலையில் பேட்ஜ் ஒர்க் செய்து முடிக் கப்பட்டது. இரவு எட்டு மணிக்கு மேல் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் ஒட்டுப்போட்ட சாலை பணி கள் ஒட்டுமொத்தமாக கரைந்து காணாமல் போனது. எனவே இனிமே லும் இதுபோன்ற மக்களை ஆறுதல் படுத்தும் பணிகளை கைவிட்டு சாலை சீரமைப்பு பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் முழுகவனம் செலுத்த வேண்டும் என் பதே ராஜபாளையம் வாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையின் இருபுறமும் குழி தோண்டி 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.
    • பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

    வீரபாண்டி :

    திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் வித்தியாலையம் பேருந்து நிறுத்தத்தின் இருபுறத்திலிருந்து சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையின் இருபுறமும் குழி தோண்டி 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. தோண்டிய பின்பு எந்த பணியும் நடைபெறவில்லை. சாலையின் இருபுறமும் குடிநீர் குழாயும் கேபிள் வயர்களும் செல்லுகின்றன.

    சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் முன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குடிநீர் வாரிய அதிகாரிகளிடமும் . மாநகராட்சி அதிகாரிகளிடமும் எந்த தகவலும் தெரிவிக்காமல் விரிவாக்கம் பணிக்காக குழி தோண்டிவிடுகிறார்கள். இதனால் குடிநீர் குழாய் உடைந்துவிடுகிறது. கேபிள் வயர்களும் துண்டிக்கப்படுகின்றன. பொதுமக்கள் புகார் செய்த பின்பு வரும் அதிகாரிகள் குடிநீர் குழாயை சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட நாட்களும் ,அதன் பின்பு கேபிள் வயர்களை சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட நாட்களும் எடுத்துக்கொள்கின்றார்கள். இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். மேலும் இருபுறமும் பள்ளி கூடம் இருக்கிறது. பேருந்துக்கு செல்லும் குழந்தைகள் குழியில் விழுந்து விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் இரவு நேரத்தில் வாகன ஒட்டிகளும் இந்த குழியில் விழுந்து விபத்து ஏற்படுகின்றன. . இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது அது சம்பந்தமான துறை அதிகாரிகளிடம் தெரிவித்து பணியை தொடங்க செய்யவேண்டும்.ஆனால் நெடுஞ்சாலை துறை அப்படி செய்வதில்லை. மேலும் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் பணிகளை மேற்கொள்ளும் போது விரைந்து முடிக்க வேண்டும்.இதனை வலியுறுத்தி வித்தியாலையம் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளார்கள். எனவே மாவட்ட கலெக்டர் இதில் உடனடியாக தலையீட்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×