search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசேகரம் அருகே"

    • அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
    • அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவட்டார்:

    குலசேகரம் அருகே உள்ள ஆனைக்கூட்டுவிளை கிளக்கம்பாகம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் அஜில் ராஜ் (வயது 38). இவருக்கு அனுஜா (26) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில மாதங்களாக இவருக்கும், மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதன் காரணமாக அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அஜில் ராஜ் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதுவுடன் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரைகளை தின்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • இவரது மனைவி தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே சேக்கல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரெஞ்சிதா (27). இவர் தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சதீசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதியதாக வீடு ஒன்று கட்டினார். இதற்கு பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் மன முடைந்த நிலை யில் அவர் இருந்து வந்தார்.

    இந்த நிலை யில் நேற்று சதீஷ் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையின் போது சதீஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×