search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுவன"

    • தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • இவரது மனைவி தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே சேக்கல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரெஞ்சிதா (27). இவர் தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சதீசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதியதாக வீடு ஒன்று கட்டினார். இதற்கு பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் மன முடைந்த நிலை யில் அவர் இருந்து வந்தார்.

    இந்த நிலை யில் நேற்று சதீஷ் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையின் போது சதீஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சேலம் நெத்திமேட்டில் கந்து வட்டி கேட்டு மிரட்டல் நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு கே.பி. கரட்டை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 45). ஜவ்வரிசி வியாபாரியான இவர் நேற்று அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    நான் தொழிலை மேம்படுத்த நெத்திமேட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை அணுகினேன். அப்போது நிதி நிறுவன உரிமையாளரான ராஜவேல் பாபுவிடம் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.2 லட்சம் ரூபாயை கந்து வட்டிக்கு வாங்கினேன், மாதம் 26 ஆயிரம் வீதம் 10 தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்தினேன்.

    பணத்தை பெற்ற அவர் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு வந்தார். தர மறுத்த நிலையில் கடந்த 9-ந் தேதி மிரட்ட ல் விடுத்தார். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கூறி இருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக ராஜவேல்பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×